தமிழன்பன்: Difference between revisions
(Corrected text format issues) |
|||
Line 2: | Line 2: | ||
ஈரோடு தமிழன்பன் (செப்டம்பர் 28, 1933) தமிழ்க் கவிஞர். பாரதிதாசன் பரம்பரையினரின் மரபிலக்கியத்தில் இருந்து புதுக்கவிதைக்கு வந்தவர். வானம்பாடி கவிதை இயக்கத்தைச் சேர்ந்தவர். | ஈரோடு தமிழன்பன் (செப்டம்பர் 28, 1933) தமிழ்க் கவிஞர். பாரதிதாசன் பரம்பரையினரின் மரபிலக்கியத்தில் இருந்து புதுக்கவிதைக்கு வந்தவர். வானம்பாடி கவிதை இயக்கத்தைச் சேர்ந்தவர். | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
இயற்பெயர் ந.ஜெகதீசன். ஈரோடு மாவட்டம் சென்னிமலை என்ற ஊரில் வாழ்ந்த செ.இரா.நடராஜன்- வள்ளியம்மாள் இணையரின் மகனாக செப்டம்பர் 28, 1933 அன்று பிறந்தார். தனிப்பாடல் திரட்டு | இயற்பெயர் ந.ஜெகதீசன். ஈரோடு மாவட்டம் சென்னிமலை என்ற ஊரில் வாழ்ந்த செ.இரா.நடராஜன்- வள்ளியம்மாள் இணையரின் மகனாக செப்டம்பர் 28, 1933 அன்று பிறந்தார். இவருக்கு தமையர் இருவர், தம்பியர் ஐவர், தங்கை ஒருவர். | ||
[[File:Erode tamilanban.jpg|thumb|தமிழன்பன்]] | |||
ஈரோடு தமிழன்பன் சென்னிமலையில் பள்ளிப் படிப்பையும், கரந்தைத் தமிழ்க் கல்லூரியிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்விப் படிப்பையும் முடித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டமும் தனிப்பாடல் திரட்டு ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். . | |||
== தனிவாழ்க்கை == | |||
ஈரோடு தமிழன்பன் 1972 அக்டோபர் 26ஆம் நாள் சாந்தகுமாரியை மணந்தார். பாப்லோ நெரூதா, பாரதிதாசன் என இரு மகன்கள். | |||
ஈரோடு தமிழன்பன் ஈரோட்டில் மதரசா இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியை தொடங்கினார். சென்னை, புதுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன்பின் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளாராக பணியாற்றினார். | |||
== பதவிகள் == | |||
தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். | |||
== இதழியல் == | |||
அரிமா நோக்கு என்னும் கலை- பண்பாட்டு இதழை ஈரோடு தமிழன்பன் நடத்தி வந்தார். | |||
== திரைப்படம் == | |||
ஈரோடு தமிழன்பன் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘அச்சமில்லை அச்சமில்லை’, ஹரிஹரன் இயக்கிய ‘நீயும் நானும் ‘ ஆகிய படங்களில் பாடல் இயற்றியுள்ளார். ‘வசந்தத்தில் ஒரு வானவில் ‘ எனும் படத்திற்கு இணை இயக்குநராகவும் கதைவசன ஆசிரியராகவும் பணியாற்றினார்.[[File:Erode tamilanban.jpg|thumb|தமிழன்பன்]] | |||
== இலக்கியவாழ்க்கை == | == இலக்கியவாழ்க்கை == | ||
