standardised

ஏகம்பவாணன்

From Tamil Wiki
Revision as of 16:17, 20 April 2022 by Tamaraikannan (talk | contribs)

ஏகம்பவாணன் (வாண முதலியார்) பெருஞ்செல்வர். புலவர்களை ஆதரித்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஆற்றூரில் வானமுதலியாருக்கு மகனாகப் பிறந்தார். தாய் தந்தை காலமானதால் ஏகன்சம்பான் என்ற வேலையாளிடம் வளர்ந்தார். பள்ளிக் கல்வி பயின்றார். கம்பரிடம் மாணவனாகப் பயின்றார். தன்னை வளர்த்து உயிர் நீர்த்த ஏகன்சம்பான் மற்றும் ஆசிரியர் கம்பரின் நினைவாக தன் பெயரை ஏகம்பவாணன் என மாற்றிக் கொண்டார். பயிர்த்தொழில், நூலாராய்ச்சியில் ஈடுபட்டார். சேர, சோழ, பாண்டிய மன்னரிடம் தன் பெருஞ்செல்வம் கொண்டு போரிட்டார்.

இலக்கிய வாழ்க்கை

புலவர்களுக்கு பரிசில்கள் அளித்து ஆதரித்தார். இவரின் நூல்களோ, தனிப்பாடல்களோ கிடைக்கவில்லை. இவரைப் பற்றி புலவர்கள் பாடிய பாடல்கள் உள்ளன.

பாடல் நடை

ஏகம்பவாணன் பற்றிய பாடல்

தேரு ளைப்புரவி வார ணத்தொகுதி
திறைகொ ணர்ந்து வரு மன்ன நின்
தேச மேதுனது நாம மேதுபுகல்
செங்கை யாழ்தடவு பாணரே

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.