சேவல்கட்டு (நாவல்)
From Tamil Wiki
Revision as of 13:35, 16 May 2022 by Dr.P.Saravanan (talk | contribs)
‘சேவல்கட்டு’ (2009) எழுத்தாளர் ம. தவசி எழுதிய நாவல். இது, மூன்று தலைமுறைகளாகச் சேவல்கட்டில் தன் மனத்தைப் பறிகொடுத்து அதிலிருந்து மீளமுடியாமல் சொத்தையும் வாழ்க்கையையும் தொலைத்தவர்களைப் பற்றியது. இது ம. தவசியின் முதல் நாவல். இந்த நாவல்தான் ம. தவசிக்கு 2011-ல் இளைஞர்களுக்கு சாகித்திய அகாதமி வழங்கும் ‘யுவ புரஸ்கார்’ விருதைப் பெற்றுத்தந்தது.
உருவாக்கம், வெளியீடு
‘சேவல்கட்டு’ நாவலை 2009இல் புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்டது. இதன் இரண்டாம் பதிப்பு 2016இல் வெளிவந்தது.