being created

நாகராஜா கோவில்

From Tamil Wiki
Revision as of 17:58, 31 July 2023 by Arulj7978 (talk | contribs)

கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவில் நகரில் உள்ள நாக வழிபாட்டு ஆலயம். மூலவர் நாகராஜா. ஆலயத்தில் அனந்த கிருஷ்ணனுக்கு சந்நிதி உள்ளது. அனந்த கிருஷ்ணன் பெயரிலேயே திருவிழா மற்றும் தேரோட்டம் நடக்கிறது. நாகர்கோவில் ஊர் பெயர் நாகராஜா கோவில் காரணமாக உருவானது .

இடம்

கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவில் நகரில் ஒழுகினசேரி என்னும் பகுதியில் உள்ளது. கன்னியாகுமரியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பெயர்

நாகர்கோவில் என்னும் பெயர் பழங்காலத்தில் நாகராஜா கோவிலை குறிப்பதாகவே இருந்துள்ளது. பின்னர் கோவிலை சுற்றி உள்ள ஊர் பெயராகவும் அவ்வூர் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலை நகராகவும் மாறியுள்ளது. நாகர்கோவில் என்னும் பெயர் வழங்கப் பட்டிருந்தாலும் கோட்டாறு என்னும் பெயரே பெருவழக்காக இருந்துள்ளது. கி.பி. 1800 க்குப் பின் புரட்டஸ்டாண்டுக் கிறிஸ்த்தவர்கள் வருகைக்குப் பின்னர் நாகர்கோவில் என்னும் பெயர் பெருவழக்காக மாறியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

மூலவர்

கோவில் மூன்று கருவறைகளைக் கொண்டது. மூலக்கருவறை நாகராஜா அல்லது நாகரம்மன் கருவறை என அழைக்கப்படுகிறது. மூலக்கருவறை காலத்தால் பழையது. இக்கருவறை மண்சுவரால் எழுப்பப்பட்டு மூங்கில் கம்புகளில் தென்னை ஓலைகளால் வெயப்பட்ட கூரைக் கொண்டது. கருவறை முன்பாக வாகனம், பலிபீடம் இல்லை. கருவறைக்குள் இருக்கும் மூல கற்சிலை நான்கு தலைகள் கொண்டது. இச்சிலை ஐந்து தலைக்கொண்ட உலோக அங்கியால் பொதியப்பட்டுள்ளது. ஐந்தாவது தலை அறுபட்ட நிலையில் காணப்படுகிறது.

சிவன் கருவறையில் மூலவர் ஆவுடையாரில் லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவன் கருவறையின் முன் அறையில் நந்தி சிலை உள்ளது.

அனந்த கிருஷ்ணன் கருவறையில் அனந்த கிருஷ்ணனன் சிலையும் அதன் இருபுறங்களிலும் பாமா மற்றும் ருக்மிணி சிற்ப்பங்கள் உள்ளன.

தொன்மம்

நாகராஜா கோவிலுக்கு எழுதப்பட்ட தலவரலாறு கிடையாது. செவிவழி கதைகளே உள்ளன.

கோவில் இப்போது இருக்கும் இடம் ஒரு காலத்தில் புல்லும் புதறுமாக இருந்துள்ளது. ஒரு இளம்பெண் புல் அறுத்துக்கொண்டிருக்கும் போது திடீரென ரத்தம் கண்டு அஞ்சி பார்த்த போது ஐந்து தலை நாகம் ஒன்றின் தலையில் அறிவாள் வெட்டி ரத்தம் வருவதை காண்கிறாள். அவள் பக்கத்திலிருந்த தன் ஊர் மக்களிடம் நடந்ததை கூற அவர்கள் அங்கு வந்து பார்த்து பரிகாரமாக அவ்விடத்தில் சிறு கோவில் ஒன்றை கட்டினர்.

களக்காட்டு மன்னர் ஒருவர் காட்டுப்பகுதிகளை சீர்செய்து நாடாக்க அரண்மனை அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். அதிகாரிகள் மக்களை அழைத்துக் கொண்டு காடுகளை சீர்திருத்தினர். அப்போது ஓரிடத்தில் கல் ஒன்று சேதப்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. அதைப்பார்த்தவர்களுக்கு நாகப்பிம்பம் தெரிந்துள்ளது. அன்று இரவு களக்காடு மன்னர் கனவில் தோன்றிய நாகர் உன் ஆட்கள் தன்னை சிதைத்ததாகவும் உன்னை பீடித்துள்ள தொழுநோய் தீர எனக்கு ஆலய்ம எழுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி மன்னர் நாகர்க்கு கோவில் எழுப்பினார்.

