சுரதா: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "சுரதா ( ) தமிழ்க் கவிஞர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் என அறியப்பட்டவர்களில் ஒருவர். மரபுக்கவிதைகள் எழுதியவர். உவமைக்கவிஞர் என அழைக்கப்பட்டார். திரைப்படப் பாடல்களும் எழுதிய...")
 
No edit summary
Line 5: Line 5:
சுரதாவின் இயற்பெயர் த. இராசகோபாலன். பழைய தஞ்சை மாவட்டத்தில் பழையன்னூர் என்னும் ஊரில் அர.திருவேங்கடம் - சண்பகம் இணையருக்கு 23 நவம்பர் 1921 ல் பிறந்தார்.இவருக்கு ஒரு தமக்கை, வேதவல்லி.
சுரதாவின் இயற்பெயர் த. இராசகோபாலன். பழைய தஞ்சை மாவட்டத்தில் பழையன்னூர் என்னும் ஊரில் அர.திருவேங்கடம் - சண்பகம் இணையருக்கு 23 நவம்பர் 1921 ல் பிறந்தார்.இவருக்கு ஒரு தமக்கை, வேதவல்லி.


இராஜாமடம், ஒரத்தநாடு ஆகிய ஊர்களில் இலவச மாணவர்விடுதிகளில் தங்கி பள்ளியிறுதி வரை கல்வி பயின்ற சுரதா ஆறுமுக பத்தர், சிங்காரவேலு நயினார், மெய்யக்கோனார், அரங்கசாமிப் பிள்ளை, கோவிந்தராச நாட்டார், சாமி வேலாயுதம் பிள்ளை போன்றவர்களிடம் தமிழ் கற்றார். சீர்காழி அருணாச்சல தேசிகரிடம் தமிழிலக்கணம் பயின்றார்.
இராஜாமடம், ஒரத்தநாடு ஆகிய ஊர்களில் இலவச மாணவர்விடுதிகளில் தங்கி பள்ளியிறுதி வரை கல்வி பயின்ற சுரதா ஆறுமுக பத்தர், சிங்காரவேலு நயினார், மெய்யக்கோனார், அரங்கசாமிப் பிள்ளை, கோவிந்தராச நாட்டார், சாமி வேலாயுதம் பிள்ளை போன்றவர்களிடம் தமிழ் கற்றார். சீர்காழி அருணாச்சல தேசிகரிடம் தமிழிலக்கணம் பயின்றார்.


