ச. இராமலிங்க ஐயர்

From Tamil Wiki
Revision as of 13:33, 10 February 2022 by Ramya (talk | contribs) (Created page with "ச. இராமலிங்க ஐயர் (பொயு 1649) தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். வடமொழியிலிருந்து தமிழுக்கு சந்தானதீபிகையை மொழிபெயர்த்தார். == பிறப்பு, கல்வி == ச. இராமலிங்க ஐயர் சந்திரச...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ச. இராமலிங்க ஐயர் (பொயு 1649) தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். வடமொழியிலிருந்து தமிழுக்கு சந்தானதீபிகையை மொழிபெயர்த்தார்.

பிறப்பு, கல்வி

ச. இராமலிங்க ஐயர் சந்திரசேகர ஐயரின் மகனாக பொயு 1649 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தார். இராமலிங்க முனிவர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் சிறுவயதிலேயே வடமொழி தென்மொழி இரண்டையும் கற்றுத் தேர்ந்தார். வேத ஆகம இதிகாச புராணங்கள், சோதிட சாத்திரங்களையும் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

பொயு 1667 ஆம் ஆண்டு ஈழத்தில் முதன் முதலாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்து வெளிப்படுத்தினார். இது ஆரியபடசித்தாந்தத்தை ஆதாரமாகக்கொண்டு வருசி முனிவரின் வாக்கியவிதிப்படி அமைந்தது. இதுவே இலங்கையில் தற்போதும் விளங்கும் வாக்கிய பஞ்சாங்கம்.

சந்தானதீபிகை எனும் சோதிட நூலை 1713-ல் மொழிபெயர்த்தார். இது இராமலிங்க முனிவர் இல்லறத்தோர்க்கு அவசியமாகிய சந்தான பலன்களை விளக்கும் வடமொழியில் அமைந்த நூல். புரசைப் பாக்கம் விவேக விளக்க அச்சுக்கூடத்தில் 1868-ல் அச்சிடப்பட்டது. சு. நடராசையர் பரிசோதித்துப் பொழிப்புரை செய்தார். ச.இ. சிவராமலிங்கையர் 1901, 1940 ஆம் ஆண்டுகளில் இருமுறை பதிப்பித்தார்.

நூல்கள் பட்டியல்

  • சந்தானதீபிகை (1901, 1904)

உசாத்துணை