being created

படுமரத்து மோசிகீரனார்: Difference between revisions

From Tamil Wiki
Line 60: Line 60:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://nallakurunthokai.blogspot.com/2015/06/33.html குறுந்தொகை 33: மருதம் - தலைவி கூற்று]
* [https://nallakurunthokai.blogspot.com/2015/06/33.html குறுந்தொகை 33: மருதம் - தலைவி கூற்று]
* குறுந்தொகை 75: மருதம் - தலைவி கூற்று
* [https://nallakurunthokai.blogspot.com/2015/08/75.html குறுந்தொகை 75: மருதம் - தலைவி கூற்று]
* குறுந்தொகை 383: தோழி கூற்று
* குறுந்தொகை 383: தோழி கூற்று



Revision as of 16:45, 20 March 2024

படுமரத்து மோசிகீரனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய மூன்று பாடல்கள் சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

படுமரத்து மோசிகீரனார் படுமரம் என்னும் ஊரில் பிறந்தார். தந்தை மோசிகீரனார். கீரன் என்பது குடியைக் குறிப்பதாகவும் அறிஞர்கள் கருதினர்.


பரத்தையிடம் பிரிந்த தலைவனுக்காகப் பாணன் தூது வருகிறான். தூதை ஏற்பதாகத் தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

இளமாணாக்கன் (தமிழ்). பிரம்மச்சாரி (வடமொழி) அன்னாய்! இவன் ஓர் இளமாணாக்கன். இரந்து உண்ணும் பழக்கம் உடையவன். இப்போது ஒரு விருந்தாளியையும் கூட்டிக்கொண்டு வந்துள்ளான். (உணவு வழங்குவோம்) (விருந்தாளி - இங்குத் தலைவன்)

பொன்மலி பாடலி குறுந்தொகை 75 தலைவன் பரத்தையிடமிருந்து திரும்பிக்கொண்டிருக்கிறான் என்று பாணன் தலைவியிடம் சொல்கிறான். தலைவி அவனை வினவுகிறாள். "வருவதை நீ கண்டாயா, அல்லது கண்டார் கூறக் கேட்டாயா? பொன்மலி பாடலியைப் பெற்றதாகச் சொல்லும் செய்தியை யார் வாய்க் கேட்டனை"

சோணை சோணை ஆறு பாடலியில் ஓடிற்று. அதில் யானைகள் நீராடும். (புராணக் கதை கஜேந்திர மோட்சத்தின் நிழல்) இன்றை அளவு கொன்றைக்கு குறுந்தொகை 383 இன்று நீ அவனுடன் செல்வதற்கு உடம்பட்டாய். அதனால் நானும் அவனை வரச்சொன்னேன். அவனும் வந்திருக்கிறான். இப்போது நீயோ இன்றைய நாளை மட்டும் கொன்றக்கு ஒப்படைத்துவிட்டேன் என்று சொல்லிக் கையையும், காலையும் ஒடுக்கிக்கொண்டு நோன்பிருக்கிறாய் (கொன்றைப் பூச் சூடிய சிவனுக்கு இன்றைய பொழுது என்று சொல்லி நோன்பிருத்தல்) தீயில் பட்ட இளந்தளிர் போல நான் வாடி வதங்குவதைத் தவிர வேறு வழி இல்லை.


இலக்கிய வாழ்க்கை

படுமரத்து மோசிகீரனார் குறுந்தொகையில் 33, 75, 383 ஆகிய பாடல்களைப் பாடினார். மூன்றும் அகத்திணைப்பாடல்கள். குறுந்தொகையில் 33, 75 தலைவிக்கூற்றில் அமைந்த மருதத்திணைப்பாடல்கள். 383வது பாடல் தோழிக்கூற்றில் அமைந்த பாலைத்திணைப்பாடல். குறுந்தொகை 383-வது பாடலில் உடன்போக முன்பு சம்மதித்த தலைவி தயங்கி நிற்க அவளை ஆற்றுப்படுத்தி நாணத்தை விட்டொழிக்கச் சொல்லும் பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • பரத்தையரிடம் தலைவன் செல்லும் போக்கும், அவனால் வருந்து தலைவியின் சித்திரம், அவன் திரும்பி தலைவியிடம் வர பாணன் உதவி செய்தல் ஆகியவை மருதத்திணைகளில் உள்ளது.
  • காதலித்த தலைவனும் தலைவியும் உடன்போதல். தோழி அதற்கு துணை புரிதல் பாலைத்திணையில் உள்ளது.

பாடல் நடை

  • குறுந்தொகை 33 (திணை: மருதம்)

அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூ ணிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே.

  • குறுந்தொகை 75 (திணை: மருதம்)

நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.

  • குறுந்தொகை 383 (திணை: பாலை)

கூற்று: உடன்போக்கு நேர்வித்து வந்த தோழி, நாணால் வருந்தும் தலைமகளை நாணுக்கெடச் சொல்லியது.

நீயுடம் படுதலின் யான்தர வந்து
குறிநின் றனனே குன்ற நாடன்
இன்றை யளவை சென்றைக் கென்றி
கையுங் காலும் ஓய்வன அழுங்கத்
தீயுறு தளிரின் நடுங்கி
யாவதும் இலையான் செயற்குரி யதுவே.

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.