நாகவழிபாடு

நாகவழிபாடு மிகத் தொன்மையானது. விஷத்தினல் எதிரிகளைக் கொல்லும் சக்த்தியை பாம்புகள் கொண்டிருப்பதால் அவற்றுக்கும் கடவுளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பி வழிப்பட்டனர். நாட்டுப்புறத் தெய்வங்காளின் கூறுகளை உள்ளடக்கிய வழிபாட்டு முறை. புராணங்கள் அதிக அளவில் உள்வாங்கி கொண்டிருக்கின்றன. கேரளத்திலும் குமரி மாவட்டத்திலும் சர்ப்ப(பாம்பு)க் காவுகள் அதிகமாக ஊள்ளன.

நாகராஜா கோவிலில் நாகவழிபாடு மிகப் பழங்காலத்திலே இருந்துள்ளது. நாகரம்மன் அல்லது நாகராஜா என்னும் இக்கொவில் மூல தெய்வத்திற்க்கு நேர்ச்சை செய்வதன் மூலம் சரும வியாதிகளைப் போக்கி நலம் பெறலாம் என்னும் நம்பிக்கை இங்கு பல காலமாக இருந்து வருகிறது.

கோவில் அமைப்பு

கோவில் வளாகத்தை சுற்றி உயர்ந்த மதில் சுவர் கல் நாகர் உருவங்களுடன் இருக்கிறது. கோவில் சதுரவடிவில் அமைந்துள்ளது. கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவில் வளாகத்தின் கிழக்கிலும் தெற்க்கிலும் வாசல்கள் உள்ளன. அனந்த கிருஷ்ணன் சந்நிதியின் எதிரிலும், நாகராஜர் சந்நிதி எதிருலுமாக வாசல்கள் உள்ளன. கோவில் முகப்பு நுழைவாயில் கேரளபாணியில் அமைந்துள்ளது.

கோவில் வளாகம்

பக்தர் குளம்: கோவில் முன்புறம் இருக்கிற பிரதான வாயில் கிழக்கு வாயில் அல்லது உமை பங்கனேரி வாயில் என அறியப்படுகிறது. கிழக்கு வாயிலின் இருபுறம் தொங்கும் மாலை மற்றும் போக்களின் ஓவியங்களுடன் கேரள பாணி ஓட்டுகூரையுடன் உள்ளது. கிழக்கு வாயில் வழி உள்ளே நுழைந்ததும் வலதுப்பக்கம் வடகிழக்கு மூலையில் நீராழி என அழைக்க்ப்படும் சதுர வடிவ பக்தர் குளம் உள்ளது. பக்தர் குளம் 8 சென்ட் பரப்பளவில் சுற்றி வடக்கிலும் கிழக்கிலும் தென்னை, வேம்பு முதலிய மரங்கள் உள்ளன. குளத்தை சுற்றியமைந்துள்ள மதில்சுவரில் நாக சிற்பங்கள் அதிகம் காணப்படுகிறது.

அரசடி விநாயகர்: கிழக்கு வாயில் வழியாக கோவில் இருப்பிடத்திற்க்குள் நுழைந்ததும் இடப்புறம் அரச மரத்தின் அடியில் அமைக்க்ப்பட்ட மேடையில் மேற்கு நோக்கி விநாயகர் சிற்பம் உள்ளது. சுற்றிலும் நிறைய நாக சிற்ப்பங்களும் உள்ளன.

கோயில் முகப்பு: அரசமரத்தின் மேற்க்கு திசையில் கொட்டாரம்(அரண்மனை) வடிவில் அமைந்துளள கோவில் முகப்பு உள்ளது. தெற்கு வாயிலின் வடக்கும் தெற்க்கும் இரு தூண்களுடன் கூடிய இரண்டு திண்ணைகள் உள்ளன. கேரள பாணியில் ஓட்டுகூரையுடன் கோவில் முகப்பு அமைந்துள்ளது. முகப்பின் வலப்புற வாயிலில் ஐந்து தலை நாகச் சிலையும் இடப்புற வாயிலில் ஐந்து தலை நாகக் குடையின் கீழ் கிருஷ்ணன் பாமா ருக்குமணியுடன் நிற்கும் சிற்ப்பமும் உள்ளன. வாயில்களுக்கு நடுவில் மேல் பகுதியில் சங்குச் சிற்ப்பமும் தெற்கு வாயிலின் தெற்கு மேற்ப் பகுதியில் சக்கரச் சிற்ப்பமும் அதன் தென் பகுதியில் காவல் தெய்வ சிலையும் உள்ளன. முன்னர் சிலைகள் இருக்கும் மேல் பகுதி சாரளங்களுடன் இருந்துள்ளது, 2006 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது இப்போதுள்ள சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

