being created

திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி

From Tamil Wiki
Revision as of 22:15, 21 August 2023 by Tamizhkalai (talk | contribs) (Created page with "திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி (திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி) திருச்செந்தூர் முருகனின் மேல் பாடப்பட்ட அந்தாதி என்னும் சிற்றிலக்கியம் . யமக அணியுடன் உதடுகள் ஒட்டா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி (திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி) திருச்செந்தூர் முருகனின் மேல் பாடப்பட்ட அந்தாதி என்னும் சிற்றிலக்கியம் . யமக அணியுடன் உதடுகள் ஒட்டாமல் படிக்கப்படும்படி அமைந்துள்ளதால் நிரோட்டக யமக அந்தாதி என்று பெயர் பெற்றது.

ஆசிரியர்

திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதியை இயற்றியவர் சிவப்பிரகாச சுவாமிகள். தன்னுடைய கு அண்ணாமலை ரெட்டிக்காக திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதியைப் பாடி அவரது பகைவரைத் தோற்கடித்தார்.

நூல் அமைப்பு

நிரோட்டகம் = நிர்+ஓட்டகம் ( உதடுகள்). உதடுகள் ஒட்டாமல், பகரம் மகரம் கலவாது பாடப்படுவது நிரோட்டகப் பாடல். நிரோட்டகம் மிறைக்கவி இனத்தைச் சேர்ந்தது. ஒரு அடியில் பல இடங்களிலோ அல்லது பல அடிகளிலோ, வந்த எழுத்துத் தொடர்களே மீண்டும் வந்து வேறு வேறு பொருளைத் தருவது யமகம். பார்க்க: மடக்கணி

திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதியில் நிரோட்டகமாக யமகத்தில் அமைந்த முப்பது கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் அந்தாதித் தொடையில் இயற்றப்பட்டுள்ளன.


   

பாடல் நடை

யானைக்கண்டங்கரி

யானைக்கண் டங்கரி சென்றேத் தெழிற்செந்தி லின்றடைந்தே
யானைக்கண் டங்கரி யற்கங் கயிலையை யேய்ந்ததகை
யானைக்கண் டங்கரி சேரெண்டிக் காக்கினற் கீநலிசை
யானைக்கண் டங்கரி தாகிய சீர்க்கதி யெய்தினனே. 1

யானைக்கண்‌+தங்கு+அரி சென்றேத்து எழிற்செந்திலின்றடைந்தே யான்+ஐகண்டம்‌+அரியற்கு அங்கயிலையை ஏய்ந்ததகை ஆன்+ ஐக்கு+ அண்டம் +கரிசேர் எண்‌ திக்கு ஆக்கினர்க்கு, ஈநல்‌ இசையானைக்+ கண்டு+ அங்கு அரிதாகிய சீர்க்கதி எய்தினனே <poem>

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.