under review

நேரிசை ஆசிரியப்பா

From Tamil Wiki
Revision as of 03:23, 25 August 2023 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, ஈற்றயலடி மூன்று சீர்களைக் கொண்டதாக வருவது நேரிசை ஆசிரியப்பா. இயல்பான (நேரான) ஓசையுடையது என்னும் பொருளில் இப்பாவுக்கு இப்பெயர் அமைந்தது. சங்க இலக்கியத்தில் பல பாக்கள் நேரிசை ஆசிரியப்பாக்களே.

நேரிசை ஆசிரியப்பாவின் இலக்கணம்

  • நேரிசை ஆசிரியப்பா, ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்றுவரும்.
  • ஈற்றயலடி மூன்று சீர்களைக் கொண்டதாக வரும்.
  • ஈறுகளில் அதிகம் ஏகாரச் சீர் இடம் பெற்றிருக்கும்.

நேரிசை ஆசிரியப்பா உதாரணப் பாடல்

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

- மேற்கண்ட பாடல் ஆசிரியப்பாவிற்குரிய இலக்கணங்களுடன் ஈற்றயலடியில் மூன்று சீர்களைக் கொண்டு, இறுதிச் சீரில் ஏகாரத்துடன் அமைந்துள்ளதால் இது நேரிசை ஆசிரியப்பா.

உசாத்துணை


✅Finalised Page