சுனில் கிருஷ்ணன்
சுனில் கிருஷ்ணன்
சுனில்கிருஷ்ணன் என்பவர் தமிழ்நாட்டின், காரைக்குடியைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளரும், ஆயுர்வேத மருத்துவரும், நவகாந்தியவாதியும் ஆவார்.
அன்னா அசாரேவின் இயக்கம் பரவிய காலகட்டத்தில்,அவருக்கு ஆதரவாக எழுதிய பல கட்டுரைகள் வெளியான அவருடைய வலைப்பூவை 2012 முதல் ‘காந்தி இன்று’ என்னும் காந்தி, காந்தியம் மற்றும் காந்தியர்களுக்கான இணைய தளமாக்கி, அதில் காந்தியம் குறித்த கட்டுரைகளை நண்பர்களுடன் இணைந்து எழுதியும் தொகுத்தும் வருகிறார்.1 மற்றுமொரு வலைப்பூவையும் துவங்கி அதிலும் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறார்.2 காந்தியம் குறித்து பலர் எழுதிய கட்டுரைகளையும் மொழிபெயர்த்துள்ளார்.3 பல சிறுகதைகளையும், தொகை நூல்களையும், நாவல்களையும் எழுதியுள்ளார். நரோபா என்னும் புனைப்பெயரிலும் எழுதிக் கொண்டிருக்கிறார்.
பொருளடக்கம்
==தனிவாழ்க்கை==
==கல்வி==
==இலக்கிய வாழ்க்கை==
==நூல் பட்டியல்==
==சிறுகதைகள்==
== தொகை நூல்கள்==
==அபுனைவுகள்==
==நேர்காணல்==
==மொழிபெயர்ப்புகள்==
==விருதுகள்==
==இணைப்புகள்==
==பிற==
தனி வாழ்க்கை
பிறந்த ஊர்- காரைக்கால், பாண்டிச்சேரி.
சொந்த ஊர் - அரிமளம் புதுக்கோட்டை மாவட்டம்
பிறந்த ஆண்டு, தேதி- 6.4.1986
பெற்றோர் பெயர்- டாக்டர். ராமச்சந்திரன் & ரமாதேவி
மணமான ஆண்டு நாள்: 23-5-2013
மனைவி பெயர்: டாக்டர். மானசா
குழந்தைகள் பெயர்: 1.சுதீர் சந்திரன் (ஆண். பி வ. 2016), 2.சபர்மதி (பெண். பி.வ. 2019)
கல்வி
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் முத்தையா அழகப்பா மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளி. (பனிரெண்டாம் வகுப்பு வரை)
கல்லூரி- ஸ்ரீ சாய்ராம் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மேற்கு தாம்பரம்.
இலக்கிய வாழ்க்கை
முதல் படைப்பு :முதல் சிறுகதை - வாசுதேவன்.
முதல் படைப்பை எழுதிய மற்றும் , பிரசுரமான ஆண்டு, ஆகஸ்ட் 4, 2013
இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள்
- ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், அ. முத்துலிங்கம், அசோகமித்திரன்.
இவரால் தொடங்கப்பட்டிருக்கும் மரப்பாச்சி இலக்கிய வட்டம் காரைக்குடியில் 2019 ஜனவரி முதல் ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுகைகளை நடத்துகிறது. இதில். நாஞ்சில் நாடன், சுரேஷ்குமார இந்திரஜித், தேவிபாரதி, பெருந்தேவி, கீரனூர் ஜாகிர் ராஜா, உமா மகேஸ்வரி, போகன் சங்கர், எஸ். செந்தில்குமார், சாம்ராஜ், சுரேஷ் பிரதீப் ஆகிய படைப்பாளிகள் பங்கு கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
நூல்பட்டியல் (இதுவரை)
- அம்புப்படுக்கை (சிறுகதைகள்)
- நீலகண்டம் (நாவல்)
- விஷக்கிணறு (சிறுகதைகள்)
- இந்து ஞானம் ஒரு எளிய அறிமுகம்- க்ஷிதி மோகன் சென் (மொழியாக்கம்)
- சுதந்திரமும் சமூக நீதியும்- ராஜ் மோகன் காந்தி (மொழியாக்கம்)
- கல்மலர் (காந்திய நெடுங்கட்டுரை)
சிறுகதைகள்
- அம்புப்படுக்கை(2018)
- விஷக் கிணறு (2020)
- எழுத்தாளர் பழுவேட்டையருக்கு குழந்தை பிறந்திருக்கிறது (2021- நரோபா)
தொகை நூல்கள்
- காந்தி எல்லைகளுக்கு அப்பால் -2012 (மொழியாக்க கட்டுரைகள்)
- பின்நவீனத்துவவாதியின் மனைவி - சுரேஷ்குமார இந்திரஜித் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்-2019.
- காந்தியைச் சுமப்பவர்கள் - காந்தி சிறுகதைகள்- 2021.
- Mahathma Gandhi in Tamil- An anthology 2021.
அபுனைவுகள்
- அன்புள்ள புல்புல் -2018- காந்திய கட்டுரைகள்
- வளரொளி- 2019- விமர்சனங்கள் நேர்காணல்கள்
- நாளைய காந்தி- 2021- காந்திய கட்டுரைகள்
- ஆயிரம் காந்திகள்- 2021-காந்திய ஆளுமைகள் குறித்த கட்டுரைகள்.
நேர்காணல்
- முதற்கால்- ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். இல. மகாதேவனுடன் நேர்காணல் 2021.
மொழிபெயர்ப்புகள்
- இந்து ஞானம் ஒரு எளிய அறிமுகம் - க்ஷிதி மோகன்சென்
- சுதந்திரமும் சமூகநீதியும் - ராஜ்மோகன்காந்தி
- மகாத்மாவுக்கு அஞ்சலி- வானொலி அஞ்சலிகள்.
விருதுகள்
- 2018 எழுத்து கணையாழி அசோகமித்திரன் குறுநாவல் பரிசு- பேசும் பூனை குறுநாவலுக்கு
- 2018 ஆம் ஆண்டுக்கான இளம் எழுத்தாளர்களுக்கான சாகித்திய அகாதமி யுவபுரஸ்கார் விருது. அம்புப்படுக்கை.4
- 2020- க.நா.சு சிறுகதை பரிசு எப்போதும் முடிவிலே இன்பம்.
இணைப்புகள்
1.www.gandhitodaytamil.com
2.suneelwrites.blogspot.com
3.ம. சுசித்ரா (2018 அக்டோபர் 30). "காந்தி 150: காந்தியின் கேள்விகளைச் சுமக்கும் நவகாந்தியவாதி!". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 31 அக்டோபர் 2018.
4↑"சுனில் கிருஷ்ணன், சேதுபதி தேர்வு சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு". செய்தி. தினகரன் (2018 சூன் 23). பார்த்த நாள் 31 அக்டோபர் 2018.
பிற
- சுனில் கிருஷ்ணன் புத்தகங்கள்:| Sunil Kirushnan Books | Panuval.com
- பாராட்டு விழா உரைகளின் காணொளிகள்|சுனில் கிருஷ்ணன் பாராட்டுவிழா உரைகள் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
- சுனில் கிருஷ்ணன் | எழுத்தாளர் ஜெயமோகன்| (jeyamohan.in)
- சுனில் கிருஷ்ணனின் “விஷக்கிணறு” வெளியீடு | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
- எனது கதைகள் -சுனீல் கிருஷ்ணன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
- சுரேஷ்பிரதீப் பேட்டி | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
- காந்தியம் பேசுவோம்- இணையச் சந்திப்பு | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)