சுசித்ரா மாரன்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 8: | Line 8: | ||
சுசித்ரா மாரன், மேதகு துணை குடியரசுத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய மாநில அமைச்சர்கள் பங்கேற்கும் சர்வதேச கருத்தரங்குகள் அரசு நிகழ்ச்சிகளின் நெறியாளராக பணியாற்றியுள்ளார். | சுசித்ரா மாரன், மேதகு துணை குடியரசுத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய மாநில அமைச்சர்கள் பங்கேற்கும் சர்வதேச கருத்தரங்குகள் அரசு நிகழ்ச்சிகளின் நெறியாளராக பணியாற்றியுள்ளார். | ||
2001 முதல் 2010- ஆம் ஆண்டு வரை கரன் மற்றும் AMN தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். | |||
தஞ்சை பொன்னையா ராமஜெயம் கல்லூரி, பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரி ஆகியவற்றில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். | தஞ்சை பொன்னையா ராமஜெயம் கல்லூரி, பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரி ஆகியவற்றில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். | ||
Line 33: | Line 33: | ||
தலைமைச் செயலகத்தில் செயல்பட்டுவரும் தமிழ்மன்றமே தன் படைபூக்கத்திற்கான பயிற்சிக்களம் என்கிறார் சுசித்ரா மாரன். | தலைமைச் செயலகத்தில் செயல்பட்டுவரும் தமிழ்மன்றமே தன் படைபூக்கத்திற்கான பயிற்சிக்களம் என்கிறார் சுசித்ரா மாரன். | ||
== விருதுகள் மற்றும் பரிசுகள் == | == விருதுகள் மற்றும் பரிசுகள் == | ||
அவயங்களின் சிம்ஃபொனி கவிதைத் தொகுப்புக்கான விருதுகள்; | |||
* திருப்பூர் இலக்கிய வட்ட விருது 2021. | * திருப்பூர் இலக்கிய வட்ட விருது 2021. | ||
* தேனி தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அசோகமித்திரன் படைப்பூக்க விருது 2021. | * தேனி தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அசோகமித்திரன் படைப்பூக்க விருது 2021. | ||
* 2020- ஆம் ஆண்டு, கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் சுசித்ரா மாரனின் சிறுகதை "மடையான் மடையான் பூப்போடு" இரண்டாம் பரிசைப் பெற்றது. | *2020- ஆம் ஆண்டு, கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் சுசித்ரா மாரனின் சிறுகதை "மடையான் மடையான் பூப்போடு" இரண்டாம் பரிசைப் பெற்றது. | ||
* இராஜேந்திர சோழன் கால சிறுகதைகள் என்ற வரலாற்று சிறுகதை போட்டியில் சுசித்ரா மாரனின் 'திருமுக்கூடல்' என்ற கதை சிறப்பு பரிசு பெற்றது. | * இராஜேந்திர சோழன் கால சிறுகதைகள் என்ற வரலாற்று சிறுகதை போட்டியில் சுசித்ரா மாரனின் 'திருமுக்கூடல்' என்ற கதை சிறப்பு பரிசு பெற்றது. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == |
Revision as of 19:47, 17 May 2022
This page is being created by ka. Siva
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
சுசித்ரா மாரன் ( பிறப்பு செப்டம்பர் 27, 1977) தமிழ் கவிஞர் மற்றும் சிறுகதை எழுத்தாளர். தஞ்சாவூர் மாவட்டம் அம்மன்பேட்டை கிராமத்தில் பிறந்தவர். தலைமைச் செயலகத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார்
பிறப்பு மற்றும் கல்வி
சுசித்ரா மாரனின் இயற்பெயர் சுசித்ரா. இவர், தஞ்சாவூர் மாவட்டம் அம்மன் பேட்டையில் 1977- ஆண்டு, செப்டம்பர் 27 அன்று சுகுமாரன் மற்றும் சௌந்தரவல்லி இணையருக்கு பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை அம்மன்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் 6 முதல் பத்தாம் வகுப்பு வரை அம்மன்பேட்டை அருள்நெறி உயர்நிலைப் பள்ளியிலும் மேல்நிலைக் கல்வியை தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தஞ்சையிலும் படித்தவர். தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரியில் இளம் அறிவியல் வேதியியல் பட்டமும் பொன்னையா ராமஜெயம் கல்லூரியில் முதுஅறிவியல் உயிர் வேதியியல், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர், இளங்கலை கல்வியியல் ஆகிய பட்டங்களைப் பெற்றவர்.
