கனகசபைப் புலவர்: Difference between revisions
(changed template text) |
(Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது) |
||
Line 38: | Line 38: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:ஈழத்து ஆளுமைகள்]] | [[Category:ஈழத்து ஆளுமைகள்]] | ||
[[Category:புலவர்கள்]] |
Revision as of 19:30, 23 December 2022
To read the article in English: Kanagasabai Pulavar.
கனகசபைப் புலவர் (1815 - 1873) அளவெட்டி கனகசபைப் புலவர் (1815- 1879 ) கிறிஸ்தவக் கவிஞர். தமிழின் தொடக்ககாலக் கிறிஸ்தவக் காப்பியமான திருவாக்கு புராணத்தின் ஆசிரியர். இலங்கையைச் சேர்ந்தவர்.
(பார்க்க கனகசபைப்பிள்ளை, வி.கனகசபைப் பிள்ளை )
பிறப்பு, கல்வி
அளவெட்டி கனகசபைப் புலவர் (கனகசபைப் பிள்ளை) இலங்கையில் அளவெட்டியில் வேலுப்பிள்ளையின் மகனாக 12 மாசி 1815 ல் பிறந்தார். இவருடைய தந்தை வேலுப்பிள்ளை சைவராக இருந்து மதம் மாறியவர். இவருடைய முழுப்பெயர் ஜெர்மையா எவாட்ஸ் கனகசபைப் பிள்ளை.
கனகசபைப் பிள்ளை வட்டுக்கோட்டை குருமடம் நடத்திய கல்விச்சாலையில் பயின்றார். அங்கே நேதன் வார்ட் இவருடைய ஆசிரியர். அவரிடமிருந்து மருத்துவக் கல்வியையும் பெற்றார்.
கனகசபைப் புலவர் வியாக்ரபாத முனிவர் புராணத்தை இயற்றிய வைத்தியநாதத் தம்புரான் வழியில் வந்தவர் என்பது அவர் கண்டி அரசர் வழிவந்த அழகர்சாமி என்பவருக்கு எழுதிய சீட்டுகவியின் வழியாகத் தெரியவருகிறது.’
தனிவாழ்க்கை
கனகசபைப் பிள்ளை சென்னையில் அமெரிக்க மிஷன் சார்பில் தமிழ் அகராதிப் பணி நிகழ்ந்தபோது அதில் பங்கெடுத்தார்.. வினோதரச மஞ்சரி எழுதிய வீராச்சாமிச் செட்டியார் இதில் பணியாற்றினார்.பின்னர் மானிப்பாய் நகரிலுள்ள அமெரிக்க மிஷன் அச்சு இயந்திர சாலையில் மேற்பார்வையாளராகவும், கோப்பாயிலுள்ள தமிழ்ப்பாடசாலை தமிழாசிரியராகவும் பணியாற்றினார். கூடவே மருத்துவத் தொழிலையும் செய்துவந்தார்.
கனகசபை பிள்ளைக்கு இரு மகன்கள். ஒருவர் மருத்துவராகவும் இன்னொருவர் இலங்கையிலுள்ள சுண்டிக்குளி பாடசாலை தலைமையாசிரியராகவும் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
அளவெட்டி கனகசபைப் புலவர் வேலூரில் வாழ்ந்துவந்த இலங்கையிலுள்ள கண்டி அரசரின் பேரனான அழகர்சாமியிடம் கனசபைப்புலவர் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். அவர்மேல் அழகர்சாமி மடல் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றினார். கனகசபைப் பிள்ளை கிறிஸ்தவக் காப்பியமாகிய திருவாக்குப் புராணத்தை இயற்றினார். ஒரு நிகண்டு நூலையும் படைத்துள்ளார்.
மறைவு
கனகசபை பிள்ளை தன் மருத்துவப் பணிக்காக பூநகரிக்குச் சென்றிருந்தபோது இரத்த அழுத்தம் காரணமாக மயங்கிவிழுந்து 1879 தை மாதம் 9 ஆம் தேதி மரணமடைந்தார்.
இலக்கிய இடம்
கனகசபைப் பிள்ளை தமிழ் கிறிஸ்தவ இலக்கியத்தில் பங்களிப்பாற்றியவர். அவர் மறைவின்போது ஈழ இதழான உதயதாரகை இவ்வாறு எழுதியது. ‘தமிழுக்கு தொண்டுசெய்தோன் சாவதில்லை என்று அறிஞர் கூறுவர். கனகசபைப் பிள்ளை அவர்கள் தமிழுக்கும் தொண்டுசெய்தார். இறையரசரான இயேசுபிரானுக்கும் உண்மையடியவராக விளங்கி திருவாக்கு புராணம் முதலான பல பனுவல்களைத் தந்தார்
நூல்கள் பட்டியல்
புராணம்
மடல்
- அழகர்சாமி மடல்
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா
- யாழ்ப்பாணச் சரித்திரம் - நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1912)
- |சிற்றிலக்கியப் புலவர் அகராதி - ந.வீ.செயராமன் (1983)
- இந்துக் கலைக்களஞ்சியம் - கலாகீர்த்தி பொ பூலோகசிங்கம் (1990)
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
- Sivamala: கனகசபைப் புலவர் 1826 முதல் 1873 வரை
- கிறித்தவக் காப்பியங்கள். யோ.ஞானசந்திர ஜான்சன். உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு 2012
✅Finalised Page