தி. வே. கோபாலையர்
தி. வே. கோபாலையர் (ஜனவரி 22, 1929 - ஏப்ரல் 1, 2007) தமிழறிஞராகவும், பதிப்பாசிரியராகவும், சொற்பொழிவாளராகவும், பன்மொழி அறிஞராகவும் அறியப்படுகிறார். இவருடைய ஆழ்ந்த பழந்தமிழ் இலக்கண, இலக்கிய புலமைக்காக ஆய்வாளர்களிடையில் பெரிதும் மதிக்கப்படுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு, கல்வி
தி.வே. கோபாலையர் ஜனவரி 22, 1929 ஆம் ஆண்டு தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் வேங்கடசாமி ஐயர் மற்றும் லட்சுமி அம்மாள் தம்பதிகளுக்கு முதல் மகனாக பிறந்தார். இவருடன் 4 தம்பிகளும், 2 தங்கைகளும் உடன் பிறந்தவர்கள்.
தனிவாழ்க்கை
தி.வே. கோபாலையர் 1949-இல் ருக்மணி அம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ராமச்சந்திரன் என்ற மகனும் மற்றும் புஷ்கலா என்ற மகளும் பிறந்தனர்.
பங்களிப்பு
விருதுகள்
மறைவு
புதுவையில் வாழ்ந்த தி. வே. கோபாலையர் ஏப்ரல் 1, 2007 ஆம் ஆண்டு தற்போதைய திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் உள்ள தமது மகளின் வீட்டில், 82 ஆம் வயதில் உடல்நிலைக்குறைவால் மறைந்தார்.