பள்ளி மாணவனாக இருந்தபோதே 'சுய சிந்தனை' என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தியிருக்கிறார். முதல் கவிதை நூல் 1968-ல் 'கொடி காத்த குமரன்' வில்லுப்பாட்டு. விடிவெள்ளி, மலையமான் என பல புனைபெயர்களில் எழுதியபின் தமிழன்பன் என்னும் பெயர் நிலைத்தது. பாரதிதாசனுடன் பத்தாண்டுகள் (1954 முதல் 1964 வரை) பழகிய அனுபவம் கொண்டவர். 'நெஞ்சின் நிழல்கள்' என்னும் நாவல் பாரதிதாசன் பரிந்துரையால் சென்னை பாரி நிலையத்திலிருந்து 1965-ல் வெளியானது. ஆனால் தொடர்ந்து புனைவுகள் எழுதாமல் கவிஞராகவே நிலைகொண்டார். பாரதிதாசன் பரம்பரை கவிஞராக மரபுக்கவிதைகளை எழுதிவந்தவர் வானம்பாடி கவிதை இயக்கம் தொடர்புக்குப்பின் புதுக்கவிதையில் ஈடுபட்டார். ஹைக்கூ, சென்ரியூ, | பள்ளி மாணவனாக இருந்தபோதே 'சுய சிந்தனை' என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தியிருக்கிறார். முதல் கவிதை நூல் 1968-ல் 'கொடி காத்த குமரன்' வில்லுப்பாட்டு. விடிவெள்ளி, மலையமான் என பல புனைபெயர்களில் எழுதியபின் தமிழன்பன் என்னும் பெயர் நிலைத்தது. | ||
பாரதிதாசனுடன் பத்தாண்டுகள் (1954 முதல் 1964 வரை) பழகிய அனுபவம் கொண்டவர். 'நெஞ்சின் நிழல்கள்' என்னும் நாவல் பாரதிதாசன் பரிந்துரையால் சென்னை பாரி நிலையத்திலிருந்து 1965-ல் வெளியானது. ஆனால் தொடர்ந்து புனைவுகள் எழுதாமல் கவிஞராகவே நிலைகொண்டார். [[பாரதிதாசன் பரம்பரை]] கவிஞராக மரபுக்கவிதைகளை எழுதிவந்தவர் [[வானம்பாடி கவிதை இயக்கம்]] தொடர்புக்குப்பின் புதுக்கவிதையில் ஈடுபட்டார். | |||
ஈரோடு தமிழன்பன் ஜப்பானிய கவிதை வடிவங்களான ஹைக்கூ, சென்ரியூ ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். ஒரு வண்டி சென்ரியு (2001) என்னும் தொகுதி அந்த வடிவை தமிழில் அறிமுகம் செய்தது. லிமெரிக், ஹைகூ ஆகிய கவிதை வடிவங்களை இணைத்து டெட் பாக்கர் அறிமுகப்படுத்திய கவிதை வடிவமான லிமெரைக்கூவைச் சென்னிமலைக் கிளியோபாத்ராக்கள் (2002) என்னும் கவிதைத் தொகுதி வழியாக தமிழில் அறிமுகம் செய்தார். | |||
ஈரோடு தமிழன்பன் 60க்கும் மேற்பட்ட கவிதைத்தொகுதிகளையும், 6 பெருந்தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். | |||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
* தமிழக அரசின் கலைமாமணி விருது (1972) | * தமிழக அரசின் கலைமாமணி விருது (1972) | ||
* சாகித்ய அக்காதமி விருது வணக்கம் வள்ளுவ என்னும் கவிதைத் தொகுப்பிற்காக (2000) | * சாகித்ய அக்காதமி விருது வணக்கம் வள்ளுவ என்னும் கவிதைத் தொகுப்பிற்காக (2000) | ||
* பாஷோ விருது, உலகத்தமிழ் ஹைக்கூ மன்றம் (2020) | * பாஷோ விருது, உலகத்தமிழ் ஹைக்கூ மன்றம் (2020) | ||
[[File:Erode Tamilanban sketch1.jpg|thumb|தமிழன்பன்]] | |||
== மொழியாக்கங்கள் == | |||
