under review

எஸ். ராமகிருஷ்ணன்: Difference between revisions

From Tamil Wiki
(category & stage updated)
(Standardised)
Line 1: Line 1:
[[File:எஸ். ரா.jpg|thumb|200x200px|எஸ். ராமகிருஷ்ணன்]]
[[File:எஸ். ரா.jpg|thumb|200x200px|எஸ். ராமகிருஷ்ணன்]]
எஸ். ராமகிருஷ்ணன் (பிறப்பு:  ஏப்ரல் 13, 1966 ) தமிழில் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம்,குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் ஆகிய தளங்களில் எழுதி வருபவர். உலக இலக்கியம் மற்றும் உலக சினிமா குறித்த  உரைகள் நிகழ்த்தியிருக்கிறார்.
எஸ். ராமகிருஷ்ணன் (ஏப்ரல் 13, 1966) தமிழில் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம்,குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் ஆகிய தளங்களில் எழுதி வருபவர். உலக இலக்கியம் மற்றும் உலக சினிமா குறித்த  உரைகள் நிகழ்த்தியிருக்கிறார்.


எஸ். ராமகிருஷ்ணனின் ஆரம்பகட்ட கதைகள் கறாரான யதார்த்தவாத அல்லது இயல்புவாத வகைமையை சேர்ந்தவை. பின்னர் மாய யதார்த்தப் புனைவுகளை எழுதினார். கரிசல் நில மக்களின் உள்ளங்களை கட்டமைத்திருக்கும் தொன்மங்களையும் ஆழ்படிமங்களையும் எழுத்திற்குள் கொண்டுவந்தவர்.
எஸ். ராமகிருஷ்ணனின் ஆரம்பகட்ட கதைகள் கறாரான யதார்த்தவாத அல்லது இயல்புவாத வகைமையை சேர்ந்தவை. பின்னர் மாய யதார்த்தப் புனைவுகளை எழுதினார். கரிசல் நில மக்களின் உள்ளங்களை கட்டமைத்திருக்கும் தொன்மங்களையும் ஆழ்படிமங்களையும் எழுத்திற்குள் கொண்டுவந்தவர்.


== வாழ்க்கைக் குறிப்பு ==
== பிறப்பு, இளமை ==
 
===== பிறப்பு, இளமை =====
எஸ். ராமகிருஷ்ணன், ஏப்ரல் 13, 1966 ல் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர் என்ற ஊரில் சண்முகம் - மங்கையர்க்கரசி இணையருக்குப் பிறந்தவர்.ஆங்கில இலக்கியம் பயின்று அதிலேயே முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி இடையில் கைவிட்டிருக்கிறார்.
எஸ். ராமகிருஷ்ணன், ஏப்ரல் 13, 1966 ல் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர் என்ற ஊரில் சண்முகம் - மங்கையர்க்கரசி இணையருக்குப் பிறந்தவர்.ஆங்கில இலக்கியம் பயின்று அதிலேயே முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி இடையில் கைவிட்டிருக்கிறார்.


பத்திரிக்கையாளராக தனது இலக்கிய பயணத்தை தொடங்கினார். "அட்சரம்" என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வரை வெளியிட்டிருக்கிறார்.தற்போது தேசாந்திரி என்ற பதிப்பகம் ஒன்றை துவக்கி நடத்திவருகிறார்.
பத்திரிக்கையாளராக தனது இலக்கிய பயணத்தை தொடங்கினார். "அட்சரம்" என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வரை வெளியிட்டிருக்கிறார்.தற்போது தேசாந்திரி என்ற பதிப்பகம் ஒன்றை துவக்கி நடத்திவருகிறார்.


===== குடும்பம் =====
== தனிவாழ்க்கை ==
மனைவி சந்திர பிரபா. மகன்கள் ஹரிபிரசாத், ஆகாஷ். சென்னையில் வசித்து வருகிறார்.
மனைவி சந்திர பிரபா. மகன்கள் ஹரிபிரசாத், ஆகாஷ். சென்னையில் வசித்து வருகிறார்.


