under review

சுந்தரமூர்த்தி நாயனார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 31: Line 31:
தலம் : மழபாடி                                    நாடு : சோழநாடு காவிரி வடகரை
தலம் : மழபாடி                                    நாடு : சோழநாடு காவிரி வடகரை


<quote>
பொன்னார் மேனியனே
பொன்னார் மேனியனே


Line 46: Line 47:


இனியாரை நினைக்கேனே.  
இனியாரை நினைக்கேனே.  
 
</quote>


திருமுறை : ஏழாம் திருமுறை              பண் : பழம்பஞ்சுரம்
திருமுறை : ஏழாம் திருமுறை              பண் : பழம்பஞ்சுரம்
Line 53: Line 54:


 
 
 
<quote>
மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்


Line 69: Line 70:


சொல்லும் நாநமச்சி வாயவே.
சொல்லும் நாநமச்சி வாயவே.
</quote>


== குருபூஜை ==
== குருபூஜை ==
Line 78: Line 80:
*
*


{{Being created}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 15:34, 18 April 2022

சுந்தரமூர்த்தி நாயனார் (நம்பியாரூரர்) சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர். சைவ சமயக் குரவர்கள் எனப்படும் நான்கு முக்கியமான சிவனடியார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் நம்பியாரூரன். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார்.

சுந்தரர் சிறுவயதில் தெருவில் சிறுதேர் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் அவரைக் கண்டார். சுந்தரரைத் தனது மகனாக்க விரும்பி சடையனாரிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.

தடுத்தாட்கொள்ளல்

மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குப் புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஓர் ஓலையைக் காட்டி, சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். அந்த வழக்கைத் தீர்த்து வைத்த பின்னரே திருமணம் செய்யவேண்டும் என வாதாடினார்.

திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு திருவெண்ணைய்நல்லூர் கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி".. என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடினார்.

சிவனை "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை பாவத்தில் வணங்கிப் பாடல்கள் இயற்றியவர். பல சிவத்தலங்கள் சென்று, தேவாரப் பதிகங்கள் பாடினார்.

திருமணங்கள்

திருவாரூரில் பரவையார் என்ற தேவதாசி குலத்தினைச் சேர்ந்த பெண் ஒருவரை சுந்தரர் கண்டு, காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். சில காலத்திற்குப் பின்பு திருவொற்றியூருக்கு வந்தவர், அங்கு, 'ஞாயிறு' என்ற ஊரில் வேளாளர் ஒருவரின் மகளான 'சங்கிலியார்' எனும் அழகிய பெண்ணைக் கண்டு காதல் கொண்டார். சிவபெருமான் அவருக்காகத் தூது சென்று, திருமணத்தினை நடத்திவைத்ததாகத் தொன்மம்.

சிவபெருமான் திருவிளையாடல்

அரசரான சேரமான் பெருமாள், சுந்தரருக்கு நண்பராயிருந்தார். சுந்தரர் ஒருமுறை சேரமான் பெருமானை சந்தித்துத் திரும்பும் போது, அம்மன்னர் பொன், பொருள், மணியிழைகள், ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்....’ எனத் தொடங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான், சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை, இறைவன் வைத்திருந்ததாகத் தொன்மம்.

முக்தி

சுந்தரர் தனது 18-ஆவது வயதில் சிவனடியை அடைந்திட, பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானையைச் சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார்.

பாடல்கள்

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்கள் தேவாரம் என்னும் தொகுதியில் வைக்கப்பட்டு 'சுந்தரர் தேவாரம்' எனக் குறிப்பிடப்படும். இப்பாடல்கள் 'திருப்பாட்டு' என்றும் அழைக்கப்படுகிறது. இப்பாடல்களைப் பன்னிரு திருமுறைகளில் எழாம் திருமுறையில் வைக்கப்படுகிறது.

இவர் சிவபெருமான் மீது 38,000 பாடல்கள் பாடியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவை பண்களோடு அமைந்துள்ளதால், பண் சுமந்த பாடல்கள் எனப்படுகின்றன. இவற்றில் 101 பதிகங்களே[1] கிடைத்துள்ளன. அவற்றில் 17 வகையான பண்கள் இடம்பெற்றுள்ளன. தேவாரப் பாடல்களில், 'செந்துருத்திப் பண்' கொண்டு பாடல் பாடியவர் இவர் ஒருவரே.

திருமுறை : ஏழாம் திருமுறை   பண் : நட்டராகம்

தலம் : மழபாடி நாடு : சோழநாடு காவிரி வடகரை

<quote> பொன்னார் மேனியனே

புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல்

மிளிர்கொன்றை யணிந்தவனே

மன்னே மாமணியே

மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால்

இனியாரை நினைக்கேனே. </quote>

திருமுறை : ஏழாம் திருமுறை பண் : பழம்பஞ்சுரம்

தலம் : பாண்டிக்கொடுமுடி நாடு : கொங்குநாடு

  <quote> மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்

பாத மேமனம் பாவித்தேன்

பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற

வாத தன்மைவந் தெய்தினேன்

கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை

யூரிற் பாண்டிக் கொடுமுடி

நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்

சொல்லும் நாநமச்சி வாயவே. </quote>

குருபூஜை

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், சிவாலயங்களில் குருபூஜை கொண்டாடப்படுகிறது.

உசாத்துணை

  • நாயன்மார் வரலாறு - தமிழ்வளர்ச்சித்துறை - திரு.வி. கலியாணசுந்தரனார் - 2016
  • சைவம் வளர்த்த அறுபத்து மூவர் - விஜயா பதிப்பகம் - சி.எஸ். தேவநாதன் - நான்காம் பதிப்பு - 2016



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.