கனாக் காணும் வினாக்கள் (2004), இன்னும் சில வினாக்கள் (2015) எனும் வினாக்களாலான கவிதைத் தொகுதிகளை பேராசிரியர் கிரிகோரி ஜேம்ஸ் ஆங்கிலத்தில் Poems of Questions என்னும் பெயரில் ஒரே நூலாக வெளியிட்டுள்ளார். பேராசிரியர் கிரிகோரி ஜேம்ஸ், லொரைன் போக் இணைந்து Poemas de Preguntas என்னும் பெயரில் ஸ்பானிய மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. [[File:Erode Tamilanban sketch1.jpg|thumb|தமிழன்பன்]] | |||
== ஆய்வுநூல்கள்,தொகைநூல்கள் == | == ஆய்வுநூல்கள்,தொகைநூல்கள் == | ||
* ஈரோடு தமிழன்பன் கவிதைப் பரிமாணங்கள் (2003-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகம் கவிஞர் தமிழன்பன் கவிதைகள் குறித்து நடத்திய தேசியக் கருத்தரங்கில் படிக்கப்பெற்ற கட்டுரைகளின் முழுத் தொகுப்பு. தொகுப்பாசிரியர்கள் ய.மணிகண்டன், வ. ஜெயதேவன் | * ஈரோடு தமிழன்பன் கவிதைப் பரிமாணங்கள் (2003-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகம் கவிஞர் தமிழன்பன் கவிதைகள் குறித்து நடத்திய தேசியக் கருத்தரங்கில் படிக்கப்பெற்ற கட்டுரைகளின் முழுத் தொகுப்பு. தொகுப்பாசிரியர்கள் ய.மணிகண்டன், வ. ஜெயதேவன் | ||
* தமிழன்பன் மகாகவி- தி. அமிர்தகணேசன். | * தமிழன்பன் மகாகவி- தி. அமிர்தகணேசன். | ||
== நிகழ்வுகள் == | |||
2017 நவம்பர் 8 ல் அமெரிக்காவில் டல்லாஸ் நகரிலுள்ள மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கவிஞர் தி. அமிர்தகணேசன் முயற்சியால் ஈரோடு தமிழன்பனின் 1000 கவிதைகளை வாசிக்கும் கவிதைத் திருவிழா நடைபெற்றது | |||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
ஈரோடு தமிழன்பன் திராவிட இயக்கமும் இடதுசாரி இயக்கமும் பொதுவாகக் கொண்டிருக்கும் அரசியல், சமூகவியல் கருத்துக்களை யாப்பற்ற கவிதைவடிவில் நேரடியான மொழியில் முன்வைத்தவர். பாப்லோ நெரூதா, வால்ட் விட்மான் கவிதைகளின் நெகிழ்வான உரையாடல் பாணியை கைக்கொண்டு எழுதப்பட்ட கவிதைகள் மேடைகளில் இருந்து நேரடியாக பொதுவாசகர்களை நோக்கி பேசுபவை. | ஈரோடு தமிழன்பன் திராவிட இயக்கமும் இடதுசாரி இயக்கமும் பொதுவாகக் கொண்டிருக்கும் அரசியல், சமூகவியல் கருத்துக்களை யாப்பற்ற கவிதைவடிவில் நேரடியான மொழியில் முன்வைத்தவர். பாப்லோ நெரூதா, வால்ட் விட்மான் கவிதைகளின் நெகிழ்வான உரையாடல் பாணியை கைக்கொண்டு எழுதப்பட்ட கவிதைகள் மேடைகளில் இருந்து நேரடியாக பொதுவாசகர்களை நோக்கி பேசுபவை. பாரதிதாசன் பரம்பரைக்கும் வானம்பாடி இலக்கிய இயக்கத்துக்குமான தொடர்புச்சரடு என ஈரோடு தமிழன்பனை வரையறை செய்யலாம். | ||
[[File:Erode.jpg|thumb|தமிழன்பன் தொகைநூல்]] | [[File:Erode.jpg|thumb|தமிழன்பன் தொகைநூல்]] | ||
[[File:தமிழன்பன்23.jpg|thumb|தமிழன்பன் ஆய்வுநூல்]] | [[File:தமிழன்பன்23.jpg|thumb|தமிழன்பன் ஆய்வுநூல்]] | ||
Line 219: | Line 245: | ||
|} | |} | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://erodetamilanban.com/ ஈரோடு தமிழன்பன் இணையப்பக்கம்] | |||
