தினத்தந்தி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "தினத்தந்தி ( 1942) தமிழ் நாளிதழ். தமிழ் நாளிதழ்களில் விற்பனையில் முதலிடம் பெற்றிருக்கிறது. எளியமொழியில் நேரடியாகச் செய்திகளை வெளியிடுவதில் முன்னோடியானது. தொடக்கம் சி.பா.ஆதித்த...")
 
No edit summary
Line 1: Line 1:
தினத்தந்தி ( 1942) தமிழ் நாளிதழ். தமிழ் நாளிதழ்களில் விற்பனையில் முதலிடம் பெற்றிருக்கிறது. எளியமொழியில் நேரடியாகச் செய்திகளை வெளியிடுவதில் முன்னோடியானது.  
தினத்தந்தி ( 1942) தமிழ் நாளிதழ். தமிழ் நாளிதழ்களில் விற்பனையில் முதலிடம் பெற்றிருக்கிறது. எளியமொழியில் நேரடியாகச் செய்திகளை வெளியிடுவதில் முன்னோடியானது.  


தொடக்கம்
== தொடக்கம் ==
சி.பா.ஆதித்தனார் மதுரையில் இருந்து மதுரை முரசு என்னும் வாரம் இருமுறை செய்தியிதழை 1942 ல் நடத்தினார். அது தடைசெய்யப்படவே தமிழன் என்னும் இதழை 1942ல் நடத்தினார். அதை நடத்திக்கொண்டிருக்கையிலேயே தினத்தந்தி என்னும் நாளிதழை நடத்த 15-அக்டோபர்-1042ல் பதிவுசெய்தார். தினத்தந்தி முதலில் 500 பிரதிகள் அச்சிடப்பட்டன. ஓரிரு மாதங்களிலேயே எட்டாயிரம் பிரதிகள் அச்சிடும் நிலை உருவானது. மிகவிரைவாகவே தினத்தந்தி வெற்றிகரமான நாளிதழாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டது.


சி.பா.ஆதித்தனார் 1942ல் சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பியதுமே
== தினத்தந்தியின் வெற்றிக்கு காரணங்கள் ==
தினத்தந்தியின் வெற்றிக்குக் காரணங்கள் என சில குறிப்பிடப்படுகின்றன. 1942ல் உலக அளவில் இரண்டாம் உலகப்போரும்,இந்தியாவில் சுதந்திரப்போராட்டமும் உச்சம் கொண்டிருந்தன. இந்தியர்களில் ஏராளமானவர்களின் உறவினர்கள் போர் நிகழ்ந்த  வெளிநாடுகளில் வாழ்ந்தனர்.  பலர் ராணுவத்தில் இருந்தனர். போர்க்காலமாகையால் விலைவாசிகளும் ஏறிக்கொண்டிருந்தன. ஆகவே இந்தியாவெங்கும் மக்கள் செய்திகளை வாசிக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். இந்திய செய்திச்சந்தையின் உச்சகட்ட காலமே அதுதான். அப்போதுதான் இந்தியாவில் தொடங்கப்பட்ட பெரும்பாலான நாளிதழ்கள் பெரிய நிறுவனங்களாக வளர்ந்தன. தினத்தந்தி அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டது.
 
தினத்தந்திதான் தமிழக நாளிதழ்களில் சென்னைக்கு வெளியிலிருந்து வந்த முதல் நாளிதழ்.அக்காலத்தில் செய்திகள் தந்திவழியாகவே பரிமாறப்பட்டன. தந்திக்கான செலவை தினத்தந்தி மட்டுமே ஏற்கவேண்டும் என்பது கூடுதல் செலவாக இருந்தாலும் தமிழகத்தின் மையத்தில் மதுரை இருந்தமையால் மற்ற நாளிதழ்கள் சென்றடையாத தென்தமிழ்நாட்டுப்பகுதிகளுக்கு தினத்தந்தி விரைவில் சென்றடைந்தது. .
 
அதுவரை வந்த நாளிதழ்களிலிருந்து தினத்தந்தி மாறுபட்டிருந்தது. அன்றைய செய்திகளை மறுநாளே வெளியிடவேண்டும் என்னும் உறுதியை தினத்தந்தி கொண்டிருந்தது.  தினத்தந்தி செய்திகளை வெளியிட்டு கூடவே மற்ற நாளிதழ்களில் இச்செய்தி நாளைதான் வெளிவரும் என்று பிரசுரிக்கும் வழக்கம் கொண்டிருந்தது.
 
