திருச்சி பாரதன்
ர. தங்கவேலன் (திருச்சி பாரதன்) (செப்டம்பர் 30, 1954-நவம்பர் 26, 2008) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், நாடக ஆசிரியர். சிறார்களுக்கான பல படைப்புகளைத் தந்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர்.
பிறப்பு, கல்வி
ர. தங்கவேலன் என்னும் இயற்பெயர் கொண்ட திருச்சி பாரதன், செப்டம்பர் 30, 1954 அன்று, திருச்சியில், கோ. ரங்கசாமி-காமாட்சி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வி இறுதி வகுப்பை முடித்தார்.
தனி வாழ்க்கை
திருச்சி பாரதன், திருச்சி வெல்லமண்டியில் சில மாதங்கள் கணக்கராகப் பணிபுரிந்தார் பிறகு, திருச்சி ‘தினந்தந்தி’ இதழில் செய்தி ஆசிரியராக பணியாற்றினார். 32 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். மனைவி: கிருஷ்ணம்மாள்.
இலக்கிய வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.