நேரிசை ஆசிரியப்பா
From Tamil Wiki
Revision as of 03:23, 25 August 2023 by Tamizhkalai (talk | contribs)
ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, ஈற்றயலடி மூன்று சீர்களைக் கொண்டதாக வருவது நேரிசை ஆசிரியப்பா. இயல்பான (நேரான) ஓசையுடையது என்னும் பொருளில் இப்பாவுக்கு இப்பெயர் அமைந்தது. சங்க இலக்கியத்தில் பல பாக்கள் நேரிசை ஆசிரியப்பாக்களே.
நேரிசை ஆசிரியப்பாவின் இலக்கணம்
- நேரிசை ஆசிரியப்பா, ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்றுவரும்.
- ஈற்றயலடி மூன்று சீர்களைக் கொண்டதாக வரும்.
- ஈறுகளில் அதிகம் ஏகாரச் சீர் இடம் பெற்றிருக்கும்.
நேரிசை ஆசிரியப்பா உதாரணப் பாடல்
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
- மேற்கண்ட பாடல் ஆசிரியப்பாவிற்குரிய இலக்கணங்களுடன் ஈற்றயலடியில் மூன்று சீர்களைக் கொண்டு, இறுதிச் சீரில் ஏகாரத்துடன் அமைந்துள்ளதால் இது நேரிசை ஆசிரியப்பா.
உசாத்துணை
- யாப்பருங்கலக்காரிகை: சென்னை நூலகம்
- யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும்: பதிப்பாசிரியர்: முனைவர் சோ. கண்ணதாசன் தமிழ் இணைய மின்னூலகம்
- இலக்கண விளக்கம்: வைத்தியநாத தேசிகர்: பதிப்பாசிரியர்: தி.வே. கோபாலையர்: தமிழ் இணைய மின்னூலகம் யாப்பிலக்கணம்: விசாகப்பெருமாளையர்: தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்
- தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்
✅Finalised Page