தினத்தந்தி அக்காலத்து அச்சிதழ்களுக்கு மாற்றாக மிகக்குறைவான கட்டணத்தில் விளம்பரங்களை வெளியிட்டது. ஆகவே அதுவரை விளம்பரம் வெளியிடும் எண்ணமில்லாதிருந்த வணிகர்கள் பலர் விளம்பரங்கள் அளிக்கும் வழக்கத்தை மேற்கொண்டனர். விளம்பரங்களின் கட்டணத்தை குறைத்து எண்ணிக்கையை பெருக்குவது  தினத்தந்தி  கடைப்பிடித்த வழியாக இருந்தது.
 
தினத்தந்தி ஒவ்வொரு ஊரிலும் முகவர்- செய்தியாளர் என இரு வேலைகளையும் செய்பவரை உருவாக்கியது. அவர் நாளிதழ் விற்பனையாளராகவும் பலசமயம் இருந்தார். ஆகவே மிகப்பரவலான உள்ளூர் செய்திகளை தினத்தந்தி வெளியிட்டது. மிகச்சிறிய ஊர்களில் இருந்தும் விளம்பரங்களைப் பெற்றது.
 
மற்ற நாளிதழ்களிலிருந்து மாறுபட்டு தினத்தந்தி செய்திகளுக்கு இணையாகவே கேளிக்கை விஷயங்களையும் வெளியிட்டது. சினிமாச்செய்திகள், நாடகச்செய்திகள், கருத்துப்படங்கள், கதைகள் வெளியிட்டது
 
== தினத்தந்தியின் அமைப்பு ==
தினத்தந்தி ஆங்கில எளிய நாளிதழ்களின் பக்கவடிவமைப்பு முறையையும், செய்திகளை அமைக்கும் முறையையும் பின்பற்றியது. மிகப்பெரிய எழுத்துக்களில் தலைப்புகள் அமைந்தன. அவை கொட்டை எழுத்துத் தலைப்புகள் எனப்பட்டன. பல ஆச்சரியக்குறிகள் கொண்டவை  தலைப்புகள் வாசகர்களை ஈர்ப்பவையாக இருந்தன. தலைப்புக்களை முழுச்சொற்றொடர்களில் அமைக்கும் பழைய வழக்கத்துக்கு மாறாக உடைந்த தனிச்சொற்களில் தலைப்புகளை வைத்தது. பரபரப்பான தலைப்புகள் தினத்தந்தியின் சிறப்பியல்புகள்.
 
தினத்தந்தியின் செய்திகளுக்கு எளிமையான ஒரு மாறாவடிவம் உருவாக்கப்பட்டது. தலைப்புக்கு கீழே முதல்பத்தியிலேயே செய்தி சுருக்கமாக அளிக்கப்படும். அதன் பின் பல துணைத்தலைப்புகளுடன் செய்தியின் பின்னணியும் நிகழ்வுகளும் விளைவுகளும் விளக்கப்படும். தொடர்செய்தி என்றால் முந்தைய செய்தி சுருக்கமாக அளிக்கப்படும்.
 
== தினத்தந்தியின் மொழி ==
தினத்தந்தி  இதழின் மொழிநடை அதன் வெற்றிக்கு முதன்மைக்காரணம். சி.பா.ஆதித்தனாரின் தமிழ்மொழிக் கொடை எனவும் அது கருதப்படுகிறது .அக்காலத்தில் வெளிவந்த நாளிதழ்கள் முறையாக தமிழ்கற்றவர்களை ஆசிரியர்களாக ஆக்கின. தமிழில் 1850கள் வரை பொதுவான உரைநடை என ஒன்று இல்லை. செய்தி உள்ளிட்ட அனைத்துமே செய்யுளில்தான் சொல்லப்பட்டன. செய்யுள்நடையே கற்றோருக்கு உகந்த மொழிநடையாக இருந்தது. பின்னர் உரைநடை உருவாகி வந்தபோதுகூட அது செய்யுளின் சாயலையே கொண்டிருந்தது. அத்துடன் அன்று நாளிதழ்களில் செய்திகளை ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்து வெளியிட்டனர்.
 
