சிறுமேதாவியார்
From Tamil Wiki
Revision as of 07:18, 12 October 2023 by Tamizhkalai (talk | contribs)
சிறுமேதாவியார் கடைச் சங்க காலத் தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சிறுமேதாவியார் கடைச் சங்க காலப் புலவர்கள் நாற்பத்தி ஒன்பது பேர்களுள் ஒருவர். சைமன் காசிச்செட்டியின் தொகுப்பில் இவரின் பெயர் உள்ளது. ஆனால் பண்டைய புலவர் பட்டியல்களில் இவர் பெயர் இல்லை.
இலக்கிய வாழ்க்கை
சிறுமேதாவியார் திருக்குறள் பற்றிய பாடல் பாடினார்.
பாடல் நடை
வீடொன்று பாயிர நான்கு விளங்கற
நாடிய முப்பத்து மூன்றென்றுாழ்- கூடுபொருள்
எள்ளி லெழுப திருபதிற் றைந்தின்பம்
வள்ளுவர் சொன்ன வகை
உசாத்துணை
✅Finalised Page