அலுவலகம்: கோவிலின் தென்புறம் வடக்கு நோக்கி அறநிலையதுறையின் கோவில் அலுவலகம் உள்ளது. இரு வாயில்கள் கொண்ட அலுவலகத்தில் கிழக்கு வாயில் பகுதியில் அறநிலையத்துறை அலுவல் பணிகள் நடைப்பெறுகிறது. திருப்பணிக்குழு அலுவலகம் என்று அழைக்கப்படும் மேற்க்கு வாயிலில் திருப்பணிக் குழுவின் அலுவல்கள் நடைபெறுகிறது. இப்போது அலுவலகம் உள்ள பகுதியும் அதனை ஒட்டி கிழக்கு தெற்காக உள்ள பகுதியும் முன்னர் கல்வெட்டுகள் குறிப்பிடும் குணவீர பண்டிதன் மற்றும் கமலவாகன பண்டிதன் ஆகியோரின் வீடுகளாக இருந்துள்ளது. அவ்வீட்டினர் கோவிலை நிர்வகித்து வந்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது அவை இடிக்கப்பட்டு அதன் சிறுப்பகுதி அலுவலகமாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

திருமண மண்டபம்: கோவிலின் தென்புறம் தெற்க்கு நோக்கு ஒரு திருமண மண்டபம் உள்ளது.

மகாமேரு மாளிகை(தெற்கு வாயில்): மேரு என்றால் மேரு மலையைக் குறிக்கும். மேரு மலை சிவபெருமானால் தனுவாக தாங்கப் பெற்ற பொன்னிற ஆயிரம் தலைகளுடைய மலை என்னும் தொன்மம் கொண்டது. இத்தொன்மப் பின்னணியில் கோவிலின் பிராதான வாயிலான தெற்கு வாயில் மகாமேரு மாளிகை என அழைக்கப்படுகிறது. மகாமேரு மாளிகை நாகர்கோவில் நகராட்சியின் முத்திரையாக உள்ளது.

தெற்க்கு வாயில் மிகப் பெரிய மரத்திலான கதவுகள் கொண்ட அரண்மனை வாசல் போன்ற உயரமான வாயில். வாயிலின் மேற்புறம் மூன்று கும்ப கலசங்களுடன் ஒட்டுக்கூரை வேயப்பட்ட ஓர் அறை உள்ளது. வாயிலின் இருபுறமும் அறைகள் உள்ளன. வாயிலின் அடியில் நாகராஜா கோவிலின் தேருக்கான மரப் பொருள்கள் பாதுகாக்கப்படும் பாதாள அறை உள்ளது. வாயிலின் மேற்கு பகுதியில் மலபார் கட்டடக்கலை பாணியிலான முழுக்க தேக்கு மரத்தால் ஆன மாளிகை உள்ளது.

வெளிச்சுற்றுச் சுவர்: நாகராஜா கோவில் 73 செண்ட் பரப்பளவு கொண்டது. கோவிலைச்சுற்றி செவ்வக வடிவில் பெரிய கற்களை கொண்டு கட்டப்பட்ட சுற்றுச் சுவர் உள்ளது. சுவரின் உச்சியில் அதிக எண்ணிக்கையில் நாகச்சிலைகள் உள்ளன. சுவரில் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளது.

தெற்குச் சுவர் வாயில்கள்: தெற்குச் சுவரில் திருவிழா காலங்களில் மட்டும் திறக்கப்படும் இரண்டு வாயில்கள் உள்ளன. மகாமேரு மாளிகைக்கு நேராக அமைந்துள்ள பெரியவாயில் வழியாக திருவிழா காலங்களில் வாகனங்கள் எடுத்துச் செல்லப்படும். வாயிலின் மேற்பகுதியில் இரண்டு ஐந்து தலை நாகங்கள் மற்றும் அவற்றின் நடுவே பாமா ருக்குமணியுடன் இருக்கும் அனந்த கிருஷ்ணன் ஆகிய சிலைகள் உள்ளன. பெரிய வாயிலின் இரண்டு பக்கங்களிலும் மூன்று விளக்குப்பாவைச் சிலைகள் வீதம் உள்ளன. வாயிலின் இருபுறங்களிலும் பூக்கள், பூததின் முகங்கள், அன்னவால் கருக்கு, மாலைகள் ஆகியவற்றின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

பெரியவாயிலுக்கு கிழக்காக சிறிய வாயில் ஒன்று உள்ளது. சிறிய வாயிலின் மேற்புறம் மூன்று தலை நாகமும் அதன் மேல் விரிந்த இதள்களைக் கொண்ட பூவும் அதனைச்சுற்றி பூமாலை கொண்டு அலங்காரம் செய்ய்ப்பட்டுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. வாயில்களின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள கோபுரங்கள் 1992-ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது அமைக்கப்பட்டதாகும்.

