under review

தொம்பு பிலிப்பு

From Tamil Wiki

தொம்பு பிலிப்பு (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

தொம்பு பிலிப்பு இலங்கை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் பிறந்தார். தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையாகக் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

தொம்தியோகு முதலியின் வேண்டுகோளுக்கேற்ப விசுவாச விளக்கமும், சத்திய வேதாகமத்தின் சுருக்கமுமான "ஞானானந்த புராணம்" நூலை 1104 விருத்தப் பாக்களால் பாடினார். அந்நூலை சென்னை ராயபுரம் அ. சவரியப்ப முதலியார் புதல்வரான ஜெகராவு முதலியார் பரிசோதித்து 1874-ல் வெளியிட்டார்.

பாடல் நடை

என்றினைய நிகழ்ந்தவண்ண மருளப்ப
னன்னைதன்பா லிசைப்ப வெய்திப்
பொன்னுடலம் வெயர்பொடிப்பப் பொருமியுள்ளம்
பறையடிப்பப் புலன்வாய் விம்ம
நின்றனன் மெய் தள்ளாடி நெடுந்தாரை
கண்பனிப்ப நிலத்தில் வீழ்ந்து
துன்றுமல ரடியிறைஞ்சித் தோன்றல்படுந்
துயரமெலாஞ் சொல்ல லுற்றன்

நூல் பட்டியல்

  • ஞானானந்த புராணம்

உசாத்துணை


✅Finalised Page