under review

திருவரங்கத்தமுதனார்

From Tamil Wiki
Revision as of 17:42, 9 April 2022 by Ramya (talk | contribs) (Created page with "திருவரங்கத்தமுதனார் தமிழ்ப்புலவர். ராமானுஜர் நூற்றந்தாதி முக்கியமான படைப்பு == வாழ்க்கைக் குறிப்பு == திருவரங்கத்தில் அணியரங்கத்தமுதனாருக்கு மகனாகப் பிறந்தார். மூங்கிற்குட...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

திருவரங்கத்தமுதனார் தமிழ்ப்புலவர். ராமானுஜர் நூற்றந்தாதி முக்கியமான படைப்பு

வாழ்க்கைக் குறிப்பு

திருவரங்கத்தில் அணியரங்கத்தமுதனாருக்கு மகனாகப் பிறந்தார். மூங்கிற்குடியில் பிறந்தார். வைணவ சமய நூல்களைக் கற்றார். திருவரங்கம் பெரிய கோயில் ஆசாரியராய் இருந்தார். ’பெரிய நம்பி’ என்பது சிறப்புப் பெயர். இவருடைய வழிமரபினர் திருவரங்கம் வடக்குச் சித்திரை வீதியில் குடியிருந்து கோயில் சிறப்புகளைப் பெற்று வருகின்றனர்.

இலக்கிய வாழ்க்கை

திருவரங்கத்தமுதனார் தன் ஆசிரியர் ராமானுஜர் மீது ராமானுஜர் நூற்றந்தாதி பாடினார். இது கலித்துறையில் அமைந்தது. இதில் ராமானுஜர், ஆழ்வார்கள், சில ஆசாரிகளையும் புகழந்து பாடப்பட்டது. திருவரங்கர் கோயில் முன்பு அரங்கேறியது.

பாடல் நடை

ராமானுஜர் நூற்றந்தாதி

பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னு மாற னடிப்பணிந் துய்ந்தவன் பல்கலையோர்
தாமன்ன வந்த இராமா நுசன்சர ணாரவிந்தம்
நாமன்னி வாழ்நெஞ் சேசொல்லு வோமவன் நாமங்களே

நூல் பட்டியல்

  • ராமானுஜர் நூற்றந்தாதி

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.