தனிவாழ்க்கை
தனிவாழ்க்கை


சுரதா தன் 18 ஆம் வயதில் பாரதிதாசனை புதுச்சேரிக்குச் சென்று சந்தித்தார். சிலகாலம் பாரதிதாசனிடம் உதவியாளராக இருந்தார். இதழியலிலும் திரைத்துறையிலும் பணியாற்றிய சுரதா முழுக்க முழுக்க எழுத்தைச் சார்ந்தே வாழ்ந்தார்.
சுரதா தன் 18 ஆம் வயதில் பாரதிதாசனை புதுச்சேரிக்குச் சென்று சந்தித்தார். சிலகாலம் பாரதிதாசனிடம் உதவியாளராக இருந்தார். இதழியலிலும் திரைத்துறையிலும் பணியாற்றிய சுரதா முழுக்க முழுக்க எழுத்தைச் சார்ந்தே வாழ்ந்தார்.
சுரதாவுவின் மனைவி பெயர் சுலோசனா. அவருக்கு ஒரே மகன், கல்லாடன் . மருமகள் பெயர் இராசேசுவரி கல்லாடன்.  இளங்கோவன், இளஞ்செழியன் என இரு பெயரர்கள்.
இலக்கியவாழ்க்கை
பாரதிதாசனின் உதவியாளராக இருந்த சுரதா பாரதிதாசன் மீது கொண்ட பற்றால் சுப்புரத்தினதாசன் என பெயரை மாற்றிக்கொண்டார். அதைச் சுருக்கி சுரதா என ஆக்கினார். பாரதிதாசனை பதின்வயதில் சென்று சந்தித்தபோது அவர் ஏதேனும் கவிதை பாடக்கேட்டதாகவும் உடனே சுரதா ‘நடுவிரல்போல் தலைதூக்கு - நம் நாட்டாரின் இன்னலைப் போக்கு’ என்று தொடங்கும் கவிதையை பாடி அவர் பாராட்டைப் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. பாரதிதாசனின் எழுத்துக்களை செம்பிரதி எடுப்பது, அவர் நடத்திய இதழ்களில் உதவிசெய்வது ஆகியவற்றைச் செய்துவந்த சுரதா அவ்விதழ்களில் குறிப்புகளையும் எழுதினார்.
சுரதா நாமக்கல் கவிஞரின் உதவியாளராகவும் சிலகாலம் பணியாற்றினார்.
சிறுகதை
சுரதா எழுதிய முதல் கதை [[பிரசண்ட விகடன்]] இதழில் வெளிவந்த கவி அமரன். அந்தக் கதையை வெளியிட்ட [[நாரண துரைக்கண்ணன்]] சுரதாவை ஊக்குவித்து நிறைய எழுதத் தூண்டினாலும் சுரதா கதைகளை அதிகமாக எழுதவில்லை, கவிதையிலேயே நாட்டம் கொண்டிருந்தார்.
நாடகம்
சுரதா 1942ல் , தன் 21 ஆம் வயதில் [[முருகு சுப்ரமணியன்]] , பெரியண்ணன், இராம சுப்பையா, கிருட்டினராசு ஆகியோர் நடத்திவந்த முத்தமிழ் நிலையம் என்னும் நாடகக்குழுவில் நடிகராகச் சேர்ந்தார். அவர்கள் பாரதிதாசனின் புரட்சிக்கவி என்னும் நாடகத்தை தமிழகத்தின் பல பகுதிகளில் நடித்தனர்.  1944ல் இன்ப இரவு என்னும் நாடகத்திலும் நடித்தார்.
சுரதா சுஜாதா என்னும் நாடகத்தை எழுதினார். அதன் ஒலிவடிவை வானொலியில் கேட்ட கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி அவரை திரைத்துறைக்கு அறிமுகம் செய்தார்.
திரைப்படம்
சுரதா தன் 23 ஆம் வயதில் சினிமாத்துறையில் நுழைந்தார். 1949 ல்  [[பி.யூ. சின்னப்பா]] நடித்த மங்கையற்கரசி என்னும் படத்துக்கு உரையாடல் எழுதினார்.  அமரகவி (1952) ஜெனோவா (1953) ஆகிய படங்களுக்கு உரையாடல் எழுதினார்.  ஏறத்தாழ முப்பது படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார்
== இதழியல் ==
சுரதா நடத்திய இதழ்கள் பல
* காவியம் 1953
* இலக்கியம் 1958
* ஊர்வலம் 1963
* சுரதா 1968
* விண்மீன் 1964
* சுண்டல் 1974
சுரதா நடத்திய எந்த இதழும் நீண்டகாலம் வெளிவரவில்லை.
== அமைப்புச் செயல்பாடுகள் ==
சுரதா உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை என்னும் அமைப்பை தொடங்கி கவிஞர்களை ஒருங்கிணைத்து மாநாடுகளும் கூட்டங்களும் நடத்தினார். உலகத்தமிழ் கவிஞர் பேரவை சார்பில் படகு, கப்பல், விமானம் ஆகியவற்றில் கவியரங்குகளை நடத்தியிருக்கிறார்.

Revision as of 23:09, 23 September 2022

சுரதா ( ) தமிழ்க் கவிஞர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் என அறியப்பட்டவர்களில் ஒருவர். மரபுக்கவிதைகள் எழுதியவர். உவமைக்கவிஞர் என அழைக்கப்பட்டார். திரைப்படப் பாடல்களும் எழுதியிருக்கிறார்.

பிறப்பு, கல்வி

சுரதாவின் இயற்பெயர் த. இராசகோபாலன். பழைய தஞ்சை மாவட்டத்தில் பழையன்னூர் என்னும் ஊரில் அர.திருவேங்கடம் - சண்பகம் இணையருக்கு 23 நவம்பர் 1921 ல் பிறந்தார்.இவருக்கு ஒரு தமக்கை, வேதவல்லி.

இராஜாமடம், ஒரத்தநாடு ஆகிய ஊர்களில் இலவச மாணவர்விடுதிகளில் தங்கி பள்ளியிறுதி வரை கல்வி பயின்ற சுரதா ஆறுமுக பத்தர், சிங்காரவேலு நயினார், மெய்யக்கோனார், அரங்கசாமிப் பிள்ளை, கோவிந்தராச நாட்டார், சாமி வேலாயுதம் பிள்ளை போன்றவர்களிடம் தமிழ் கற்றார். சீர்காழி அருணாச்சல தேசிகரிடம் தமிழிலக்கணம் பயின்றார்.