வடக்கு வாயில்: நாகராஜா கோவிலின் முன்பு வடக்கு திசையில் தெற்க்கு நோக்கி வடக்கு வாசல் உள்ளது. வாயிலின் இருபுறமும் விளக்கு பாவைச் சிற்ப்பங்கள் மற்றும் சைவ சமய அடியவர்களின் சிற்பங்கள் உள்ளன. வளைந்த அமைப்புடைய வாயிலின் மேற்பகுதியில் இருபுறமும் ஐந்து தலை நாகத்தின் சிலைகளும் நடுவே இந்து தெய்வங்களின் சிற்பங்கள் பலவும் உள்ளன. அவற்றின் கீழே கையில் கதையுடன் வாயில் காவலர் சிற்பங்கள் உள்ளன. 1970-ஆம் ஆண்டு கட்டப்பட்ட வடக்கு வாயில் கோபுரத்தில் பூக்கள், குலை தள்ளிய வாழை ஆகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இடும்பன் சந்நிதி: நாகராஜா கோயில் முன்பக்கம் உள்ள வடக்கு வாயில் உள்ளே இடது பக்கம் இடும்பன் சந்நிதி உள்ளது. இடும்பன் பீமனிடம் சண்டையிட்டு மாண்ட அரக்கன் என்றும் முருகனோடு சண்டையிட்டு தோற்று பின்னர் அவன் மனைவி இடும்பியின் வேண்டுகோளை ஏற்று முருகன் அவனை உயிர்ப்பித்து தனது பூத கணங்களோடு சேர்த்துக் கொண்டான் என்னும் தொன்மங்கள் உள்ளன. நாகராஜா கோவிலில் முருகனின் கணங்களின் தலைவனாக முருகனுக்கு காவலாக இடும்பன் சந்நிதி உள்ளது. இடும்பன் சந்நிதி 4 அடி நீளமும் 4.1 அடி அகலமும் 6.5 அடி உயரமும் கொண்டது.

ஆஞ்சநேயர் சந்நிதி: நாகராஜா கோவிலின் வடக்குச் சுவரில் தெற்க்கு நோக்கி ஆஞ்சனேயர் சந்நிதி உள்ளது. ஆஞ்சனேயர் சிலை ஒரு காலை மடக்கி அமர்ந்திருப்பதாக உள்ளது. இரு கைகளில் இசைக்கருவிகளும் தலையில் கிரீடமும் கழுத்தில் மாலைகளும் உள்ளன.

துர்கையம்மன் சந்நிதி: நாகராஜா கோவிலின் வடக்கு வாயில் வழியாக செல்கையில் மேற்க்கு திசையில் கிழக்கு நோக்கி மூன்று சந்நிதிகள் உள்ளன அவற்றில் வடக்கில் துர்க்கையம்மன் சந்நிதி உள்ளது. நாக்ரம்மன் கோவிலை தோற்றுவித்து வணங்கி வந்த கன்னிமேட்டுச் சேரிப் பெண்ணின் சமாதியின் மேல் இச்சந்நிதி அகட்டப்பட்டுள்ளாதாக வாய்மொழித் தொன்மம் உள்ளது. துர்க்கையம்மன் சந்நிதி 5.3 அடி நீளமும் 4 அடி அகலமும் 10 அடி உயரமும் கொண்டது. துர்க்கையம்மன் சிலை சங்கு சக்கரம் தாங்கி திருமாலின் பெண் வடிவமாக காட்சியளிக்கிறது.

பாலமுருகன் சந்நிதி: துர்கையம்மன் சந்நிதிக்கு தெற்க்கில் கிழக்கு நோக்கி பாலமுருகன் சந்நிதி உள்ளது. இங்கு முருகன் சிலை வாகனமான மயில் இல்லமல் வேலுடன் காட்சியளிக்கிறார். முருகன் சிலையுடன் மயில் சிலை பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட போது மயிலின் தலை உடைந்து விழ அதை குளத்தில் போட்டு விட்டனர் என்றும் அதற்கு காரணமாக நாகத்திற்க்கு எதிரியான மயில் கோவிலில் இருக்க முடியாது என்றும் சொல்லப்படுகிறது. சந்நிதியின் உள்ளே அமர்ந்த நிலையில் விநாயகர் சிலையும் உள்ளது. பாலமுருகன் சந்நிதி 6 அடி நீளமும் 6.8 அடி அகலமும் கொண்டது. சந்நிதியின் வெளி முகப்பில் வீர மகேஸ்வரரும் வீரபாகுவும் வாயில் காவலர்களாக உள்ளனர். 1979 ஆம் ஆண்டு மில் அதிபரான செங்கோட முதலியாரால் இந்த சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணன்: முருகன் சந்நிதிக்கு தெற்கில் செவ்வக வடிவ பீடத்தில் புல்லங்குழல் ஊதும் கிருஷ்ணன் சிலை கிழக்கு நோக்கி உள்ளது. கிருஷ்ணனின் சிலை மயிற்பீலி கொண்ட கிரீடத்துடன் காதுகளில் குண்டலமும் கழுத்தில் மாலையுடனும் உள்ளது. விரிந்த குடையின் கீழ் மூன்றடி உயரத்தில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

