standardised

திருவேகம்பமுடையார் திருவந்தாதி: Difference between revisions

From Tamil Wiki
(Moved Category Stage markers to bottom and added References)
No edit summary
Line 22: Line 22:


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamilvu.org/courses/degree/a041/a0412/html/a0412663.htm elakkiya varalaru]
* [https://www.tamilvu.org/courses/degree/a041/a0412/html/a0412663.htm கபில தேவநாயனார் இயற்றிய நூல்கள் (tamilvu.org)]
* மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
* மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
* [https://drive.google.com/file/d/1zatejPYZFgVvb84osofvRA1_deOWdOKn/view திருவேகம்பமுடையார் திருவந்தாதி_(1945).pdf - Google Drive]
* [https://drive.google.com/file/d/1zatejPYZFgVvb84osofvRA1_deOWdOKn/view திருவேகம்பமுடையார் திருவந்தாதி_(1945).pdf - Google Drive]
* https://ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua/146608/1/%E0%AE%BF-%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AF%8D-%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.html
* [https://ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua/146608/1/%E0%AE%BF-%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AF%8D-%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.html திருவேகம்பமுடையார் திருவந்தாதி | ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua]
 
{{Standardised}}
{{ready for review}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 23:15, 21 April 2022

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்

திருவேகம்பமுடையார் (திருஏகம்பமுடையார்) திருவந்தாதி என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான அந்தாதி வகையில் அமைந்த நூல். சைவ நூல். இந்நூல் நம்பியாண்டார் நம்பியின் திருமுறைத் தொகுப்பில் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

நூல் பற்றி

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரைத் துதிக்கும் பாடல்கள் இவை. கட்டளைக் கலித்துறை வடிவத்தில் அந்தாதியாக அமைந்து 100 பாடல்களைக் கொண்டது. துதிப்பாடல்கள் அகத்துறையில் அமைந்துள்ளன. அர்த்த நாரீசுவரத் தோற்றம் புகழப்படுகிறது. தலங்களின் பெயர் கூறித் துதிக்கும் தன்மையுடையது. துதியும், அகத்துறையும் மாறிமாறிப் பத்துப் பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை இயற்றியவர் திருவொற்றியூரைச் சேர்ந்த பட்டணத்துப் பிள்ளையார் எனப்படும் பட்டினத்தடிகள். இந்நூல் ‘மெய்த்தொண்டர்’ என்று தொடங்கி ‘மெய்த்தொண்டரே’ என முடிகிறது. அந்தாதி நூல் அமையும் முறை இது.

பாடல் நடை

கட்டளைக்கலித்துறை

மெய்த்தொண்டர் செல்லும் நெறியறியேன் மிக நற்பணிசெய்
கைத்தொண்டர் தம்மிலு நற்றொண்டு வந்தில னுண்பதற்கே
பொய்த்தொண்டு பேசிப் புறம்புறமே யுன்னைப் போற்றுகின்ற
வித்தொண்டனென் பணி கொள்ளுதியோ கச்சியேகம்பனே

திருவந்தாதி

பெற்றுகந் தேனென்று மர்ச்சனை செய்யப் பெருகு நின்சீர்
கற்றுகந் தேனென் கருத்தினிதாக்கச் சியேகம்பத்தின்
பற்றுகந் தேறுமுகந் தவனே படநாகக் கச்சின்
சுற்றுகந் தேர்விடைமேல் வருவாய் நின்றுணையடியே

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.