தனிவாழ்க்கை

சுரதா தன் 18 ஆம் வயதில் பாரதிதாசனை புதுச்சேரிக்குச் சென்று சந்தித்தார். சிலகாலம் பாரதிதாசனிடம் உதவியாளராக இருந்தார். இதழியலிலும் திரைத்துறையிலும் பணியாற்றிய சுரதா முழுக்க முழுக்க எழுத்தைச் சார்ந்தே வாழ்ந்தார்.

சுரதாவுவின் மனைவி பெயர் சுலோசனா. அவருக்கு ஒரே மகன், கல்லாடன் . மருமகள் பெயர் இராசேசுவரி கல்லாடன். இளங்கோவன், இளஞ்செழியன் என இரு பெயரர்கள்.

இலக்கியவாழ்க்கை

பாரதிதாசனின் உதவியாளராக இருந்த சுரதா பாரதிதாசன் மீது கொண்ட பற்றால் சுப்புரத்தினதாசன் என பெயரை மாற்றிக்கொண்டார். அதைச் சுருக்கி சுரதா என ஆக்கினார். பாரதிதாசனை பதின்வயதில் சென்று சந்தித்தபோது அவர் ஏதேனும் கவிதை பாடக்கேட்டதாகவும் உடனே சுரதா ‘நடுவிரல்போல் தலைதூக்கு - நம் நாட்டாரின் இன்னலைப் போக்கு’ என்று தொடங்கும் கவிதையை பாடி அவர் பாராட்டைப் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. பாரதிதாசனின் எழுத்துக்களை செம்பிரதி எடுப்பது, அவர் நடத்திய இதழ்களில் உதவிசெய்வது ஆகியவற்றைச் செய்துவந்த சுரதா அவ்விதழ்களில் குறிப்புகளையும் எழுதினார்.

சுரதா நாமக்கல் கவிஞரின் உதவியாளராகவும் சிலகாலம் பணியாற்றினார்.

சிறுகதை

சுரதா எழுதிய முதல் கதை பிரசண்ட விகடன் இதழில் வெளிவந்த கவி அமரன். அந்தக் கதையை வெளியிட்ட நாரண துரைக்கண்ணன் சுரதாவை ஊக்குவித்து நிறைய எழுதத் தூண்டினாலும் சுரதா கதைகளை அதிகமாக எழுதவில்லை, கவிதையிலேயே நாட்டம் கொண்டிருந்தார்.


நாடகம்

சுரதா 1942ல் , தன் 21 ஆம் வயதில் முருகு சுப்ரமணியன் , பெரியண்ணன், இராம சுப்பையா, கிருட்டினராசு ஆகியோர் நடத்திவந்த முத்தமிழ் நிலையம் என்னும் நாடகக்குழுவில் நடிகராகச் சேர்ந்தார். அவர்கள் பாரதிதாசனின் புரட்சிக்கவி என்னும் நாடகத்தை தமிழகத்தின் பல பகுதிகளில் நடித்தனர். 1944ல் இன்ப இரவு என்னும் நாடகத்திலும் நடித்தார்.

சுரதா சுஜாதா என்னும் நாடகத்தை எழுதினார். அதன் ஒலிவடிவை வானொலியில் கேட்ட கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி அவரை திரைத்துறைக்கு அறிமுகம் செய்தார்.

திரைப்படம்

சுரதா தன் 23 ஆம் வயதில் சினிமாத்துறையில் நுழைந்தார். 1949 ல் பி.யூ. சின்னப்பா நடித்த மங்கையற்கரசி என்னும் படத்துக்கு உரையாடல் எழுதினார். அமரகவி (1952) ஜெனோவா (1953) ஆகிய படங்களுக்கு உரையாடல் எழுதினார். ஏறத்தாழ முப்பது படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார்

இதழியல்

சுரதா நடத்திய இதழ்கள் பல

  • காவியம் 1953
  • இலக்கியம் 1958
  • ஊர்வலம் 1963
  • சுரதா 1968
  • விண்மீன் 1964
  • சுண்டல் 1974

சுரதா நடத்திய எந்த இதழும் நீண்டகாலம் வெளிவரவில்லை.

அமைப்புச் செயல்பாடுகள்

சுரதா உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை என்னும் அமைப்பை தொடங்கி கவிஞர்களை ஒருங்கிணைத்து மாநாடுகளும் கூட்டங்களும் நடத்தினார். உலகத்தமிழ் கவிஞர் பேரவை சார்பில் படகு, கப்பல், விமானம் ஆகியவற்றில் கவியரங்குகளை நடத்தியிருக்கிறார்.