புஷ்பக்குளம்: நாகராஜா கோவிலின் வடப்புறம் துர்க்கை சந்நிதிக்கு பின்புறம் சிறிய புஷ்ப்பகுளம் என்று அழைக்கப்படும் சிறியக்குளம் உள்ளது. குளத்தில் கோவில் அர்ச்சகர்களான நம்பூதிரிகள் மற்றும் தந்திரிகள் மட்டுமே நீராட அனுமதி உள்ளது பக்த்தர்களுக்கு அனுமதி கிடையாது.

அர்ச்சகர் வீடு: புஷ்பக்குளத்தின் மேற்குப்பக்கம் கிழக்கு நோக்கி அர்ச்சகர் வீடு உள்ளது. 1960 ஆம் ஆண்டுக்கு பின்னரே அர்ச்சகர் வீடு மற்றும் துர்க்கை, பாலமுருகன், கிருஷ்ணன் சந்நிதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் இப்பகுதி நந்தவனமாக இருந்துள்ளது.

வெளிப் பிரகாரம்

முன்பக்க வாயில் வழியாக உள்ளே சென்றால் வெளிப்பிரகாரம் என்று அழைக்கப்படும் வெளித்திருச்சுற்று காணப்படுகிறது. நாகராஜா கோவிலின் முன்புள்ள இரண்டு வாயில்களில் நாகரம்மன் சந்நிதிக்கு முன்னுள்ள வாயில் உள்ளே செல்வதற்கும் அனந்த கிருஷ்ணன் சந்நிதிக்கு முன்னுள்ள வாயில் வெளியே வருவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. முன்வாயில் வழியாக உள்ளே செல்கையில் காணப்படும் வெளிப்பிரகாரத்தின் வலது பக்கம் திண்ணை அமைந்துள்ளது. திண்ணையில் விளக்குப்பாவை சிற்பங்களுடன் கூடிய கல்தூண்கள் உள்ளன.

மணிக்கூண்டு: வெளிப் பிரகாரத்தில் கோயிலுக்கு முன்பாக மணிக்கூண்டு உள்ளது. இது ஓடு வேயப்பட்ட கூரை மற்றும் ஆறு கல்தூண்களுடன் உள்ளது. ஓட்டுக் கூரையின் உச்சியில் கும்பம் உள்ளது. மணிக்கூண்டின் மேற்பகுதியில் இரு தூண்கள் நடப்பட்டு பெரிய மணி தொங்க விடப்பட்டுள்ளது. சுமார் 1.5 அடி உயரமுள்ள மரத்தில் செய்யப்பட்ட நாகச்சிற்பம் இங்கு கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை திருவிதாங்கூர் அரச குடும்பத்தால் கோவிலுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது முன்னர் திருவிழா காலங்களில் யானைகளை நிறுத்தி வைக்கப் பயன்படுடத்தப்பட்டுள்ளதால் யானைக் குடில் என்றும் அழைக்கப்படுகிறது.

கொடிமரம்: நாகராஜா கோவில் வெளிப் பிரகாரத்தில் மணிக்கூண்டிற்குத் தெற்குப்பக்கம் அனந்தகிருஷ்ணன் சன்னதிக்கு முன்பாக கொடிமரம் உள்ளது. கொடிமரம் தேக்கு மரத்தில் செய்யப்பட்டு பித்தளைத் தகட்டால் பொதியப்பட்டுள்ளது. கொடிமரத்தின் அடிபாகம் தாமரைப் பூ கவிழ்த்து வைக்கப்பட்ட வடிவில் உள்ளது. பீடம் அடியிலிருந்து உபானம், உபபீடம், பத்மஜகதி, விருத்த குமுதம், கபோதகம், பத்ம பீடம் என்னும் அமைப்பில் உள்ளது. பீடத்தில் வேதிகை இல்லை. நாற்பது அடி உயர கொடிமரத்தின் உச்சியில் ஆமை உருவம் மற்றும் அதன் அடியில் சதுரமான வடிவில் காணப்படும் பகுதியில் நான்கு மணிகள் உள்ளன மேலும் அதன் அடியில் சாய்வாகக் காணப்படும் நீண்ட கம்புப் பகுதியில் ஒரு மணி உள்ளது. கொடிமரம் 1950 ஏப்ரல் 24 அன்று நிறுவப்பட்டுள்ளது.

