திருஞானசம்பந்த உபாத்தியாயர்
From Tamil Wiki
Revision as of 21:15, 16 June 2023 by Logamadevi (talk | contribs)
திருஞானசம்பந்த உபாத்தியாயர் (1839-1906) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
திருஞானசம்பந்த உபாத்தியாயர் இலங்கை யாழ்ப்பாணம் சுளிபுரத்தில் 1839-ல் செல்வநாயகச் செட்டியாருக்கு மகனாகப் பிறந்தார். ஆறுமுக நாவலரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். கந்தபுராணம், பெரியபுராணம், பாரதம் ஆகிய நூல்களைப் பயின்றார்.
இலக்கிய வாழ்க்கை
விரிவுரையாற்றும் செறிவுள்ள கவிகள் பாடினார். தனிப்பாடல்கள் பல பாடினார். 'மாணிக்கப்பிள்ளையார் திருவருட்பா', 'கதிர்காம வேலவர் திருவருட்பா' ஆகிய இரு நூல்கள் எழுதினார்.
மறைவு
திருஞானசம்பந்த உபாத்தியாயர் 1906-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- மாணிக்கப்பிள்ளையார் திருவருட்பா
- கதிர்காம வேலவர் திருவருட்பா
உசாத்துணை
✅Finalised Page