being created

பிரபஞ்சன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 101: Line 101:
== மறைவு ==
== மறைவு ==


டிசம்பர் 21, 2018ல் மறைந்தார்.பாண்டிச்சேரி அரசு, அரசு மரியாதையுடன் அவரை நல்லடக்கம் செய்தது.  
டிசம்பர் 21, 2018ல் மறைந்தார். பாண்டிச்சேரி அரசு, அரசு மரியாதையுடன் அவரை நல்லடக்கம் செய்தது.


== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 00:59, 31 January 2022


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


Work in progress by User:Muthu_kalimuthu

பிரபஞ்சன்
பிரபஞ்சன்

பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றியவர். யதார்த்தவாத முற்போக்கு பாணியின் முக்கியமான சிறுகதையாசிரியர்களில் ஒருவர். தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது 1995 ஆம் ஆண்டு பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு, கல்வி

பிரபஞ்சன் பிறந்த ஊர் புதுச்சேரி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

இவரது மனைவியின் பெயர் பிரமிளா ராணி. மூன்று மகன்கள் உள்ளனர். சென்னையிலும் புதுச்சேரியிலும் வசித்து வந்தார். சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

பங்களிப்பு

இதழியல்

1980-1982ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987ல் குமுதம் வார இதழிலும், 1989-1990ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். பின்னர், முழுநேர எழுத்தாளரானார்.

இலக்கியம்

1961ல், இவரது முதல் சிறுகதை ‘என்ன உலகமடா’ பரணி என்ற இதழில் வெளியானது. 46 புத்தகங்களுக்கும் கூடுதலாக எழுதியுள்ளார்.

1995ல் இவரது வரலாற்று நாவல் ‘வானம் வசப்படும்’ தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது.

இவரது படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாடகமான ‘முட்டை’ தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது.

இவரது சிறுகதைத் தொகுப்பான ‘நேற்று மனிதர்கள்’ பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக உள்ளது. புதுச்சேரியின் சுதந்திர வரலாற்றை `கண்ணீரால் காப்போம்' எனும் நூலில் உணர்வுபூர்வமாய் விளக்கியிருப்பார்.

மற்ற எழுத்தாளர்களின் கதைகளையும் வெகுவாய் பாராட்டி கதை மழை எனும் நூல் எழுதியுள்ளார். பிரபஞ்சனின் மகாபாரதம் புதிய வாசகர்களை உருவாக்கியது.

படைப்புகள்

நாவல்கள்
  • வானம் வசப்படும்
  • மகாநதி
  • மானுடம் வெல்லும்
  • சந்தியா
  • காகித மனிதர்கள்
  • கண்ணீரால் காப்போம்
  • பெண்மை வெல்க
  • பதவி
  • ஈரோடு தமிழர் உயிரோடு
  • அப்பாவின் வேஷ்டி
  • முதல் மழை துளி
  • மகாபாரத மாந்தர்கள்
சிறுகதை தொகுப்புகள்
  • நேற்று மனிதர்கள்
  • விட்டு விடுதலையாகி
  • இருட்டு வாசல்
  • ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்
குறுநாவல்கள்
  • ஆண்களும் பெண்களும்
நாடகங்கள்
  • முட்டை
  • அகல்யா
மொழிபெயர்ப்புகள்
கட்டுரைகள்
  • மயிலிறகு குட்டி போட்டது
  • அப்பாவின் வேஷ்டி
  • தாழப்பறக்காத பரத்தையர் கொடி
நேர்காணல்கள்

விருதுகளும் பரிசுகளும்

  • சாகித்திய அகாதமி விருது (1995)
  • பாரதிய பாஷா பரிஷத் விருது
  • கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது - மகாநதி
  • இலக்கியச் சிந்தனை விருது - மானுடம் வெல்லும்
  • சி. பா. ஆதித்தனார் விருது - சந்தியா
  • தமிழக அரசின் பரிசு - நேற்று மனிதர்கள்
  • தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு - ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்

இலக்கிய முக்கியத்துவம்

எழுத்தாளர்பி ஜெயமோகன் " பிரபஞ்சன் முறையாக தமிழ்படித்து வந்தவர். மு.வரதராசனார், நா.பார்த்தசாரதியை ஆதர்சமாகக் கொண்டு தொடங்கியவர். அந்த பாதிப்புகளிலிருந்து மீள மிகப்பெரிய ஒரு தன்மாற்றம் தேவை. ஆடைகளை மட்டும் அல்ல, தோலையும் உடலையும் உரித்துபோட்டுவிட்டு மீளவேண்டும்.

அந்த பாதிப்பு கதாபாத்திரங்களை கருத்துமாதிரிகளாகவும்ம்  உரையாடல்களை கட்டுரையின் பகுதிகளாகவும் ஆக்கும் வழக்கத்தை அவருக்கு அளித்தது. இறுதிவரை அவரிடம் அந்த அம்சம் இருந்தது.

அதேசமயம் அவரிடமிருந்த தனிமனித ஒழுக்கம், நேர்த்தியான தோற்றம், பண்பான அணுகுமுறை போன்ற பல நற்பண்புகளும் அந்த முன்னோடிகளிடமிருந்து கிடைத்தவையே. பிரபஞ்சனில் நா.பாவின் செல்வாக்கு மிக அதிகம். அவர் தன்னை நா.பாவின் ஒரு கதைநாயகனாகவே பாவித்துக்கொண்டார். குறிஞ்சித்தேன் நாவலில் வரும் அரவிந்தனாக. இரண்டாவது செல்வாக்கு அவர் எழுதவந்தபின் உருவானது. அவர் ஜெயகாந்தனால் கவரப்பட்டார். ஜெயகாந்தனாக ஆக முனைந்தார். எழுத்திலும் தோற்றத்திலும். அதன்பொருட்டு இடதுசாரி கருத்துக்களுக்குள் சென்றார். அக்கருத்துக்கள் அவரை இரும்புச்சட்டை போல இறுதிவரை கட்டிவைத்திருந்தன. படைப்பாளியாக செயல்படவிடாது கவ்வியிருந்தன [ஜெயகந்தனால் தனிப்பட்ட முறையில் புண்படுத்தப்பட்டதாக சொல்லியிருக்கிறார். அதன்பின் ஜெயகாந்தன் மீதான ஈடுபாட்டை இழந்தார்]

அவருள் இருந்த ஆழ்ந்த இன்னொரு செல்வாக்கு தி.ஜானகிராமன். தஞ்சையில் படித்தகாலத்தில் அவர் சங்கீதம், சீவல், காபி என ஒரு ஜானகிராம அழகியலை அடைந்தார். ஆனால் அதற்குள் ஆழ்ந்துசெல்ல அவரால் இயலவில்லை. அதற்கு அன்று வெகுஜன மதிப்பு இருக்கவில்லை. அது நிலப்பிரபுத்துவப் பண்பாடாகவே கருதப்பட்டது. ஆகவே அதை அவர் மறைத்துக்கொண்டார். சில கதைகளில் மட்டுமே அது வெளிப்பட்டது.

தன் எல்லைகளைக் கடந்து தன் கனவுகளை அடையும் எழுத்தை உருவாக்க அவருக்கு சாத்தியப்படவில்லை. அதற்குக் காரணம் அவர் எழுத்தையே வாழ்வாக தெரிவுசெய்துகொண்டது." என்று குறிப்பிடுகிறார்.

மறைவு

டிசம்பர் 21, 2018ல் மறைந்தார். பாண்டிச்சேரி அரசு, அரசு மரியாதையுடன் அவரை நல்லடக்கம் செய்தது.

உசாத்துணை