துரை. மணிகண்டன்
துரை. மணிகண்டன் (பிறப்பு: 1973) எழுத்தாளர், கணினித்தமிழ் ஆய்வாளர். கணினித்தமிழ் சார்ந்த நூல்கள் எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
துரை. மணிகண்டன் தஞ்சை மாவட்டம் கச்சமங்கலத்தில் துரைக்கண்ணு முத்துராஜா, சவுந்தரவள்ளி பாண்டுரார் இணையருக்கு 1973இல் பிறந்தார். பள்ளிப்படிப்பை கச்சமங்கலம் அரசுபள்ளியில் பயின்றார். மேலநிலைக் கல்வியைத் திருக்காட்டுப்பள்ளி சர். சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். திருச்சிராப்பள்ளித் தூயவளனார் கல்லூரியில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் பட்டங்கள் பெற்றார். 2007இல் தேசியக்கல்லூரியில் முனைவர்ப் பட்டம் பெற்றார்.
தமிழ் கணிணிக்கு செய்த பங்களிப்புகள்
தமிழ் இணையம் என்ற தலைப்பில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உரைகள் நிகழ்த்தினார். கணினித்தமிழ் சார்ந்த நான்கு நூல்கள் எழுதினார். இணையமும் தமிழும் என்ற நூல் திருச்சிராப்பள்ளி ஈ.வெ. ராமசாமி அரசு கலைக் கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டது. 2010இல் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடத்தப்பட்ட தமிழ் இணைய மாநாட்டில் இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வாசித்தார்.
விருது
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் என்ற நூலுக்குத் திருச்சிராப்பள்ளி, முத்தமிழ்க் கலைப் பண்பாட்டு மையம் வழங்கும் படைப்பியல் பட்டயம் 2010 சான்றிதழ் வழங்கப்பட்டது.
நூல்கள்
- இணையமும் தமிழும்
- இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
- இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்
- கணிப்பொறியும் இணையத்தமிழ வரலாறும்
- தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள்
- ஒப்பிலக்கியப் படைப்பும் திறனாய்வும்
- ஊடகவியல்
- இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழிக் கல்வி
உசாத்துணை
இணைப்புகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.