ஜெகவீரபாண்டியன்
ஜெகவீர பாண்டியனார் (ஜெகவீர பாண்டியன்; செகவீர பாண்டியன்; செகவீர பாண்டியனார்; கவிராச பண்டிதர் செகவீர பாண்டியனார்; கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்) (மார்ச் 10, 1886 - ஜூன் 17, 1967) தமிழறிஞர், புலவர், எழுத்தாளர், பதிப்பாளர். வீரபாண்டியக் கட்டபொம்மன் மரபில் வந்தவர். இலக்கிய நூல்கள் சிலவற்றுக்கு உரை எழுதிப் பதிப்பித்தார். கம்பனைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து சில நூல்களை எழுதினார். தமிழக அரசு ஜெகவீரபாண்டியனின் நூல்களை நாட்டுடைமை ஆக்கியது.
பிறப்பு, கல்வி
ஜெகவீரபாண்டியன் என்னும் ஜெகவீரபாண்டியனார், மார்ச் 10, 1886 அன்று, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒட்டநத்தத்தில், பெருமாள்சாமி-ஆவுடையம்மாள் இணையருக்குப் பிறந்தார். ஆரம்பக்கல்வியை உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். ஐந்தாம் வகுப்போடு பள்ளிக் கல்வி நின்றுபோனது. தொடர்ந்து சுய விருப்பத்தில் சிவானந்த சுவாமிகள், இலக்கண முத்தையா போன்ற புலவர்களிடம் இலக்கண, இலக்கியங்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார். பாடல்கள் எழுதுமளவிற்குப் புலமை பெற்றார். தமிழோடு ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றார்.
தனி வாழ்க்கை
ஜெகவீரபாண்டியனார், உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். சொற்பொழிவாளராகத் தன்னை வளர்த்துக் கொண்டார். மணமானவர். இவருக்கு மூன்று ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை.
இலக்கிய வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.