கலீல் அவ்ன் மௌலானா
From Tamil Wiki
கலீல் அவ்ன் மௌலானா தென் மாகாணம் மாத்தறை வெலிகமை கல்பொக்கையைச் சேர்ந்தவர். பன்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர். பாரம்பரிய இலக்கிய மரபான மரபுக் கவிதையிலேயே தனது செய்யுள்களை யாப்பமைதி பிறழாமல் எழுதிவருபவர். 1964 இல் இவரது முதற் படைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை இலக்கியப் பரப்பினர் 1967 இல் நடத்திய கவியரங்கில் இவரது கவிதை சிலாகித்துப் பேசப்பட்டிருந்தது. அதன் பின்னர் அவரது கவிதை நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளது. பல உரைநடை நூல்களை இலங்கை, இந்தியா நாடுகளில் வெளியிட்டுள்ளார். அவரது தந்தை யாசின் மெளலானாவின் காமூஸ் எனும் அரபு - தமிழ் அகராதியை இவர் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
நூல் பட்டியல்
- யாசீன் நாயகம் ரலி வரலாறு
- பரமார்த்தத் தெளிவு
- நாயகர் பன்னிரு பாடல் கவிதை
- உண்மை விளக்கம்
- பேரின்பப்பாதை ஞான அறிமுக நூல்
- பர்ஜன்ஸி மவுலிது தமிழாக்கம்
- அருள்மொழிக் கோவை தமிழ் ஆங்கிலம்
- கஸீதத்துல் அஹ்மதிய்யா அரபு - தமிழ் வாரிதாத்
- தாகிபிரபம்
- பதுருசஹாபாக்கள் மவுலிது தமிழாக்கம்
- காமூஸ் அரபு-தமிழ் அகராதி
- மகானந்தாலங்கார மாலை சித்திரக்கவி
- மனிதா அமுத மொழிகள் தொகுப்பு
- ஒளியை மறைக்கத் துணியும் தூசி
- அற்புத அகிலநாதர் கவிதை
- குத்புகள் திலகம் யாசீன் மௌலானா ரலி-கவிதை
- இறைவலிய் செய்யிது முஹம்மது மௌலானா கவிதை
- துஹ்பத்துல் முர்ஸலா அரபுமூலம் தமிழ்மொழிபெயர்ப்பு
- ஈழ வள நாட்டில் பயிர் பெருக்க வாரீர்!
- குறிஞ்சிச் சுவை தமிழ் இலக்கிய நூல்
- மருள்நீக்கிய மாநபி
- இறையருட்பா கவிதை
- ரிஸாலத்துல் கௌதிய்யா அரபுமூலம் தமிழ்மொழிபெயர்ப்பு