சிவரமணி இராசரத்தினம்

From Tamil Wiki
Revision as of 14:48, 6 January 2023 by Ramya (talk | contribs) (Created page with "சிவரமணி (நவம்பர் 6, 1972) ஈழத்து தமிழ்க் கவிஞர், எழுத்தாளர். ==பிறப்பு, கல்வி== சிவரமணி இலங்கை யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இராசரத்தினம், சிவஞானவதி இணையருக்கு நவம்பர் 6, 1972-ல் பிறந்தார். ய...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சிவரமணி (நவம்பர் 6, 1972) ஈழத்து தமிழ்க் கவிஞர், எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

சிவரமணி இலங்கை யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இராசரத்தினம், சிவஞானவதி இணையருக்கு நவம்பர் 6, 1972-ல் பிறந்தார். யாழ் மீசாலை வீரசிங்கம் மாகவித்தியாலயம், கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயம் ஆகிய பள்ளிகளில் பள்ளிக்கல்வி பயின்றார். உடன்பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி. திருகோணலையை வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

சிவரமணியின் படைப்புகள் பல இதழ்களில் வெளிவந்தன. தொடுவானில் சிதறல்கள் என்னும் கவிதை நூலை 2015ஆம் ஆண்டில் வெளியிட்டார். அவள் ஒரு தனித்தீவு எனும் கதையும் கவிதையும் நாவல் இலக்கியம் ஒன்றையும் வெளியிட்டார்.

விருதுகள்

  • முகநூல் மூலம் இயங்கும் முதன்மையான பல அமைப்புக்கள் மற்றும் இலங்கையின் தடாகம் கலை இலக்கிய வட்டம், உலகப்பாவலர் மன்றம் வழங்கிய 25 விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
  • தடாகம் கலை இலக்கியப் போட்டியில் இவரது கவித்தீபம் என்ற கவிதை இரண்டாமிடத்தை பெற்றது.

மறைவு

மே 19, 1991இல் யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் ”எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்” என்ற இறுதிக் குறிப்புடன் தன் இருபத்தி மூன்றாவது வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

நூல்கள் பட்டியல்

  • கவித்தீபம்
  • தொடுவானில் சிதறல்கள்
  • தனித்தீவு

உசாத்துணை

இணைப்புகள்