தினத்தந்தி மக்கள் பேசும் மொழிக்கு அணுக்கமான, மிகமிக எளிமையான மொழிநடையை உருவாக்கிக் கொண்டது. செய்திகளை மொழியாக்கம் செய்யாமல் அவற்றின் சாராம்சத்தை பேச்சுமொழிக்கு அணுக்கமான மொழிநடைக்கு

Revision as of 21:44, 30 March 2022

தினத்தந்தி ( 1942) தமிழ் நாளிதழ். தமிழ் நாளிதழ்களில் விற்பனையில் முதலிடம் பெற்றிருக்கிறது. எளியமொழியில் நேரடியாகச் செய்திகளை வெளியிடுவதில் முன்னோடியானது.

தொடக்கம்

சி.பா.ஆதித்தனார் மதுரையில் இருந்து மதுரை முரசு என்னும் வாரம் இருமுறை செய்தியிதழை 1942 ல் நடத்தினார். அது தடைசெய்யப்படவே தமிழன் என்னும் இதழை 1942ல் நடத்தினார். அதை நடத்திக்கொண்டிருக்கையிலேயே தினத்தந்தி என்னும் நாளிதழை நடத்த 15-அக்டோபர்-1042ல் பதிவுசெய்தார். தினத்தந்தி முதலில் 500 பிரதிகள் அச்சிடப்பட்டன. ஓரிரு மாதங்களிலேயே எட்டாயிரம் பிரதிகள் அச்சிடும் நிலை உருவானது. மிகவிரைவாகவே தினத்தந்தி வெற்றிகரமான நாளிதழாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டது.

தினத்தந்தியின் வெற்றிக்கு காரணங்கள்

தினத்தந்தியின் வெற்றிக்குக் காரணங்கள் என சில குறிப்பிடப்படுகின்றன. 1942ல் உலக அளவில் இரண்டாம் உலகப்போரும்,இந்தியாவில் சுதந்திரப்போராட்டமும் உச்சம் கொண்டிருந்தன. இந்தியர்களில் ஏராளமானவர்களின் உறவினர்கள் போர் நிகழ்ந்த வெளிநாடுகளில் வாழ்ந்தனர். பலர் ராணுவத்தில் இருந்தனர். போர்க்காலமாகையால் விலைவாசிகளும் ஏறிக்கொண்டிருந்தன. ஆகவே இந்தியாவெங்கும் மக்கள் செய்திகளை வாசிக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். இந்திய செய்திச்சந்தையின் உச்சகட்ட காலமே அதுதான். அப்போதுதான் இந்தியாவில் தொடங்கப்பட்ட பெரும்பாலான நாளிதழ்கள் பெரிய நிறுவனங்களாக வளர்ந்தன. தினத்தந்தி அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டது.

தினத்தந்திதான் தமிழக நாளிதழ்களில் சென்னைக்கு வெளியிலிருந்து வந்த முதல் நாளிதழ்.அக்காலத்தில் செய்திகள் தந்திவழியாகவே பரிமாறப்பட்டன. தந்திக்கான செலவை தினத்தந்தி மட்டுமே ஏற்கவேண்டும் என்பது கூடுதல் செலவாக இருந்தாலும் தமிழகத்தின் மையத்தில் மதுரை இருந்தமையால் மற்ற நாளிதழ்கள் சென்றடையாத தென்தமிழ்நாட்டுப்பகுதிகளுக்கு தினத்தந்தி விரைவில் சென்றடைந்தது. .

அதுவரை வந்த நாளிதழ்களிலிருந்து தினத்தந்தி மாறுபட்டிருந்தது. அன்றைய செய்திகளை மறுநாளே வெளியிடவேண்டும் என்னும் உறுதியை தினத்தந்தி கொண்டிருந்தது. தினத்தந்தி செய்திகளை வெளியிட்டு கூடவே மற்ற நாளிதழ்களில் இச்செய்தி நாளைதான் வெளிவரும் என்று பிரசுரிக்கும் வழக்கம் கொண்டிருந்தது.

