ச.வி. சங்கர நாராயணன்: Difference between revisions
Logamadevi (talk | contribs) |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
Line 19: | Line 19: | ||
* [https://www.youtube.com/watch?v=ORIb0za6ctc சங்கர நாராயணன் ஏற்புரை | விறலி - நூல் வெளியீட்டு விழா] | * [https://www.youtube.com/watch?v=ORIb0za6ctc சங்கர நாராயணன் ஏற்புரை | விறலி - நூல் வெளியீட்டு விழா] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 11:24, 11 February 2024
ச.வி. சங்கர நாராயணன் (பிறப்பு: மே 28, 1989) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ச.வி. சங்கர நாராயணன் சிவகங்கையில் விஸ்வநாதன், சீதா இணையருக்கு மே 28, 1989-ல் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு சகோதரர். மணப்பாறை லட்சுமி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பயின்றார். பிஷப் ஹீபர் கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
ச.வி. சங்கர நாராயணன் மார்ச் 27, 2023-ல் லஷ்மியை மணந்தார்.
இலக்கிய வாழ்க்கை
2016-ல் ச.வி. சங்கர நாராயணனின் முதல் சிறுகதை வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பு 'விறலி' 2022-ல் வெளியானது. இவரின் சிறுகதைகள் பதாகை, சொல்வனம், நடுகல், யாவரும், வாசகசாலை ஆகிய இதழ்களில் வெளிவந்தன.
இலக்கிய இடம்
“விறலி தொகுப்பின் பல கதைகளை நவீனத்துவத்தின் கிளாசிக் கதைகளுக்குப் பக்கத்தில் வைத்துப் பார்க்க முடிகிறது. அளவாகத் தேர்ந்து கொள்ளும் வார்த்தைகளும் சொல்முறையும் நான்கு ஐந்து பக்கங்களுக்குள் அடங்கிவிடும் கதைகளும் அசோகமித்திரன், வண்ணநிலவன் போன்றோரின் படைப்புலகத்துக்கு நெருக்கமாக இருக்கின்றன.” என கார்த்திக் பாலசுப்ரமணியன் மதிப்பிடுகிறார்.
நூல் பட்டியல்
சிறுகதைத் தொகுப்பு
- விறலி (2022, சால்ட்)
உசாத்துணை
- சங்கரின் சிறுகதைத் தொகுதி 'விறலி': கார்த்திக் பலசுப்ரமணியன் முன்னுரை.
- சங்கர நாராயணன் ஏற்புரை | விறலி - நூல் வெளியீட்டு விழா
✅Finalised Page