தம்பிமார் கதை
From Tamil Wiki
தம்பிமார் கதை கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ள கதைப்பாடல்.
தம்பிமார் கதை
திருவிதாங்கூர் நாட்டை ராமவர்மத் தம்புரான் ஆண்டு வந்த போது திருவிதாங்கூரிலும், திருவனந்தபுரத்திலும், பத்மநாபபுரத்திலும் பெரிய பெரிய துரைமார்கள் வாழ்ந்தனர். மன்னரின் கட்டளைப்படி நாட்டில் ஆறாட்டும், திருவிழா முறையாக நடந்தன. சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் மார்கழி திருவிழாவைக் காண மன்னர் வந்தார்.