தினத்தந்தி அக்காலத்து அச்சிதழ்களுக்கு மாற்றாக மிகக்குறைவான கட்டணத்தில் விளம்பரங்களை வெளியிட்டது. ஆகவே அதுவரை விளம்பரம் வெளியிடும் எண்ணமில்லாதிருந்த வணிகர்கள் பலர் விளம்பரங்கள் அளிக்கும் வழக்கத்தை மேற்கொண்டனர். விளம்பரங்களின் கட்டணத்தை குறைத்து எண்ணிக்கையை பெருக்குவது தினத்தந்தி கடைப்பிடித்த வழியாக இருந்தது.

தினத்தந்தி ஒவ்வொரு ஊரிலும் முகவர்- செய்தியாளர் என இரு வேலைகளையும் செய்பவரை உருவாக்கியது. அவர் நாளிதழ் விற்பனையாளராகவும் பலசமயம் இருந்தார். ஆகவே மிகப்பரவலான உள்ளூர் செய்திகளை தினத்தந்தி வெளியிட்டது. மிகச்சிறிய ஊர்களில் இருந்தும் விளம்பரங்களைப் பெற்றது.

மற்ற நாளிதழ்களிலிருந்து மாறுபட்டு தினத்தந்தி செய்திகளுக்கு இணையாகவே கேளிக்கை விஷயங்களையும் வெளியிட்டது. சினிமாச்செய்திகள், நாடகச்செய்திகள், கருத்துப்படங்கள், கதைகள் வெளியிட்டது

தினத்தந்தியின் அமைப்பு

தினத்தந்தி ஆங்கில எளிய நாளிதழ்களின் பக்கவடிவமைப்பு முறையையும், செய்திகளை அமைக்கும் முறையையும் பின்பற்றியது. மிகப்பெரிய எழுத்துக்களில் தலைப்புகள் அமைந்தன. அவை கொட்டை எழுத்துத் தலைப்புகள் எனப்பட்டன. பல ஆச்சரியக்குறிகள் கொண்டவை தலைப்புகள் வாசகர்களை ஈர்ப்பவையாக இருந்தன. தலைப்புக்களை முழுச்சொற்றொடர்களில் அமைக்கும் பழைய வழக்கத்துக்கு மாறாக உடைந்த தனிச்சொற்களில் தலைப்புகளை வைத்தது. பரபரப்பான தலைப்புகள் தினத்தந்தியின் சிறப்பியல்புகள்.

தினத்தந்தியின் செய்திகளுக்கு எளிமையான ஒரு மாறாவடிவம் உருவாக்கப்பட்டது. தலைப்புக்கு கீழே முதல்பத்தியிலேயே செய்தி சுருக்கமாக அளிக்கப்படும். அதன் பின் பல துணைத்தலைப்புகளுடன் செய்தியின் பின்னணியும் நிகழ்வுகளும் விளைவுகளும் விளக்கப்படும். தொடர்செய்தி என்றால் முந்தைய செய்தி சுருக்கமாக அளிக்கப்படும்.

தினத்தந்தியின் மொழி

தினத்தந்தி இதழின் மொழிநடை அதன் வெற்றிக்கு முதன்மைக்காரணம். சி.பா.ஆதித்தனாரின் தமிழ்மொழிக் கொடை எனவும் அது கருதப்படுகிறது .அக்காலத்தில் வெளிவந்த நாளிதழ்கள் முறையாக தமிழ்கற்றவர்களை ஆசிரியர்களாக ஆக்கின. தமிழில் 1850கள் வரை பொதுவான உரைநடை என ஒன்று இல்லை. செய்தி உள்ளிட்ட அனைத்துமே செய்யுளில்தான் சொல்லப்பட்டன. செய்யுள்நடையே கற்றோருக்கு உகந்த மொழிநடையாக இருந்தது. பின்னர் உரைநடை உருவாகி வந்தபோதுகூட அது செய்யுளின் சாயலையே கொண்டிருந்தது. அத்துடன் அன்று நாளிதழ்களில் செய்திகளை ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்து வெளியிட்டனர்.

தினத்தந்தி மக்கள் பேசும் மொழிக்கு அணுக்கமான, மிகமிக எளிமையான மொழிநடையை உருவாக்கிக் கொண்டது. செய்திகளை மொழியாக்கம் செய்யாமல் அவற்றின் சாராம்சத்தை பேச்சுமொழிக்கு அணுக்கமான மொழிநடைக்கு