* [https://eluthu.com/kavignar/Erode-Tamilanban.php ஈரோடு தமிழன்பன் கவிதைகள் | Erode Tamilanban Kavithaigal (eluthu.com)] | * [https://eluthu.com/kavignar/Erode-Tamilanban.php ஈரோடு தமிழன்பன் கவிதைகள் | Erode Tamilanban Kavithaigal (eluthu.com)] | ||
* [https://www.panippookkal.com/ithazh/archives/2821 கவிஞர் ஈரோடு தமிழன்பன்: பனிப்பூக்கள்] | * [https://www.panippookkal.com/ithazh/archives/2821 கவிஞர் ஈரோடு தமிழன்பன்: பனிப்பூக்கள்] | ||
* [https://web.archive.org/web/20110724024037/http://thatstamil.oneindia.in/art-culture/essays/2006/tamilanban.html ஒன் இந்தியா-தமிழன்பன் சிறப்புப் பேட்டி] | * [https://web.archive.org/web/20110724024037/http://thatstamil.oneindia.in/art-culture/essays/2006/tamilanban.html ஒன் இந்தியா-தமிழன்பன் சிறப்புப் பேட்டி] | ||
* [https://www.hindutamil.in/news/literature/203632--1.html குன்றாத செயலூக்கம்! | குன்றாத செயலூக்கம்! - hindutamil.in] | * [https://www.hindutamil.in/news/literature/203632--1.html குன்றாத செயலூக்கம்! | குன்றாத செயலூக்கம்! - hindutamil.in] | ||
* [ | * [https://nellaipasanga.blogspot.com/2016/08/blog-post_46.html ஈரோடு தமிழன்பன் (nellaipasanga.blogspot.com)] | ||
* [https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/29939-2015-12-21-06-25-33 தமிழன்பன் ஒரு மகாகவி - நூல் விமர்சனம்] | * [https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/29939-2015-12-21-06-25-33 தமிழன்பன் ஒரு மகாகவி - நூல் விமர்சனம்] | ||
* [https://youtu.be/ZWCaiK00MuI யுகபாரதி 4 நூல்கள் வெளியீட்டு விழா-தமிழன்பன் உரை காணொளி] | * [https://youtu.be/ZWCaiK00MuI யுகபாரதி 4 நூல்கள் வெளியீட்டு விழா-தமிழன்பன் உரை காணொளி] |
Revision as of 09:41, 6 November 2023
ஈரோடு தமிழன்பன் (செப்டம்பர் 28, 1933) தமிழ்க் கவிஞர். பாரதிதாசன் பரம்பரையினரின் மரபிலக்கியத்தில் இருந்து புதுக்கவிதைக்கு வந்தவர். வானம்பாடி கவிதை இயக்கத்தைச் சேர்ந்தவர்.
பிறப்பு, கல்வி
இயற்பெயர் ந.ஜெகதீசன். ஈரோடு மாவட்டம் சென்னிமலை என்ற ஊரில் வாழ்ந்த செ.இரா.நடராஜன்- வள்ளியம்மாள் இணையரின் மகனாக செப்டம்பர் 28, 1933 அன்று பிறந்தார். இவருக்கு தமையர் இருவர், தம்பியர் ஐவர், தங்கை ஒருவர்.
ஈரோடு தமிழன்பன் சென்னிமலையில் பள்ளிப் படிப்பையும், கரந்தைத் தமிழ்க் கல்லூரியிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்விப் படிப்பையும் முடித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டமும் தனிப்பாடல் திரட்டு ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். .
