நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர்
From Tamil Wiki
நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் (1857-1921) ஈழத்து தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர், பதிப்பாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை யாழ்ப்பாணம் அச்சுவேலியில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் 1904இல் அழகவல்லி என்ற நாவலை எழுதினார். சுந்தரன் செய்த தந்திரம் இவரின் இரண்டாவது நாவல். எஸ்தாக்கியர் நாடகம், பாலியக் கும்மி ஆகிய நூல்களை எழுதினார். ஈழநாட்டின் முதல் நாவலெனக் கருதப்படும் ’ஊசோன் பாலந்தை’ கதையை அச்சுவேலியில் அமைக்கப்பட்டிருந்த ஞானப்பிரகாச அச்சியந்திரசாலையில் 1891இல் பதிப்பித்தார். மேகவர்ணன், தாமோதரன், இரத்தின சிங்கம், சந்திரகாசன் கதை ஆகிய நாவல்களையும் பதிப்பித்தார்.
நூல் பட்டியல்
- எஸ்தாக்கியர் நாடகம் (1890)
- பாலியக் கும்மி (1886)
நாவல்கள்
- அழகவல்லி (1904)
- சுந்தரன் செய்த தந்திரம் (1905)
பதிப்பித்தவை
- மேகவர்ணன்
- தாமோதரன்
- இரத்தின சிங்கம்
- சந்திரகாசன் கதை
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.