Line 19: Line 17:
எஸ். ராமகிருஷ்ணனின் தந்தைவழித் தாத்தா திராவிட இயக்கத்தில் பற்றுடையவர். தாய்வழித் தாத்தா சைவ சமயப் பற்றுடையவர். இவ்விரு வீடுகளிலும் இலக்கியங்கள், சமூகச் சிந்தனைகளைப் படித்தும், பேசியும் வரும் சூழல் நிலவியதாகக் குறிப்பிடுகிறார்.
எஸ். ராமகிருஷ்ணனின் தந்தைவழித் தாத்தா திராவிட இயக்கத்தில் பற்றுடையவர். தாய்வழித் தாத்தா சைவ சமயப் பற்றுடையவர். இவ்விரு வீடுகளிலும் இலக்கியங்கள், சமூகச் சிந்தனைகளைப் படித்தும், பேசியும் வரும் சூழல் நிலவியதாகக் குறிப்பிடுகிறார்.


எஸ். ராமகிருஷ்ணனின் முதல் கதையான "பழைய தண்டவாளம்" கணையாழியில் வெளியாகியிருக்கிறது. 1984-இல் எழுதத் தொடங்கியிருக்கிறார்.
எஸ். ராமகிருஷ்ணனின் முதல் கதையான "பழைய தண்டவாளம்" கணையாழியில் வெளியாகியிருக்கிறது. 1984-ல் எழுதத் தொடங்கியிருக்கிறார்.


தமிழில் ஓர் அறிவியக்கம் என்றவகையில் செயல்படுபவர் எஸ். ராமகிருஷ்ணன். தமிழகத்தின் தலைசிறந்த மேடைப்பேச்சாளர்களில் ஒருவர். பயணக்கட்டுரை எழுத்தாளர். திரைப்படங்களை அறிமுகம் செய்பவர். நூலறிமுகங்களை விரிவாக நிகழ்த்துபவர். அவருடைய அறிவுலகில் நுழையும் ஒரு வாசகர் சமகால உலகஅறிவுச்செயல்பாட்டின் பல தளங்களை நோக்கி ஆளுமை விரியப்பெறுவார்.
தமிழில் ஓர் அறிவியக்கம் என்றவகையில் செயல்படுபவர் எஸ். ராமகிருஷ்ணன். தமிழகத்தின் தலைசிறந்த மேடைப்பேச்சாளர்களில் ஒருவர். பயணக்கட்டுரை எழுத்தாளர். திரைப்படங்களை அறிமுகம் செய்பவர். நூலறிமுகங்களை விரிவாக நிகழ்த்துபவர். அவருடைய அறிவுலகில் நுழையும் ஒரு வாசகர் சமகால உலகஅறிவுச்செயல்பாட்டின் பல தளங்களை நோக்கி ஆளுமை விரியப்பெறுவார்.
Line 27: Line 25:
எஸ். ராமகிருஷ்ணனின்  படைப்புகள் இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன.
எஸ். ராமகிருஷ்ணனின்  படைப்புகள் இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன.


2018ம் ஆண்டு ''சஞ்சாரம்'' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2018-ஆம் ஆண்டு ''சஞ்சாரம்'' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்.


== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
Line 38: Line 36:


== விருதுகள் ==
== விருதுகள் ==
1. தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த நாவல் விருது (2001)
2. ஞானவாணி விருது - நெடுங்குருதி  புதினம் - பழனி வாழிய உலகநல நற்பணி மன்றம் (2003)
3. தமிழ் வளர்ச்சித் துறை விருது - அரவான் எனும் நாடகம் (2006)
4. சிறந்த  புனைவு இலக்கிய விருது - யாமம் புதினம் -கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம்  (2007)
5. சிகேகே இலக்கிய விருது - ஈரோடு சிகேகே அறக்கட்டளை வழங்கிய (2008)
6. தாகூர் இலக்கிய விருது  - யாமம் புதினத்துக்காக - சாம்சங் இந்தியா நிறுவனமும் சாகித்திய அகாதமியும் இணைந்து வழங்கும் விருது (2010)
7. இயல் விருது - வாழ்நாள் சாதனையாளர் விருது - கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம்  (2011)