பலிபீடம்: வெளிப் பிரகார கொடிமரத்தை அடுத்து கொடிமர அரணுக்குள் பலிபீடம் உள்ளது. பலிபீடம் கொடிமரபீடத்தை போன்ற தோற்றத்தில் அதைவிட சிறியதாக பித்தளை தகட்டால் பொதியப்பட்டு உள்ளது.

நாகமணி பூதத்தான் சந்நிதி: நாகராஜா கோவில் வெளிப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி நாகமணி பூதத்தான் சந்நிதி உள்ளது. காவல் தெய்வமான நாகமணி பூதத்தான் சிலை மூன்று அடி உயரத்தில் கையில் கதையுடன் ஐந்து தலை நாகத்தின் கீழ் நின்ற கோலத்தில் உள்ளது. கோவில் மேற்பகுதி விமானத்துடன் நாகமணி பூதத்தானின் உருவமும் காவல் தெய்வங்களின் உருவங்களுடனும் காணப்படுகிறது. நாகராஜா அனந்த கிருஷ்ணனாக மாற்றம் பெற்ற காலத்தில் நாகமணி பூதத்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டு தனி சந்நிதி உருவாக்கப்பட்டுள்ளது. கோபுரம் 1992-ல் அமைக்கப்பட்டுள்ளது.

வாகன அறைகள்: நாகராஜா கோவில் வெளிப்பிரகாரத்தில் மூன்று வாகன அறைகள் உள்ளன. தெற்கு பெரிய வாயிலை ஒட்டி கிழக்குப்பக்க அறையில் பல்லக்கு வாகனங்கள் உள்ளன.வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள அறையில் நெருப்புக் கோழி வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம் என நான்கு வாகனங்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்தின் வடகிழக்கில் உள்ள வாகன அறையில் மூன்று தேர்வாகனங்கள்(இந்திர வாகனம்), மூஞ்சுறு வாகனம், குதிரை வாகனம், புஷ்ப வாகனம் மற்றும் கற்ப்பகத்தரு வாகனம் ஆகியன உள்ளன.

நந்தவனம்: வெளிபிரகாரத்தின் மேற்கு வாயிலில் குளத்துடன் கூடிய நந்தவனம் ஒன்று உள்ளது. மரங்கள் சூழ்ந்த குளக்கரையைச் சுற்றி ஏராளம் நாகச்சிற்பங்கள் உள்ளன. குளத்தின் நடுவில் ஆவுடையாரின் மேல் அமைந்த ஐந்து தலை நாகச் சிலை உள்ளது. விரிந்த பாப்பின் படத்தினுள் ஒரு மனித உருவம் உள்ளது. குளத்தின் தென்புறம் சுமார் ஒன்றரை அடி உயர கற்பீடத்தில் கிழக்கு நோக்கி ஐந்து நாகச்சிலைகள் உள்ளன.

சாஸ்தா சந்நிதி: வெளிபிரகாரத்தின் வடப்புறச்சுற்றில் கான்கிரீட்டில் கட்டப்பட்டு ஓட்டு கூரை கொண்ட சிறிய சாஸ்தா கோவில் உள்ளது. கூரையின் மேல் கும்ப கலசம் உள்ளது. வாயிலில் இரு துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. சந்நிதி முன் ஒரு அர்த்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு முன்பிருந்த யானைச் சிலை அகற்றப்பட்டு வேலைபாடுகளுடைய ஆறு கல்தூண்களுடன் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கல்தூண்களின் மேற்பகுதியில் வாழைப்பூ வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. மண்டப மேற்பகுதி பூ வேலைபாடுகளுடன் உள்ளது.

சாஸ்தாகோவில் நாகராஜா கோவிலின் தோற்றம் முதலே உள்ளது. சன்னதியின் முன் யானை சிற்பங்கள் இருந்துள்ளன. சமண சமய தர்ம சாஸ்தாவாக இருந்து பின்னர் அதிகப்படியான சபரிமலை அய்யப்ப பக்தர்களின் வருகையால் தர்ம சாஸ்தாவாக மாறியுள்ளது. கருவறை புதுப்பிக்கப்பட்டு யானைச் சிலைகள் அகற்றப்பட்டு முன் மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

கற்பலகைகள்: கோவில் முன்பாக வெளிபிரகாரத்தில் ஐந்து கற்பலகைகள் கல்வெட்டுகளுடன் உள்ளன. இவற்றில் நான்கு ஒரே அளவுடையது ஒன்று பிற கற்பலககைகளைவிட சற்று உயரம் குறைவாக உள்ளது.

