குமுழிஞாழலார் நப்பசலையார்
From Tamil Wiki
குமுழிஞாழலார் நப்பசலையார் சங்ககாலப் பெண்பாற் புலவர். இவரது ஒரு பாடல் ஒன்று அகநானூற்றில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
குமுழிஞாழலார் நப்பசலையார் என்பதற்கான பெயர்க்காரணம் தெரியவில்லை.
இலக்கிய வாழ்க்கை
குமுழிஞாழலார் நப்பசலையார் அகநானூற்றில் நெய்தல்திணை குறித்த பாடல் பாடினார்.
பாடல்வழி அறியவரும் செய்திகள்
- ஆமை இரவில் யாரும் அறியாதவண்ணம் மணலில் குழிபறித்து முட்டையிட்டு கடல் திரும்பும். சிறிய ஆமைகள் கண்கள் வளராத போதும் மணலை துழைத்துக் கொண்டு வெளிவந்து கடல் நீரை நோக்கி காந்தம் ஈர்க்கப்பட்டது போல செல்லும் தன்மையை இயற்கை படைத்துள்ளது.
பாடல் நடை
அகநானூறு 160 (திணை: நெய்தல்)
அடும்புகொடி சிதைய வாங்கிக் கொடுங்கழிக்
குப்பை வெண்மணல் பக்கம் சேர்த்தி
நிறைச்சூழ் யாமை மறைத்து ஈன்றூ புதைத்த
கோட்டுவட்டு உருவின் புலவுநாறு முட்டைப்
பார்ப்புஇட னாகும் அளவைப் பகுவாய்க்
கணவன் ஓம்பும்