தனிவாழ்க்கை
ஈரோடு தமிழன்பன் 1972 அக்டோபர் 26ஆம் நாள் சாந்தகுமாரியை மணந்தார். பாப்லோ நெரூதா, பாரதிதாசன் என இரு மகன்கள். ஈரோடு தமிழன்பன் ஈரோட்டில் மதரசா இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியை தொடங்கினார். சென்னை, புதுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன்பின் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளாராக பணியாற்றினார்.
பதவிகள்
தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.
இதழியல்
அரிமா நோக்கு என்னும் கலை- பண்பாட்டு இதழை ஈரோடு தமிழன்பன் நடத்தி வந்தார்.
திரைப்படம்
ஈரோடு தமிழன்பன் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘அச்சமில்லை அச்சமில்லை’, ஹரிஹரன் இயக்கிய ‘நீயும் நானும் ‘ ஆகிய படங்களில் பாடல் இயற்றியுள்ளார். ‘வசந்தத்தில் ஒரு வானவில் ‘ எனும் படத்திற்கு இணை இயக்குநராகவும் கதைவசன ஆசிரியராகவும் பணியாற்றினார்.
இலக்கியவாழ்க்கை
பள்ளி மாணவனாக இருந்தபோதே 'சுய சிந்தனை' என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தியிருக்கிறார். முதல் கவிதை நூல் 1968-ல் 'கொடி காத்த குமரன்' வில்லுப்பாட்டு. விடிவெள்ளி, மலையமான் என பல புனைபெயர்களில் எழுதியபின் தமிழன்பன் என்னும் பெயர் நிலைத்தது.
பாரதிதாசனுடன் பத்தாண்டுகள் (1954 முதல் 1964 வரை) பழகிய அனுபவம் கொண்டவர். 'நெஞ்சின் நிழல்கள்' என்னும் நாவல் பாரதிதாசன் பரிந்துரையால் சென்னை பாரி நிலையத்திலிருந்து 1965-ல் வெளியானது. ஆனால் தொடர்ந்து புனைவுகள் எழுதாமல் கவிஞராகவே நிலைகொண்டார். பாரதிதாசன் பரம்பரை கவிஞராக மரபுக்கவிதைகளை எழுதிவந்தவர் வானம்பாடி கவிதை இயக்கம் தொடர்புக்குப்பின் புதுக்கவிதையில் ஈடுபட்டார்.
ஈரோடு தமிழன்பன் ஜப்பானிய கவிதை வடிவங்களான ஹைக்கூ, சென்ரியூ ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். ஒரு வண்டி சென்ரியு (2001) என்னும் தொகுதி அந்த வடிவை தமிழில் அறிமுகம் செய்தது. லிமெரிக், ஹைகூ ஆகிய கவிதை வடிவங்களை இணைத்து டெட் பாக்கர் அறிமுகப்படுத்திய கவிதை வடிவமான லிமெரைக்கூவைச் சென்னிமலைக் கிளியோபாத்ராக்கள் (2002) என்னும் கவிதைத் தொகுதி வழியாக தமிழில் அறிமுகம் செய்தார்.
ஈரோடு தமிழன்பன் 60க்கும் மேற்பட்ட கவிதைத்தொகுதிகளையும், 6 பெருந்தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.
விருதுகள்
- தமிழக அரசின் கலைமாமணி விருது (1972)
- சாகித்ய அக்காதமி விருது வணக்கம் வள்ளுவ என்னும் கவிதைத் தொகுப்பிற்காக (2000)
- பாஷோ விருது, உலகத்தமிழ் ஹைக்கூ மன்றம் (2020)
மொழியாக்கங்கள்
கனாக் காணும் வினாக்கள் (2004), இன்னும் சில வினாக்கள் (2015) எனும் வினாக்களாலான கவிதைத் தொகுதிகளை பேராசிரியர் கிரிகோரி ஜேம்ஸ் ஆங்கிலத்தில் Poems of Questions என்னும் பெயரில் ஒரே நூலாக வெளியிட்டுள்ளார். பேராசிரியர் கிரிகோரி ஜேம்ஸ், லொரைன் போக் இணைந்து Poemas de Preguntas என்னும் பெயரில் ஸ்பானிய மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது.