மன்னர் வென்று மண் கொண்ட பூதல ஸ்ரீ வீரஸ்ரீ உதய மார்த்தாண்ட வர்மா, சமண சமயப்பெரியோர்களான இருவர் கேரளன் நாராயணன் குணவீர பண்டிதன், சீவகாருடையான் கமலவாகன பண்டிதன், தம்பிரான்குட்டி சடையன், மாளுவநம்பி முதலியோர் நாகராஜா கோவிலுக்குச் செய்த கொடைகளும் திருப்பணிகளும் இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் மூலம் நாகராஜா கோவில் சமணப்பள்ளியாக இருந்ததன் சான்றாகவும் உள்ளது.

நாகதுவாரபாலகர்கள்: கிழக்கு வெளிப்பிராகாரத்தில் நாகரம்மன் சன்னதி முன் அர்த்தமண்டப நுழைவாயிலில் கல்லில் செய்யப்பட்டு பித்தளை அங்கியால் போர்த்தப்பட்ட நாகதுவாரபாலகர் சிலைகள் உள்ளன. இடதுபுறம் உள்ள சிறிய சிலை பார்சுவ நாதரின் காவல் யக்‌ஷன் தர்னேந்திரனான நாகராஜாவாகவும் வலப்புறம் அமைந்துள்ள அளவில் பெரிய சிலை பார்சுவ நாதரின் காவல் யக்‌ஷியும் தர்னேந்திரனின் மனைவியுமான பத்மாவதியுமாகவும் கொள்ளப்படுகிறது. பித்த்ளை அங்கிகள் 2006-ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது அணியப்பட்டுள்ளன.

வெளிபிரகார கிழக்குச் சுற்றில் நாகரம்மன் சந்நிதி முன் தரையில் படுத்து வணங்கும் மனிதனின் சிற்பம் உள்ளது. இடுப்பில் வேட்டி கட்டி இடது பக்கம் கொண்டை முடியப்பட்டு மூன்று வளையக்ல்களுடன் கைகள் முன்பக்கம் நீட்டி வணங்கும் விதமாக செதுக்கப்பட்டுள்ளது.

உள் பிரகாரம்

நாகராஜா கோவில் கல்லல் கட்டப்பட்டது. உள் திருச்சுற்று அல்லது உள் பிரகார அர்த்த மண்டபத்தில் சந்நிதி முன் வாயில்கள் இரண்டு, வடக்குப் பக்கம் ஒன்று தெற்குப் பக்கம் ஒன்று என நான்கு வாயில்கள் உள்ளன. தென்புறவாயில் திருவிழா காலங்களில் மட்டுமே திறக்கப்படும் வடக்கு வாயில் அர்சகர்கள் புஷ்பகுளத்திலிருந்து நீர் எடுத்து வரவும் பக்தர்கள் வெளித்திருச்சுற்ரில் உள்ள துக்கை, பாலமுருகன், கிருஷ்ணன் சன்னதிகளுக்கு செல்லவும் பயன்படுத்தப்படுகிறது. உள்த்திருச்சுற்றில் நாகரம்மன் சந்நிதியிலிருந்து இடப்புறமாக சுற்றி வருகையில் இடதுபக்கம் சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய தூண்களுடன் திண்ணை வடிவில் தியான மண்டபம் உள்ளது. உள்திருச்சுற்றின் தென்கிழக்கு மூலையில் மடைப்பள்ளி காணப்படுகிறதி. இவ்வறை கோவில் பிரசாதம் தயாரிக்கும் சமயலறையாக செயல்படுகிறது.

கன்னிமூலை கணபதி சன்னிதி: உள்புரகாரத்தின் தென்மேற்கு மூலையில் 6.5 அடி நீள அகலங்களுடன் 7 அடி உயரத்துடன் கணபதி சந்நிதி காணப்படுகிறது. இக்கருவறையில் கணபதி, சிவலிங்கம் மற்றும் வெண்ண்ணெய்க் கிருஷ்ணன் சிலைகள் உள்ளன.

உற்சவ மூர்த்தி சந்நிதி: கன்னிமூலை விநாயகர் கருவறைக்கு வடக்கே கிட்டதட்ட கன்னிமூலை விநாயகர் கருவறை அமைப்பில் உற்சவ மூர்த்தி சந்நிதி உள்ளது. வேட்டைக் கிருஷ்ணன், வேட்டையம்மன், சக்கரத்தாழ்வார், விநாயகர் ஆகிய்யோரின் உற்சவ மூர்த்தி சிலைகள் உள்ளன. திருவிழாக் காலங்களில் வாகனங்கள் மேல் ஊர்வலம் வர இச்சிற்பங்கள் பயன்படுத்தபடுகிறது.

