தொம்பு பிலிப்பு
From Tamil Wiki
தொம்பு பிலிப்பு (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
தொம்பு பிலிப்பு இலங்கை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் பிறந்தார். தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையாகக் கற்றார்.
இலக்கிய வாழ்க்கை
தொம்தியோகு முதலியின் வேண்டுகோளுக்கேற்ப விசுவாச விளக்கமும், சத்திய வேதாகமத்தின் சுருக்கமுமான "ஞானானந்த புராணம்" நூலை 1104 விருத்தப் பாக்களால் பாடினார். அந்நூலை சென்னை ராயபுரம் அ. சவரியப்ப முதலியார் புதல்வரான ஜெகராவு முதலியார் பரிசோதித்து 1874-ல் வெளியிட்டார்.
நூல் பட்டியல்
- ஞானானந்த புராணம்
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.