செ. செல்லப்பன்
From Tamil Wiki
செ. செல்லப்பன் (செல்லப்பச் செட்டியார் செல்லப்பன்) (மே 04, 1922 – நவம்பர் 07, 1996) பதிப்பாளர். மதுரையில் மீனாட்சி புத்தக நிலையம் என்ற பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தினார். ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், தொ.மு.சி. ரகுநாதன், தி. ஜானகிராமன் போன்றோரது நூல்களைப் பதிப்பித்தார். மீனாட்சி புத்தக நிலைய வெளியீடுகளில் சில சாகித்ய அகாதமி விருது பெற்றன.