ஆய்வுநூல்கள்,தொகைநூல்கள்
- ஈரோடு தமிழன்பன் கவிதைப் பரிமாணங்கள் (2003-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகம் கவிஞர் தமிழன்பன் கவிதைகள் குறித்து நடத்திய தேசியக் கருத்தரங்கில் படிக்கப்பெற்ற கட்டுரைகளின் முழுத் தொகுப்பு. தொகுப்பாசிரியர்கள் ய.மணிகண்டன், வ. ஜெயதேவன்
- தமிழன்பன் மகாகவி- தி. அமிர்தகணேசன்.
நிகழ்வுகள்
2017 நவம்பர் 8 ல் அமெரிக்காவில் டல்லாஸ் நகரிலுள்ள மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கவிஞர் தி. அமிர்தகணேசன் முயற்சியால் ஈரோடு தமிழன்பனின் 1000 கவிதைகளை வாசிக்கும் கவிதைத் திருவிழா நடைபெற்றது
இலக்கிய இடம்
ஈரோடு தமிழன்பன் திராவிட இயக்கமும் இடதுசாரி இயக்கமும் பொதுவாகக் கொண்டிருக்கும் அரசியல், சமூகவியல் கருத்துக்களை யாப்பற்ற கவிதைவடிவில் நேரடியான மொழியில் முன்வைத்தவர். பாப்லோ நெரூதா, வால்ட் விட்மான் கவிதைகளின் நெகிழ்வான உரையாடல் பாணியை கைக்கொண்டு எழுதப்பட்ட கவிதைகள் மேடைகளில் இருந்து நேரடியாக பொதுவாசகர்களை நோக்கி பேசுபவை. பாரதிதாசன் பரம்பரைக்கும் வானம்பாடி இலக்கிய இயக்கத்துக்குமான தொடர்புச்சரடு என ஈரோடு தமிழன்பனை வரையறை செய்யலாம்.
நூல்கள்
வெளியான ஆண்டு | நூலின் பெயர் | வகை | பதிப்பகம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
தமிழன்பன் கவிதைகள் | கவிதை | மரபுக்கவிதைத்தொகுதி | ||
நெஞ்சின் நிழல் | நாவல் | |||
1970 | சிலிர்ப்புகள் | கவிதை | பாரி நிலையம் | மரபுக்கவிதைத்தொகுதி |
தீவுகள் கரையேறுகின்றன | கவிதை | பூம்புகார் பதிப்பகம் | ||
தோணிகள் வருகின்றன | கவிதை | |||
1982 | அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் | கவிதை | பூம்புகார் பதிப்பகம் | |
காலத்திற்கு ஒரு நாள் முந்தி | கவிதை | பூம்புகார் பதிப்பகம் | ||
1985 | Tamil thahu | கவிதை | பூம்புகார் பதிப்பகம் | |
ஊமை வெயில் | கவிதை | பூம்புகார் பதிப்பகம் | ||
குடை ராட்டினம் | பாடல் | குழந்தைப்பாடல்கள் | ||
சூரியப் பிறைகள் | கவிதை | ஹைக்கூ கவிதைகள் | ||
1990 | என்னைக்கவர்ந்த பெருமானார் (ஸல்) | சொற்பொழிவு | இசுலாமிய நிறுவனம் ட்ரஸ்ட், சென்னை | அக்டோபர் 22, 1989-ல் ஜமாஅத்தே இஸ்லாமி என்னும் அமைப்பின் வேலூர் கிளையில் ஆற்றிய மிலாடிநபி உரை |
1990 | கண்ணுக்கு வெளியே சில கனாக்கள் | கவிதை | நர்மதா பதிப்பகம் | |