உள்திருச்சுற்றில் வடக்கு சுற்றில் அர்ச்சகர்கள் ஓய்வு எடுக்கும் ஓய்வு அறை மற்றும் மின் அறை ஆகியவவை உள்ளன. நாகரம்மன் சந்நிதி முன் அர்த்த மண்டபத்தின் வலது பக்கம் ஒரு கிணறு உள்ளது. கிணறு சுமார் 4.5 அடி சுவருடன் கம்பி அழிகளால் மூடப்பட்டு வெளிச்சம் செல்ல அப்பகுதி கூரை திறந்த சிலையில் உள்ளது.

அர்த்தமண்டபம் நடுவில் கம்பிக் குழாய்கள் அமைக்கப்பட்டு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கருவறியிலிருந்து இடது பக்கம் பெண்களுக்கும் வலதுபக்கம் ஆண்களுக்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பகுதியில் பெரிய உண்டியல் உள்ளது. ஆண்கள் பகுதியில் கண் இல்லாத குத்துவிளக்கு மற்றும் ஆமை-நாக விளக்கு ஒன்றும் உள்ளன. ஆமை-நாகவிளக்கில் ஆமை நான்கு கால்களையும் தலையையும் வெளியே நீட்டி உள்ளது அதன் மேல் கண்விளக்கு ஐந்து அடுக்குகளாக உள்ளது அதன் மேல் ஐந்து தலை நாகம் படமெடுத்த நிலையில் உள்ளது. அனந்தக் கிருஷ்ணன் கருவறை முன்பும் அர்த்தமண்டபம் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடுவில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

கருவறைகள்

நாகராஜ கோவிலில் நாகரம்மன்/நாகராஜா, சிவபெருமான் மற்றும் அனந்தகிருஷ்ணன் ஆகிய மூல தெய்வங்களுக்கான மூன்று கருவறைகள் உள்ளன.

நாகரம்மன்/நாகராஜா கருவறை: நாகரம்மன் கருவறை மண்சுவரால் ஆனது மற்றும் மூங்கில் கம்புகளின் மேல் ஓலை வேயப்பட்ட கூரை கொண்டது. காலத்தால் முந்திய நாகரம்மன் கருவறை 6 அடி நீளம் 5 அடி அகலமும் 6.5 அடி உயரமும் கொண்டது. நாகராஜா கோவில் மூலவரான நாகருக்கு கருவறை முன்பு பலிபீடம், வாகனம் இல்லை. நாகரம்மன் அல்லது நாகராஜா சிலை நான்கு தலைகள் கொண்ட கற்சிலை ஐந்தாவது தலை உடைந்த நிலையில் உள்ளது. ஐந்து தலைகள் கொண்ட உலோக அங்கியால் போர்த்தப்பட்டுள்ள மூலவர் சிலை சுயம்பு சிலை என கூறப்படுகிறது.

சிவன் கருவறை: நாகரம்மன் கருவறைக்கு தெற்காக சிவன் கருவறை உள்ளது. இக்கருவறை 19-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. கருவறை 6.25 அடி நீளமும் 6 அடி அகலமும் 6.5 அடி உயரமும் கொண்டது. சிவலிங்கம் பரம பீடம், விஷ்ணு பீடம் உள்ளபட அரை அடி உயரத்தில் ஆவுடையாரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவன் கருவறை முன்பு நந்தி சிலை உள்ளது.

அனந்த கிருஷ்ணன் கருவறை: சிவன் கருவறைக்கு தெற்கே அனந்த கிருஷ்ணன் கருவறை உள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட அனந்த கிருஷ்ணன கருவறை 5.75 அடி நீளமும் 7.25 அடி அகலமும் 7.25 அடி உயரமும் கொண்டது. கருவறையில் அனந்ந்த கிருஷ்ணன் சிலையும் இருபுறங்களில் பாமா மற்றும் ருக்குமணி சிற்பங்களும் உள்ளன. கருவறையின் இடது பக்கம் உள்ள சிறிய அறையில் வேட்டைக் கிருஷ்ணன், வேட்டையம்மன், சக்கரத்தாழ்வார், விநாயகர் சிற்பங்கள் உள்ளன. தைத்திருவிழாவின் எட்டாவது நாள் பரிவேட்டையின் போது வேட்டைக் கிருஷ்ணன் சிலை ஊர்வலமாக கொண்டுச் செல்லப்படும்.

சிற்பங்கள்

கல் சிற்பங்கள்
உலோகச் சிற்பங்கள்
மரச் சிற்பங்கள்

வாகனங்கள்

திருவிழாக்கள்

வரலாறு

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.