தனி வாழ்க்கை
சுசித்ரா மாரன், மேதகு துணை குடியரசுத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய மாநில அமைச்சர்கள் பங்கேற்கும் சர்வதேச கருத்தரங்குகள் அரசு நிகழ்ச்சிகளின் நெறியாளராக பணியாற்றியுள்ளார்.
2001 முதல் 2010- ஆம் ஆண்டு வரை கரன் மற்றும் AMN தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.
தஞ்சை பொன்னையா ராமஜெயம் கல்லூரி, பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரி ஆகியவற்றில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.
தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு விழா நிகழ்வைப் பொதிகை தொலைக்காட்சிக்காகத் தொகுத்து வழங்கியுள்ளார்.
தற்போது, மகன் பிரணவ் உடன் சென்னையில் வசித்து வரும் சுசித்ரா மாரன், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
சுசித்ரா மாரன், தலைமைச் செயலக தமிழ் மன்றத்தின் செயலாளராக உள்ளார்.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் உலகப் பெண் கவிஞர்கள் அமைப்பின் "வல்லினச் சிறகுகள்" கலை இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராக உள்ளார்.
கவியரங்கம் மற்றும் பட்டிமன்ற பேச்சாளராகவும் விளங்குகிறார்.
தலைமைச் செயலக தமிழ் மன்றம் தொடங்கப்பட்ட 2018-ஆம் ஆண்டில் இருந்து கவிதை எழுதத்தொடங்கினார். ஆறு என்ற தலைப்பிலான முதல் கவிதை 2018 ஆம் ஆண்டு சொல்வனம் இணைய இதழில் வெளியானது
இவரது கவிதைகள் கணையாழி, கல்கி, ஆனந்தவிகடன், காமதேனு, இனிய உதயம், பாக்யா ஆகிய அச்சு இதழ்களிலும் சொல்வனம், பதாகை, கீற்று, கதவு, காற்றுவெளி, கொலுசு ஆகிய மின்னிதழ்களிலும் வெளியாகி உள்ளன.
நூல்
சுசித்ரா மாரனின் முதல் கவிதைத் தொகுப்பு "அவயங்களின் சிம்ஃபொனி"(2021). இந்நூலை வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
முக்கியத்துவம்
பழந்தமிழ் பரிச்சயத்துடன் நவீனக் கவிதை முடைகிற சுசித்ரா மாரனின் ‘அவயங்களின் சிம்ஃபொனி’ எனும் இத்தொகுப்பு எல்லா விருதுகளுக்கும் உரிய சக்தி பீடமாக விளங்குகிறது என்று இந்து தமிழ் இணையயிதழ் பாராட்டியுள்ளது.
தலைமைச் செயலகத்தில் செயல்பட்டுவரும் தமிழ்மன்றமே தன் படைபூக்கத்திற்கான பயிற்சிக்களம் என்கிறார் சுசித்ரா மாரன்.
விருதுகள் மற்றும் பரிசுகள்
அவயங்களின் சிம்ஃபொனி கவிதைத் தொகுப்புக்கான விருதுகள்;
- திருப்பூர் இலக்கிய வட்ட விருது 2021.
- தேனி தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அசோகமித்திரன் படைப்பூக்க விருது 2021.
- 2020- ஆம் ஆண்டு, கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் சுசித்ரா மாரனின் சிறுகதை "மடையான் மடையான் பூப்போடு" இரண்டாம் பரிசைப் பெற்றது.
- இராஜேந்திர சோழன் கால சிறுகதைகள் என்ற வரலாற்று சிறுகதை போட்டியில் சுசித்ரா மாரனின் 'திருமுக்கூடல்' என்ற கதை சிறப்பு பரிசு பெற்றது.
உசாத்துணை
அவயங்களின் சிம்ஃபொனி கவிதைத் தொகுப்புக்கான விமர்சனம்: https://www.hindutamil.in/news/literature/640050-idam-porul-ilakkiyam.html
கல்கி இதழில் பரிசு பெற்ற சிறுகதை (பக். 15); https://www.kalkionline.com/flipb/upload/kalki/2021/jan/17012021
சுசித்ரா மாரனின் முகநூல் பக்கம்; https://www.facebook.com/SusithraMaran