நவசக்தி
நவசக்தி (1920) திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் தொடங்கி நடத்திய மாத இதழ். அரசியல், தமிழாய்வு ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் அளித்தது.
1960-ல் காங்கிரஸ் கட்சிக்காக நவசக்தி இதழை டி.எஸ்.சொக்கலிங்கம் மீண்டும் தொடங்கினார். அதுவும் நீடிக்கவில்லை. பின்னர் மீண்டும் அவ்விதழ் சிலகாலம் வெளிவந்தது.
வெளியீடு
தேசபக்தன்’ இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் அக்டோபர் 22, 1920-ஆம் நாள் நவசக்தி என்ற இதழைத் தொடங்கி 20 ஆண்டுகள் நடத்தினார். சிலம்பு 13- பரல் 11- என்பதைத் தமிழ் எண்களால் குறித்தது
உள்ளடக்கம்
நவசக்தி பெரும்பாலும் திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரின் கருத்துக்களையும் நூல்குறிப்புகளையும் தாங்கி வெளிவந்தது. தேசிய விடுதலைப்போராட்டம், காந்தியக் கருத்துக்களை வெளியிட்டது. கல்கி கிருஷ்ணமூர்த்தி இவ்விதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார்
மறுவெளியீடு
நவசக்தி என்ற பெயரில் பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் இதழ் வெளிவந்தது (பார்க்க நவசக்தி (காங்கிரஸ்) )
உசாத்துணை
- திருவிக பிறந்த நாள்: ஆசியாவிலேயே முதன்முதலில் தொழிற்சங்கம் ஏற்படுத்திய புரட்சித் தென்றல்-ஹிந்து தமிழ்
- இதழியல்கலை அன்றும் இன்றும்
- https://www.thamizham.net/ithazh/oldmag/om/om025-u8.htm
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.