1995 | என் வீட்டுக்கு எதிரே ஓர் எருக்கஞ் செடி | கவிதை | பாப்லோ பாரதி பதிப்பகம் | |
1998 | நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும் | கவிதை | பூம்புகார் பதிப்பகம் | |
1999 | அணைக்கவா என்ற அமெரிக்கா | கவிதை | பூம்புகார் பதிப்பகம் | |
1999 | உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்.... வால்ட் விட்மன் | கவிதை | பாப்லோ பாரதி பதிப்பகம் | |
2000 | பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் | கட்டுரைகள் | விழிகள் பதிப்பகம் | |
2000 | வணக்கம் வள்ளுவ! | கவிதை | பூம்புகார் பதிப்பகம் | சாகித்ய அகாடமி விருது |
2002 | சென்னிமலைக் கிளிளோப்பாத்ராக்கள் | கவிதை | பாப்லோ பாரதி பதிப்பகம் | |
2002 | வார்த்தைகள் கேட்ட வரம் | கவிதை | விழிகள் பதிப்பகம் | |
2002 | மதிப்பீடுகள் | திறனாய்வு | மருதா | |
2003 | இவர்களோடும் இவற்றோடும் | கவிதை | விழிகள் பதிப்பகம் | |
2004 | கனாக்காணும் வினாக்கள் | கவிதை | விழிகள் பதிப்பகம் | |
2004 | மின்னல் உறங்கும் போது | கவிதை | ஸ்ரீ துர்க்கா பதிப்பகம் | |
2005 | கதவைத் தட்டிய பழைய காதலி | கவிதை | விழிகள் பதிப்பகம் | |
2005 | விடியல் விழுதுகள் | கவிதை | பூம்புகார் பதிப்பகம் | |
2005 | கவின் குறு நூறு | கவிதை | பாப்லோ பாரதி பதிப்பகம் | |
2007 | பாப்லோ நெருதா பார்வையில் இந்தியா | கட்டுரை | பாப்லோ நெருதா ஸ்பானிய-லத்தீன் அமெரிக்க ஆய்வு நிறுவனம் | |
2008 | இடுகுறிப் பெயரில்லை இஸ்லாம் | ரஹ்மத் அறக்கட்டளை | ||
2008 | ஓலைச்சுவடியும் குறுந்தகடும் | கவிதை | விடிவெள்ளி வெளியீடு | |
2008 | சொல்ல வந்தது.... | கவிதை | முத்தமிழ்ப் பதிப்பகம் |
உசாத்துணை
- ஈரோடு தமிழன்பன் இணையப்பக்கம்
- ஈரோடு தமிழன்பன் கவிதைகள் | Erode Tamilanban Kavithaigal (eluthu.com)
- கவிஞர் ஈரோடு தமிழன்பன்: பனிப்பூக்கள்
- ஒன் இந்தியா-தமிழன்பன் சிறப்புப் பேட்டி
- குன்றாத செயலூக்கம்! | குன்றாத செயலூக்கம்! - hindutamil.in
- ஈரோடு தமிழன்பன் (nellaipasanga.blogspot.com)
- தமிழன்பன் ஒரு மகாகவி - நூல் விமர்சனம்
- யுகபாரதி 4 நூல்கள் வெளியீட்டு விழா-தமிழன்பன் உரை காணொளி
- பூவரசி விருதுகள்-தமிழன்பன் உரை காணொளி
- தமிழன்பன் பிடித்த பத்து தினமணி
- ஈரோடு தமிழன்பன் உரை- கவிக்கோ நினைவேந்தல் - YouTube
✅Finalised Page