8. சாகித்ய அகாதமி விருது - சஞ்சாரம் நாவல் (2018)
* தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த நாவல் விருது (2001)
* ஞானவாணி விருது - நெடுங்குருதி  நாவல் - பழனி வாழிய உலகநல நற்பணி மன்றம் (2003)
* தமிழ் வளர்ச்சித் துறை விருது - அரவான் எனும் நாடகம் (2006)
* சிறந்த  புனைவு இலக்கிய விருது - யாமம் நாவல் - கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம்  (2007)
* சிகேகே இலக்கிய விருது - ஈரோடு சிகேகே அறக்கட்டளை (2008)
* தாகூர் இலக்கிய விருது  - யாமம் நாவல் - சாம்சங் இந்தியா நிறுவனமும் சாகித்திய அகாதமியும் இணைந்து வழங்கும் விருது (2010)
* இயல் விருது - வாழ்நாள் சாதனையாளர் விருது - கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம்  (2011)
* சாகித்ய அகாதமி விருது - சஞ்சாரம் நாவல் (2018)


இவர் பெற்றுள்ள பிற விருதுகளாவன:
இவர் பெற்றுள்ள பிற விருதுகளாவன:


மாக்சிம்கார்க்கி விருது,நல்லி திசை எட்டும் விருது, விஸ்டம் விருது, கண்ணதாசன் விருது, பெரியார் விருது, துருவா விருது, எஸ்.ஆர்.வி. இலக்கிய விருது, சேலம் தமிழ் சங்க விருது, விகடன் விருது, கொடீசியா வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது, இயற்றமிழ் வித்தகர் விருது. இலக்கியச்சிந்தனை விருது.கலைஞர் பொற்கிழி விருது.
* மாக்சிம்கார்க்கி விருது
* நல்லி திசை எட்டும் விருது
* விஸ்டம் விருது
* கண்ணதாசன் விருது
* பெரியார் விருது
* துருவா விருது
* எஸ்.ஆர்.வி. இலக்கிய விருது
* சேலம் தமிழ் சங்க விருது
* விகடன் விருது
* கொடீசியா வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது
* இயற்றமிழ் வித்தகர் விருது
* இலக்கியச்சிந்தனை விருது
* கலைஞர் பொற்கிழி விருது


== படைப்புகள் ==
== படைப்புகள் ==
Line 68: Line 72:
* துயில் (2010)
* துயில் (2010)
* நிமித்தம் (2013)
* நிமித்தம் (2013)
* சஞ்சாரம் (2014) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல்-2018)
* சஞ்சாரம் (2014) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல் - 2018)
* இடக்கை (2016)
* இடக்கை (2016)
* பதின் (2017)
* பதின் (2017)
Line 91: Line 95:
* காந்தியோடு பேசுவேன் (2013)
* காந்தியோடு பேசுவேன் (2013)
* என்ன சொல்கிறாய் சுடரே (2015)
* என்ன சொல்கிறாய் சுடரே (2015)
*ஐந்து வருட மௌனம்(2021)
*ஐந்து வருட மௌனம் (2021)


