கே.சி.நாராயணன்

From Tamil Wiki
Revision as of 08:12, 2 June 2023 by Jeyamohan (talk | contribs) (Created page with "கே.சி.நாராயணன் ( ) மலையாள இதழாளர், இலக்கிய விமர்சகர், இலக்கிய ஆய்வாளர். மாத்ருபூமி, பாஷாபோஷிணி இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றிய காலகட்டத்தில் நவீன மலையாள இலக்கியத்திற்குப் பெர...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கே.சி.நாராயணன் ( ) மலையாள இதழாளர், இலக்கிய விமர்சகர், இலக்கிய ஆய்வாளர். மாத்ருபூமி, பாஷாபோஷிணி இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றிய காலகட்டத்தில் நவீன மலையாள இலக்கியத்திற்குப் பெரும்பங்களிப்பாற்றியவர்

பிறப்பு , கல்வி

கே.சி.நாராயணன் இல் பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரத்தில் கிழியேடத்து மனை என்னும் நம்பூதிரி இல்லத்தில் பிறந்தார். முழுப்பெயர் கிழியேடத்து மனையில் செறிய நாராயணன் நம்பூதிரி. ஸ்ரீகிருஷ்ணபுரத்தில் ஆரம்பக் கல்வியும் பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் இளங்கலை அறிவியலும் பயின்றார். கோழிக்கோடு பல்கலையில் மலையாளம் முதுகலை பயின்றார். கேரள பண்பாட்டில் தாளக்கருவிகள் என்னும் தலைப்பில் முனைவர் பட்டப்படிப்பை தொடங்கினாலும் முடிக்கவில்லை.

தனிவாழ்க்கை

கே.சி.நாராயணனின் மனைவி பெயர் ஷீலா. இரு மகள்கள். ஷீலா மறைந்துவிட்டார்.

இதழியல்

கே.சி.நாராயணன் மாத்ருபூமி இதழில் துணையாசிரியராக சேர்ந்தார். அதன்பின் மாத்ருபூமி கல்கத்தா, மாத்ருபூமி சென்னை பிரிவுகளின் தலைவராக பணியாற்றினார். மாத்ருபூமி இணைப்பிதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றிய கே.சி.நாராயணன் பின்னர் மலையாள மனோரமா குழுமத்தின் இதழ்களின் பொது ஆசிரியராகப் பணியாற்றினார். மலையாள இலக்கிய இதழான பாஷாபோஷிணி அதில் ஓர் இதழ்.