ந. பெரியசாமி: Difference between revisions
(→விருது) |
(Finalised) |
||
Line 5: | Line 5: | ||
ந. பெரியசாமி பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூரில் நடராஜன், பூங்காவணம் இணையருக்கு மார்ச் 14, 1971-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வி பசும்பலூரிலும், மேல்நிலைக் கல்வி சின்னசேலத்திலும் பயின்றார். சேலம் தொலைதூரக் கல்லூரியில் தொழிற்கல்வியில் பட்டப்படிப்பு பயின்றார். ஆகஸ்ட் 30, 2001-ல் மாதேஸ்வரியை மணந்தார். பிள்ளைகள் மகாபோதி, நித்திலன். | ந. பெரியசாமி பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூரில் நடராஜன், பூங்காவணம் இணையருக்கு மார்ச் 14, 1971-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வி பசும்பலூரிலும், மேல்நிலைக் கல்வி சின்னசேலத்திலும் பயின்றார். சேலம் தொலைதூரக் கல்லூரியில் தொழிற்கல்வியில் பட்டப்படிப்பு பயின்றார். ஆகஸ்ட் 30, 2001-ல் மாதேஸ்வரியை மணந்தார். பிள்ளைகள் மகாபோதி, நித்திலன். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
1990-ல் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 2004-ல் முதல் கவிதைத்தொகுப்பான | 1990-ல் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 2004-ல் முதல் கவிதைத்தொகுப்பான 'நதிச்சிறை' வெளிவந்தது. 2021-ல் 'கடைசி பெஞ்ச்' என்ற இளையோருக்கான இணைய கவிதை தொகுப்பு வெளிவந்தது. ஐந்து கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கவிதைகள், நூல் விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். மொழியின் நிழல், இடது சாரி அரசியல் என இரண்டு கட்டுரைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். | ||
== விருது == | == விருது == | ||
* தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கே.சி.எஸ் அருணாச்சலம் நினைவு விருது | * தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கே.சி.எஸ் அருணாச்சலம் நினைவு விருது | ||
Line 12: | Line 12: | ||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
ந.பெரியசாமி தமிழின் முற்போக்கு அணியைச் சேர்ந்த கவிஞர். சமூகசீர்திருத்தக் கவிதைகளை எழுதி வருபவர். | ந.பெரியசாமி தமிழின் முற்போக்கு அணியைச் சேர்ந்த கவிஞர். சமூகசீர்திருத்தக் கவிதைகளை எழுதி வருபவர். "எளியது ஆயினும் வலியது கண்டாய் எனச் சொல்ல வைத்துவிட்டார்" என முற்போக்கு அணியின் விமர்சகர் சு.பொ.அகத்தியலிங்கம் இவர் கவிதைகளைப்பற்றிச் சொல்கிறார் . | ||
== நூல்கள் பட்டியல் == | == நூல்கள் பட்டியல் == | ||
Line 29: | Line 29: | ||
* [https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/you-found-it-simple-yet-painful எளியது ஆயினும் வலியது கண்டாய் - சு.பொ.அகத்தியலிங்கம்: இளையோருக்கான கவிதைகள்: ந.பெரியசாமி] | * [https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/you-found-it-simple-yet-painful எளியது ஆயினும் வலியது கண்டாய் - சு.பொ.அகத்தியலிங்கம்: இளையோருக்கான கவிதைகள்: ந.பெரியசாமி] | ||
* [https://www.nakkheeran.in/special-articles/special-article/gandhi-152-he-evergreen காந்தி 152: அவர் எக்காலத்துக்குமானவர்: கவிஞர் ந. பெரியசாமி] | * [https://www.nakkheeran.in/special-articles/special-article/gandhi-152-he-evergreen காந்தி 152: அவர் எக்காலத்துக்குமானவர்: கவிஞர் ந. பெரியசாமி] | ||
{{ | |||
{{Finalised}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:எழுத்தாளர்கள்]] | [[Category:எழுத்தாளர்கள்]] | ||
[[Category:கவிஞர்கள்]] | [[Category:கவிஞர்கள்]] | ||
[[Category:கட்டுரையாளர்கள்]] | [[Category:கட்டுரையாளர்கள்]] |
Revision as of 08:11, 20 September 2023
ந. பெரியசாமி (பிறப்பு: மார்ச் 14, 1971) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ந. பெரியசாமி பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூரில் நடராஜன், பூங்காவணம் இணையருக்கு மார்ச் 14, 1971-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வி பசும்பலூரிலும், மேல்நிலைக் கல்வி சின்னசேலத்திலும் பயின்றார். சேலம் தொலைதூரக் கல்லூரியில் தொழிற்கல்வியில் பட்டப்படிப்பு பயின்றார். ஆகஸ்ட் 30, 2001-ல் மாதேஸ்வரியை மணந்தார். பிள்ளைகள் மகாபோதி, நித்திலன்.
இலக்கிய வாழ்க்கை
1990-ல் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 2004-ல் முதல் கவிதைத்தொகுப்பான 'நதிச்சிறை' வெளிவந்தது. 2021-ல் 'கடைசி பெஞ்ச்' என்ற இளையோருக்கான இணைய கவிதை தொகுப்பு வெளிவந்தது. ஐந்து கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கவிதைகள், நூல் விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். மொழியின் நிழல், இடது சாரி அரசியல் என இரண்டு கட்டுரைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.
விருது
- தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கே.சி.எஸ் அருணாச்சலம் நினைவு விருது
- கலகம் விருது
- அசோகமித்ரன் படைப்பூக்க விருது
இலக்கிய இடம்
ந.பெரியசாமி தமிழின் முற்போக்கு அணியைச் சேர்ந்த கவிஞர். சமூகசீர்திருத்தக் கவிதைகளை எழுதி வருபவர். "எளியது ஆயினும் வலியது கண்டாய் எனச் சொல்ல வைத்துவிட்டார்" என முற்போக்கு அணியின் விமர்சகர் சு.பொ.அகத்தியலிங்கம் இவர் கவிதைகளைப்பற்றிச் சொல்கிறார் .
நூல்கள் பட்டியல்
கவிதைகள்
- நதிச்சிறை (2004)
- மதுவாகினி (2012)
- தோட்டாக்கள் பாயும் வெளி (2014)
- குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம் (2016)
- கடைசி பெஞ்ச் (2021)
கட்டுரை தொகுப்பு
- மொழியின் நிழல் 2021
- இடது சாரி அரசியல்
இணைப்புகள்
- ந.பெரியசாமி: வலைதளம்
- ந.பெரியசாமி: இந்து தமிழ்திசை: கட்டுரைகள்
- எளியது ஆயினும் வலியது கண்டாய் - சு.பொ.அகத்தியலிங்கம்: இளையோருக்கான கவிதைகள்: ந.பெரியசாமி
- காந்தி 152: அவர் எக்காலத்துக்குமானவர்: கவிஞர் ந. பெரியசாமி
✅Finalised Page