being created

பின்தொடரும் நிழலின் குரல் (நாவல்)

From Tamil Wiki
Revision as of 06:00, 11 March 2022 by Dr.P.Saravanan (talk | contribs)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

பின்தொடரும் நிழலின் குரல் (நாவல்)

பின்தொடரும் நிழலின் குரல் (1999) அரசியல் நாவல். இதனை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். கம்யூனிச லட்சியவாதம் புரட்சி என்ற பெயரில் கண்மூடித்தனமாகச் செயல்பட்டு எண்ணிலடங்கா உயிர்களைப் பலிவாங்கியது குறித்து அறத்தின் சார்பில் நின்று நியாயம் கேட்கும் நாவல் இது. இந்த நாவல் 12 அத்யாயங்களையும் அவற்றுக்குள் 56 உட்பிரிவு அத்யாயங்களையும் கொண்டு மொத்தம் 723 பக்கங்களை உடையது. இந்த நாவலின் நடை உரையாடல்களின் தொகுப்பாகவும் கட்டுரைகள், கதைகள், கடிதங்கள், நாடகங்கள், குறிப்புகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகவும் உள்ளது. அவை அனைத்தும் இந்த நாவலின் கதையோட்டத்துக்கு நியாயம் செய்யும் வகையிலேயே அமைந்துள்ளன.

பதிப்பு

அச்சுப் பதிப்பு

தமிழினி பதிப்பகம் பின்தொடரும் நிழலின் குரல் நாவலை நவம்பர் 1999இல் அச்சுப்பதிப்பாக வெளியிட்டது. பின்னர் மறுபதிப்பாக 2015இல் வெளியிட்டது. விஷ்ணுபுரம் பதிப்பகம் இந்த நாவலை 2022 இல் மீண்டும் பதிப்பித்தது.

இணையப் பதிப்பு

பின்தொடரும் நிழலின் குரல் நாவல் ஆகஸ்ட் 8, 2021இல் இணையப் பதிப்பாக வெளிவந்தது.

ஆசிரியர்

பின்தொடரும் நிழலின் குரல் நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர். உலகின் மிகப் பெரிய நாவலான வெண்முரசினை எழுதியவர். உலக இலக்கியப் பெரும்பரப்பில் லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாய்க்கு நிகரானவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி ஆகிய மாபெரும் ஆளுமைகள் வரிசையில் வைத்துச் சிறப்பிக்கப்படுபவர். இவரின் எழுத்துக்களத்தின் முதன்மைக் கருக்களாக ஆன்மிகத் தேடலும் அற உசாவலும் உள்ளன.

கதைச்சுருக்கம்

அருணாச்சலம் ரப்பர் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் துணைத்தலைவர். கே.கே. மாதவன் நாயர் கட்சித் தலைவர். கட்சி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதால் மாதவன் நாயரைப் புறக்கணிக்கிறது. அருணாச்சலம் கட்சியின் தலைவராகிறார். அருணாச்சலத்துக்கு வீரபத்ரபிள்ளை எழுதிய கதைகள், கட்டுரைகள், நாடககங்கள், குறிப்புகள், கவிதைகள் போன்றன கிடைக்கின்றன. அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பது மட்டுமின்றி அவர் கட்சி வரலாற்றிலிருந்தே அழிக்கப்பட்டவர் என்பது அருணாச்சலத்துக்குத் தெரியவருகிறது. ஏன் கட்சி அவரை நீக்கியது? எனக் காரணம் தேடுகிறார் அருணாச்சலம். அப்போது கம்யூனிஸ வரலாற்றில் புகாரின் என்பவரும் இதுபோலவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் வரலாற்றிலிருந்தே அழிக்கப்பட்டதும் குறித்து அறிகிறார். அவரைப் பற்றிய மிகுதியாகச் சிந்தித்ததாலும் அவரை மீண்டும் கட்சிவரலாற்றின் மேடைக்குக் கொண்டுவர வீரபத்ரபிள்ளை முயன்றமையுமே வீரபத்ரபிள்ளையைக் கட்சி நீங்கியது என்றும் கட்சிவரலாற்றிலிருந்து அழித்தது ங்க அவரின் எழுத்துகள் அருணாச்சலத்தை அலைகழித்து அவனையும் கட்சியிலிருந்து விரட்டுகின்றது.

அருணாச்சலம், வீரபத்ர பிள்ளையை கட்சி புறக்கணித்ததை ஜீரணிக்க முடியாமல் தவிக்கின்றான். ஒன்று இயல்பாக ஒருவனுக்கு தோன்றும் உணர்வு, அநீதி இழைக்கப்பட்ட மனிதனிடம் வரும் உணர்வு. இரண்டாவது அவனை கட்சியுடன் பிணைத்து கொண்டு, கட்சியின் பிரதிநிதியாக தன்னை நினைத்து கொள்வதால் வரும் குற்ற உணர்வு, அதோடு கே.கே.எம்ஐ கட்சியிலிருந்து விலக்கியதன் காரணமாக வரும் குற்ற உணர்வு. இவை அனைத்தும் அவனை மனப்பிறழ்வில் தள்ளுகின்றது. ஒரு கட்டத்தில் தன்னை வீரபத்ரபிள்ளையாகவே நினைக்க ஆரம்பிக்கின்றான்.

வீரபத்திரபிள்ளையை விரட்டியது அதே போல் வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்ட புகாரின். புகாரின் நிழல் வீரபத்திர பிள்ளையையும், வீரபத்திர பிள்ளையின் நிழல் அருணாச்சலத்தையும் பின் தொடர்ந்து அவர்களை மனம் பிறழ செய்கின்றது.

கதைமாந்தர்கள்

முதன்மைக் கதைமாந்தர்கள்
  • அருணாச்சலம் -
  • வீரபத்ரபிள்ளை -
துணைமைக் கதைமாந்தர்கள்
  • நாகம்மை - அருணாச்சலத்தின் மனைவி
  • கௌரி - அருணாச்சலத்தின் மகள்
  • கெ.கெ. மாதவன் நாயர் -
  • நாராயணன் -
  • கோலப்பன் -
  • பாஸ்கரன் -
  • வீரபத்ரபிள்ளை - பாஸ்கரனின் தந்தை
  • இசக்கியம்மை - வீரபத்ரபிள்ளையின் மனைவி
  • மாசிலாமணி -
  • தீர்த்தமலை -
  • கதிர் -
  • ரவீந்திரன் -
  • அய்யப்பன் பிள்ளை - சமையற்காரர்
  • ஆறுமுகப்பிள்ளை -
  • எஸ்.எம். ராமசாமி -
  • ஜெயமோகன் -
  • கே. என். ஜோணி -
  • ஆர். நீலகண்ட பிள்ளை -
  • நம்பிராஜன் -
  • எசிலி - கெ.கே. மாதவன் நாயரின் துணைவி
  • ஆஸ்டின் - கெ.கே. மாதவன் நாயரின் மகன்
  • ராமசுந்தரம் -
  • கெ. ஆர். எஸ். -
  • சாமிக்கண்ணு -
  • பாலன் -
  • தோழர் கந்தசாமி -
  • கரியமால் -
  • செம்புலன் -
நிழற்கதைமாந்தர்கள்
  • நிகலாய் இவானோவிச் புகாரின்
  • அன்னா மிகாய்லோவ்னா லாறினா
  • ஜோசப் விசாரி யோவிச் ஸ்டாலின்



இலக்கிய மதிப்பீடு

உசாத்துணை

https://pinthodarumnizalinkural.blogspot.com/

இணைப்புகள்

https://www.jeyamohan.in/?s=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D


[[Category:Tamil Content]]