being created

கருணாலய பாண்டியனார்

From Tamil Wiki
Revision as of 18:01, 13 February 2023 by Ramya (talk | contribs) (Created page with "கருணாலய பாண்டியனார் (சிவங். கருணாலய பாண்டியனார்) (ஆகஸ்ட் 9, 1903 - ஜூன் 30, 1976) ஈழத்து தமிழ்ப்புலவர். == பிறப்பு, கல்வி == கருணாலய பாண்டியனார் தமிழ்நாட்டில் பிறந்து ஈழத்தில் வாழ்வை அமைத்து...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கருணாலய பாண்டியனார் (சிவங். கருணாலய பாண்டியனார்) (ஆகஸ்ட் 9, 1903 - ஜூன் 30, 1976) ஈழத்து தமிழ்ப்புலவர்.

பிறப்பு, கல்வி

கருணாலய பாண்டியனார் தமிழ்நாட்டில் பிறந்து ஈழத்தில் வாழ்வை அமைத்துக் கொண்டவர்களில் ஒருவர். திருநெல்வேலி மாவட்டம் மலையடிக்குறிச்சியில் ஆகஸ்ட் 9, 1903இல் பிறந்தார். மதுரை தமிழ்ச்சங்கம் நடத்திய பாலபண்டிதர் பரிட்சையில் தேர்ச்சி பெற்றார்.

ஆசிரியப்பணி

கொழும்பில் வணிகத்தொழில் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த கருப்பஞ் செட்டியாரின் புதல்வரான ராமநாதனுக்கு (லெ.ப.கரு. ராமநாதன்) தமிழ் கற்பிக்க இலங்கை வந்தார். ஆறு ஆண்டுகள் அவருக்கு தமிழ் கற்பித்தார். தமிழ் நாட்டிற்கு திரும்பிச் சென்று வேலை தேடி கிடைக்காததால் மீண்டும் கொழும்பு வந்து தான் இறக்கும் வரை இங்கேயே ஆசிரியப்பணி செய்தார். கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் 1958-1976 வரை தமிழ்வகுப்பு நடத்தினார்.

இலக்கிய வாழ்க்கை

1936இல் “தமிழ்கலையாக்கம்” என்ற பெயரில் ஈழகேசரியில் கட்டுரை எழுதினார். மொழிபெயர்ப்பு நிலையில் தனித்தமிழ் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தனித்தமிழ் இயக்கத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். பதினெட்டு நூல்களை எழுதினார். ஐந்து நூல்கள் பதிப்பிக்கப்பட்டன. செய்யுள்கள் பல இயற்றினார். அகவல், வெண்பா, கலிப்பா, யாப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுதினார். ’அழகியது’ என்னும் கவிதை நூல் யாப்புத்தன்மையை புலப்படுத்துவது. அறநூல்களின் சாயல் கொண்டது. இவர் இயற்றிய திருக்கதிர்காமப் பிள்ளைத்தமிழ் ஆசிரியப்பாவால் அமைந்தது. கதிர்காமத்திலுள்ள முருகனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது. நாற்பத்திமூன்று ஆசிரியப்பாக்கலால் ஆனது.

திருக்குறளின் அறத்துப்பாலுக்கு முப்பால் விளக்கம் என்னும் பெயரில் உரை எழுதினார். இலங்கை வானொலியில் திருக்குறள் தொடர்பான நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்தினார்.

மறைவு

கருணாலய பாண்டியனார் ஜூன் 30, 1976இல் காலமானார்.

நூல்கள்

  • அழகியது
  • திருக்கதிர்காமப் பிள்ளைத்தமிழ்
  • திருவருட் செற்றம்
  • நெடுமால் பெயராயிரம்
நாவல்
சிறுகதைகள்

உசாத்துணை

இணைப்புகள்

  • கருணாலய பாண்டியனார் வாழ்வும் பணிகளும்: சு. வித்தியானந்தன்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.