நாராயண குரு ஆலயங்கள்

From Tamil Wiki

நாராயண குரு ஆலயங்கள் : (1888 - 1927) நாராயண குரு நிறுவிய ஆலயங்கள்.

நோக்கம்

நாராயணகுரு பெருந்தெய்வ வழிபாட்டை முன்னிறுத்தினார். சிறுதெய்வ வழிபாடு உயிர்ப்பலியுடனும், மது அருந்துவதுடனும் தொடர்புடையது என்பதனால் அதை நிராகரித்தார். பேய்த்தெய்வங்கள், நீத்தார் தெய்வங்கள், குறியீட்டுத்தெய்வங்கள் போன்றவற்றை வழிபடலாகாது என விலக்கினார்.

சிறுதெய்வ வழிபாடு பூசாரிகள், குறிசொல்பவர்கள், மந்திரவாதிகள் ஆகியோரின் ஆதிக்கத்தை உருவாக்கி மக்களை மூடநம்பிக்கையில் கட்டிப்போடுகிறது என்று நாராயண குரு சொன்னார். அத்துடன் சிறுதெய்வ வழிபாட்டில் உள்ள வன்முறை அம்சம் அதை வணங்குபவர்களின் வாழ்விலும் நீடிக்கிறது என்று அவர் கருதினார். இறைவழிபாட்டின் உணர்வுகள் அச்சம் சார்ந்தவையாக இருக்கலாகாது என்றும், இறைவழிபாடு கல்வியுடன் தொடர்புடையதாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்

ஆகவே நாராயண குரு கிராமங்கள் தோறும் சென்று அங்குள்ள சிறுதெய்வச் சிலைகளையும் வழிபடப்பட்ட கற்களையும் தூக்கி அகற்றி அங்கே பெருந்தெய்வங்களை நிறுவினார்.

ஆலயங்கள்

நாராயணகுரு அவரே கட்டிய ஆலயங்கள், அவர் வந்து மையச்சிலையை நிறுவிய ஆலயங்கள் பல உள்ளன,

  • 1888 அருவிப்புறம் சிவன் கோயில்
  • 1889 மண்ணந்தல தேவி கோயில்
  • 1893 குளத்துகரை சிவன் கோயில் குளத்தூர் திருவனந்தபுரம்
  • 1893 ஆயிரம்தெங்கும் கொல்லம்
  • 1893 பூந்தோட்ட எர்ணாகுளம் சிவன் கோயில்
  • 1893 கிருஷ்ணன் கோயில் தலைச்சேரி
  • 1893. காயிக்கரை திருவனந்தபுரம் சுப்ரமணியர் கோயில்
  • 1895. பகவதி கோயில் கருநாகப்பள்ளி
  • 1898. சுப்ரமணிய கோயில் வாழமுட்டம். குன்னுப்பாற திருவனந்தபுரம்
  • 1904. கிருஷ்ணன் கோயில் ஆஷ்ராமம் கொல்லம்
  • 1907பக்தி சம்வர்த்தினி யோகம் கண்ணூர்
  • 1908 February. ஜகன்னாதர்கோயில் தலைச்சேரி
  • 1914 பொன்னுருண்ணி எர்ணாகுளம் ஸ்ரீநாராயணெஸ்வரம் சிவபார்வதி கோயில்
  • 1915. ஞானேஸ்வரர் ஆலயம் அஞ்சுதெங்கு திருவனந்தபுரம்
  • 1916. மகேஸ்வரா கோயில் கூர்க்கஞ்சேரி திரிச்சூர்
  • 1920 சிவன் கோயில் காரமுக்கு திரிச்சூர்
  • 1921.காலகண்டேஸ்வ்வரம் சிவன். முருக்கும்புழா திருவனந்தபுரம்
  • 1927.அர்த்த நாரீஸ்வரர் ஆலயம் கலவங்கோடம் சேர்த்தலை.