கோ. கமலக்கண்ணன்
கோ. கமலக்கண்னன் ( ஆகஸ்ட் 03, 1986 ) தமிழ் எழுத்தாளர். உலக செவ்வியல் இலக்கியங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர். கட்டுரைகளும் சிறுகதைகளும் எழுதியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
கமலக்கண்ணன் திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் உள்ள பொன்மலையில் ஆ. கோபிநாதன் - கோ. கெம்புலெட்சுமி இணையருக்கு மகனாய்ப் பிறந்தார்.
தனது பள்ளிக் கல்வியை பொன்மலைப்பட்டி திரு இருதய மேனிலைப்பள்ளி மற்றும் இ.ஆர். மேனிலைப்பள்ளி யில் நிறைவு செய்தார்.
கமலம் விஸ்வநாதன் இயன்முறை மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்
தனிவாழ்க்கை
கமலக்கண்ணன் க. நர்கிஸ் பானு என்பவரை மணந்தார். 2011இல் திருமணம் ஆனது. இவர்களுக்கு க. கவினெழில், க. ஸ்வரலிபி என் இரு குழந்தைகள் உள்ளனர்.
இவரது இளவயது வாழ்க்கை பொன்மலை ரயில்வே காலனியில் கழிந்தது. தற்போது தமிழக அரசுப்பணியில் உள்ளார். வேளாண்மை விற்பனைத் துறையில் பணிபுரிகிறார். திருச்சியில் வசிக்கிறார்.