கேசாதிபாதம்
From Tamil Wiki
கேசாதிபாதம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். கேசாதிபாதம் என்பது கேசம் முதல் பாதம் வரை என்னும் பொருள் தரும் வடமொழிச் சொல். கேசம் என்பது தலைமுடியைக் குறிக்கும். கலிவெண்பாவால் தலைமுடி தொடங்கி பாதம் வரையான உறுப்புக்களைக் கூறிப் பாடுதல் கேசாதிபாதம்[1].
இறைவனையும், இறைவனைப் போல் கருதப்படுபவர்களையும் தவிர ஏனையோரைக் கேசாதிபாதமாகப் பாடுவது மரபு.
குறிப்புகள்
- ↑
அடிமுதல் முடிஅளவு ஆக இன்சொல்
படர்வுறு கலிவெண் பாவால் கூறல்
பாதாதி கேசம் கேசாதி பாதம்
ஓதின் அப்பெயரான் உரைக்கப் படுமே- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 871
உசாத்துணைகள்
- கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல், நவநீத நடனார் இயற்றியது, பதிப்பாசிரியர்கள்: எஸ். கலியாண சுந்தரையர் & எஸ், ஜி. கணபதி ஐயர்
- வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), திருவையாறு
- முத்துவீரியம், பதிப்பாசிரியர்: கு.சுந்தரமூர்த்தி
வெளி இணைப்புகள்
✅Finalised Page