சின்னக்குட்டிப் புலவர்
From Tamil Wiki
சின்னக்குட்டிப் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சின்னக்குட்டிப் புலவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் பிறந்தார். மாதகல் சிற்றம்பலப் புலவரிடம் கல்வி பயின்றார்.
இலக்கிய வாழ்க்கை
தெல்லிப்பழையிலிருந்த கனக தண்டிகைக் கனகராய முதலியார் பற்றி ’தண்டிகைக் கனகராயன் பள்ளு' என்ற பள்ளு நூலை எழுதினார். இந்நூலை தெல்லிப்பிழை வழக்கறிஞர் வ. குமாரசுவாமிப் பிள்ளை விளக்கக் குறிப்புக்களுடன் 1932இல் அச்சில் பதிப்பித்தார்.
நூல் பட்டியல்
- தண்டிகைக் கனகராயன் பள்ளு
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
இணைப்புகள்
- தண்டிகைக் கனகராயன் பள்ளு: நூலகம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.