தாமரை (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
mNo edit summary
Line 1: Line 1:
[[File:57463 303165886498314 1249801623260847096 o.jpg|thumb|204x204px]]
[[File:57463 303165886498314 1249801623260847096 o.jpg|thumb|204x204px]]
Under Progress Thangapandiyan
தாமரை இதழ் 1958- ல் தொடங்கப்பட்ட தமிழ் இலக்கிய இதழ். ப. ஜீவானந்தத்தின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்தது.
தாமரை இதழ் 1958- ல் தொடங்கப்பட்ட தமிழ் இலக்கிய இதழ். ப. ஜீவானந்தத்தின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்தது.



Revision as of 13:05, 23 February 2022

57463 303165886498314 1249801623260847096 o.jpg

தாமரை இதழ் 1958- ல் தொடங்கப்பட்ட தமிழ் இலக்கிய இதழ். ப. ஜீவானந்தத்தின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்தது.

தோற்றம்

'தாமரை' இலக்கிய மாத இதழ் ப. ஜீவானந்தத்தை ஆசிரியராகவும் மாஜினியைத் துணை ஆசிரியராகவும் கொண்டு 1958 இல் தொடங்கப்பட்டது.

ஆசிரியர்

தாமரை இதழின் முதல் ஆசிரியர் ப. ஜீவானந்தம். ஜீவானந்தத்திற்குப் பிறகு மாஜினி பொறுப்பேற்றார். 1960 களில் தி.க.சிவசங்கரன் ஆ.பழனியப்பன், கே. ராமசாமி ஆகியோரைக் கொண்ட ஆசிரியர் குழு தாமரையை நடத்தியது. இவர்களது ஆசிரியர் பொறுப்பில் தாமரை பத்தாண்டுகள் வெளிவந்தது. 1965 முதல் 1973 வரை 100 இதழ்கள் வரை தி.க.சி. ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்தார். தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கம் இவ்விதழின் தற்போதைய ஆசிரியர் சி.மகேந்திரன். ஆசிரியர் குழு, பொன்னீலன், தேவ. பேரின்பன்.

இதழ் நோக்கம்

முற்போக்கு இயக்கங்களின் சார்பில் அரசியல் சார்ந்தும், கலை இலக்கியம் சார்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கும் இதழ்களில் முக்கியமானது 'தாமரை' இலக்கிய மாத இதழ்.

தாமரை இதழ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இலக்கிய இதழாகும். 1960 களின் முற்பகுதியில் ப. ஜீவானந்தத்தின் முயற்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் தாமரை இலக்கிய மாத இதழும் தொடங்கப்பட்டன.  சோவியத் ரஷ்யா உள்ளிட்ட உலக இலக்கியங்களையும், பிற இந்திய மொழிகளின் படைப்புகளையும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது. முற்போக்கு பாணி புதுக் கவிதைகளும், ஆசிய, ஆப்பிரிக்க விடுதலைக் கவிஞர்களின் படைப்புகளைத் தமிழிலும் வெளியிட்டது.

Image 261.png

படைப்புகள், படைப்பாளிகள்

அப்போதைய புதிய எழுத்தாளர்கள் பலரை தாமரை ஊக்குவித்து வளர்த்துள்ளது. பின்னாளில் தமிழின் சிறந்த சிறுகதையாளர்களாக அறியப்பட்ட பொன்னிலன், பூமணி, வண்ணநிலவன், பா.செயப்பிரகாசம், கந்தர்வன், ச. தமிழ்ச் செல்வன், தனுஷ்கோடி ராமசாமி, மேலாண்மை பொன்னுசாமி, பிரபஞ்சன் போன்ற பலரும் தாமரை இதழில் ஆரம்பகாலங்களில் எழுதியவர்கள். சிற்பி, புவியரசு, இன்குலாப், நா. காமராசன் தமிழ் நாடன், பாலா, மே.து. ராசுகுமார் எனப் பலரும் தாமரையில் எழுதியுள்ளனர். கா.சிவத்தம்பி, ஆர். நல்லகண்ணு, ஆ.சிவசுப்பரமணியன், வல்லிக்கண்ணன் சோலை சுந்தரபெருமாள், செ. கணேசலிங்கன், விழி. பா. இதயவேந்தன், மு.முருகேஷ் , அ. வெண்ணிலா, தலை முறை எழுத்தாளர்களும் தாமரையில் பங்களிப்பு செய்து வருகின்றனர்.

ஜீவாவின் பாரதியார் பற்று, பழந்தமிழ் ஈடுபாடு உள்ளிட்ட பல முக்கியமான கட்டுரைகள் தாமரை இதழில் வெளிவந்துள்ளன. முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட கதை, கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம், நேர்காணல் போன்றவை வெளியாகி வருகின்றன. ’தாமரை இதழ் சிறுகதைகளில் விளிம்புநிலை மக்கள்’ என்ற தலைப்பில் புதுச்சேரி, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளது.

Image221.png
Image222.png

சிறப்பிதழ்கள்

வியட்நாம் போராட்ட சிறப்பிதழ், சிறுகதை சிறப்பிதழ், புதுமைப்பித்தன் மலர், கரிசல் இலக்கிய மலர் என பல சிறப்பிதழ்கள் வெளியிட்டு அவற்றில் சிறுகதைகளுக்கு முக்கிய இடம் தந்தது தாமரை.

மதிப்பீடு

தி.க.சிவசங்கரன் தாமரை இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த 1965 முதல் 1972 வரையிலான ஏழு ஆண்டுகள் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் முக்கியமான் காலம்.

முற்போக்கு இலக்கிய வளர்ச்சியில் தாமரையின் பங்கு முக்கியமானது. இடது எதிர்ப்பாளர்கள் கூடத் தாமரையின் சிறுகதைக்கான பங்களிப்பை மறுத்ததில்லை.

சிறுகதைகள் குறித்த ஆய்வுக்கட்டுரைகள், கலாநிதி கைலாசபதி, கா.சிவத்தம்பி, நா.வானமாமலை போன்ற ஆய்வாளர்களின் கட்டுரைகள், சிறுகதைகள் பற்றிய தொடர் விவாதங்கள் ஆகியவற்றுடன் சிறுகதைப்போட்டிகளையும் தாமரை அவ்வப்போது நடத்தியுள்ளது.

இலக்கிய விமர்சனங்களைக் குறைத்துக்கொண்டு, இலக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவதாக தாமரை மீது ஒரு குற்றச்சாட்டும் உண்டு.

உசாத்துணை

தமிழில் சிறு பத்திரிகைகள் - வல்லிக்கண்ணன்

தாமரை இதழ் சிறுகதைகளில் விளிம்புநிலை மக்கள்