நல்லூர்ச் சிறுமேதாவியார்
From Tamil Wiki
நல்லூர்ச் சிறுமேதாவியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்க இலக்கியம் தொகுப்பில் இவரது பாடல் ஒன்று உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
நல்லூர்ச் சிறுமேதாவியார் சங்க காலத்தைச் சேர்ந்த புலவர்.
இலக்கிய வாழ்க்கை
நல்லூர்ச் சிறுமேதாவியார் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் 282வது பாடலாக உள்ளது.
பாடல் வழி அறிய வரும் செய்திகள்
- வளையல்கள் தளர்தல், அல்குல் வரிப்பு வாடுதல், நெற்றி அழகை இழத்தல் ஆகியவை காதல் நோயின் ஆறிகுறிகளாக கூறப்பட்டுள்ளன.
- முகவாட்டம் அல்லது உடல் வாட்டம் ஒரு தீய நிமித்தமாகக் கருது வேலனை அழைத்து கழங்கை உருட்டி குறி கேட்கும் போக்கு இருந்துள்ளது.
- உவமை: கானவன் மலைச்சாரலில் அகில் மரத்தை சுடுவதால் உருவாகும் மணக்கும் புகை மழை பொழியக் காத்திருக்கும் மேகம் போல இருக்கும்.
பாடல் நடை
- நற்றிணை 282
தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ,
கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட,
நல் நுதல் சாய, படர் மலி அரு நோய்
காதலன் தந்தமை அறியாது, உணர்த்த,
அணங்குறு கழங்கின் முது வாய் வேலன்
கிளவியின் தணியின், நன்றுமன் சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை,
ஆடு மழை மங்குலின், மறைக்கும்
நாடு கெழு வெற்பனொடு அமைந்த, நம் தொடர்பே?
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.