பந்தணைநல்லூர் குருஸ்வாமி பிள்ளை
From Tamil Wiki
Revision as of 18:22, 5 March 2022 by Subhasrees (talk | contribs) (பந்தணைநல்லூர் குருஸ்வாமி பிள்ளை)
பந்தணைநல்லூர் குருஸ்வாமி பிள்ளை (1875-1963) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
இளமை, கல்வி
குருஸ்வாமி பிள்ளை தஞ்சாவூர் மாவட்டம் பந்தணைநல்லூரில் விஸ்வநாத பிள்ளை - வீரலக்ஷ்மி அம்மாள் இணையருக்கு 1875ஆம் ஆண்டு பிறந்தார்.
ஆறு வயதிலேயே இவருக்கு இருந்த தாள லய ஞானத்தைக் கண்டு தவில் கற்க வேண்டுமான என கேட்ட தந்தையிடம் நாதஸ்வரத்தையே தேர்ந்தெடுத்தார் குருஸ்வாமி. முதலில் தந்தை விஸ்வநாத பிள்ளையிடமும் பின்னர் ’ஒத்துமூச்சு’க்குப் புகழ்பெற்ற பந்தணைநல்லூர் அய்யாக்கண்ணுப் பிள்ளையிடமும் கற்றார். ஆறு ஆண்டுகளில் தனிக் கச்சேரி நிகழ்த்தும் திறன் பெற்றார்.
தனிவாழ்க்கை
குருஸ்வாமி பிள்ளை தில்லையாடியைச் சேர்ந்த ஆதிலக்ஷ்மியம்மாளை மணந்தார்.
இசைப்பணி
குருஸ்வாமி பிள்ளை வாசிக்கும் பல்லவியைப் பிற வித்வான்கள் வாசிக்கத் திணறுவார்கள்.
மறைவு
பந்தணைநல்லூர் குருஸ்வாமி பிள்ளை 1963ஆம் ஆண்டு காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013