குருமலை சுந்தரம் பிள்ளை
From Tamil Wiki
Revision as of 16:47, 24 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|ஜி.சுப்ரமணிய அய்யர் சரிதம் மறுபதிப்பு ஒட்டப்பிடாரம் குருமலை சுந்தரம்பிள்ளை வழக்கறிஞர். சுதேசமித்திரன் இதழில் பாரதியாருடன் இணைந்து துணையாசிரியராகப...")
ஒட்டப்பிடாரம் குருமலை சுந்தரம்பிள்ளை வழக்கறிஞர். சுதேசமித்திரன் இதழில் பாரதியாருடன் இணைந்து துணையாசிரியராகப் பணியாற்றியவர். தமிழின் தொடக்ககால நாவல்களில் ஒன்றாகிய பொற்றொடியை எழுதியவர். சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்ரமணிய அய்யரின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.
சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்ரமணிய அய்யரின் வாழ்க்கை வரலாறு 1907ல் சுதேசமித்திரன் வெள்ளிவிழாவின்போது வெளியிடப்பட்டது. இந்நூலை 2018ல் செ.ஜெயவீரதேவன் மறுபதிப்பாக கொண்டுவந்திருக்கிறார்.
நூல்கள்
பொற்றொடி1911
ஜி.சுப்ரமணிய அய்யர் சரித்திரம் 1907