===== கட்டுரைத் தொகுப்புகள் =====
===== கட்டுரைத் தொகுப்புகள் =====


* விழித்திருப்பவனின் இரவு(2005)
* விழித்திருப்பவனின் இரவு (2005)
* இலைகளை வியக்கும் மரம்(2007)
* இலைகளை வியக்கும் மரம் (2007)
* என்றார் போர்ஹே(2009)
* என்றார் போர்ஹே (2009)
* கதாவிலாசம்(2005)
* கதாவிலாசம் (2005)
* தேசாந்திரி(2006)
* தேசாந்திரி (2006)
* கேள்விக்குறி(2007)
* கேள்விக்குறி (2007)
* துணையெழுத்து(2004)
* துணையெழுத்து (2004)
* ஆதலினால்(2008)
* ஆதலினால் (2008)
* வாக்கியங்களின் சாலை(2002)
* வாக்கியங்களின் சாலை (2002)
* சித்திரங்களின் விசித்திரங்கள்(2008)
* சித்திரங்களின் விசித்திரங்கள் (2008)
* நம் காலத்து நாவல்கள்(2008)
* நம் காலத்து நாவல்கள் (2008)
* காற்றில் யாரோ நடக்கிறார்கள்(2008)
* காற்றில் யாரோ நடக்கிறார்கள் (2008)
* கோடுகள் இல்லாத வரைபடம் - உலகம் சுற்றிய பயணிகளைப் பற்றிய கட்டுரைகள்
* கோடுகள் இல்லாத வரைபடம் - உலகம் சுற்றிய பயணிகளைப் பற்றிய கட்டுரைகள்
* மலைகள் சப்தமிடுவதில்லை(2009)
* மலைகள் சப்தமிடுவதில்லை (2009)
* வாசகபர்வம்(2009)
* வாசகபர்வம் (2009)
* சிறிது வெளிச்சம்(2010)
* சிறிது வெளிச்சம் (2010)
* காண் என்றது இயற்கை(2010)
* காண் என்றது இயற்கை (2010)
* செகாவின்மீது பனி பெய்கிறது(2010)
* செகாவின்மீது பனி பெய்கிறது (2010)
* குறத்தி முடுக்கின் கனவுகள்(2010)
* குறத்தி முடுக்கின் கனவுகள் (2010)
* என்றும் சுஜாதா(2011)
* என்றும் சுஜாதா (2011)
* கலிலியோ மண்டியிடவில்லை(2011)
* கலிலியோ மண்டியிடவில்லை (2011)
* சாப்ளினுடன் பேசுங்கள்(2011)
* சாப்ளினுடன் பேசுங்கள் (2011)
* கூழாங்கற்கள் பாடுகின்றன(2011)
* கூழாங்கற்கள் பாடுகின்றன (2011)
* எனதருமை டால்ஸ்டாய்(2011)
* எனதருமை டால்ஸ்டாய் (2011)
* ரயிலேறிய கிராமம்(2012)
* ரயிலேறிய கிராமம் (2012)
* ஆயிரம் வண்ணங்கள்(2016)
* ஆயிரம் வண்ணங்கள் (2016)
* பிகாசோவின் கோடுகள்(2012)
* பிகாசோவின் கோடுகள் (2012)
* இலக்கற்ற பயணி(2013)
* இலக்கற்ற பயணி (2013)
*காந்தியின் நிழலில்(2021)
*காந்தியின் நிழலில் (2021)
*நூலக மனிதர்கள்(2021)
*நூலக மனிதர்கள் (2021)
*காலத்தின் சிற்றலை(2021)
*காலத்தின் சிற்றலை (2021)
*நேற்றின் நினைவுகள்(2021)
*நேற்றின் நினைவுகள் (2021)


===== திரைப்படம் குறித்த நூல்கள் =====
===== திரைப்படம் குறித்த நூல்கள் =====
Line 188: Line 192:
===== நாடகத் தொகுப்புகள் =====
===== நாடகத் தொகுப்புகள் =====


* அரவான்(2006)
* அரவான் (2006)
* சிந்துபாத்தின் மனைவி (2013)
* சிந்துபாத்தின் மனைவி (2013)
* சூரியனை சுற்றும் பூமி (2013)
* சூரியனை சுற்றும் பூமி (2013)
Line 199: Line 203:
===== மொழிபெயர்ப்புகள் =====
===== மொழிபெயர்ப்புகள் =====


* நம்பிக்கையின் பரிமாணங்கள்(1994)
* நம்பிக்கையின் பரிமாணங்கள் (1994)
* ஆலீஸின் அற்புத உலகம் (1993)
* ஆலீஸின் அற்புத உலகம் (1993)
* பயணப்படாத பாதைகள் (2003)
* பயணப்படாத பாதைகள் (2003)
Line 205: Line 209:
===== தொகை நூல்கள் =====
===== தொகை நூல்கள் =====


* அதே இரவு, அதே வரிகள், (அட்சரம் இதழ்களின் தொகுப்பு)
* அதே இரவு, அதே வரிகள் (அட்சரம் இதழ்களின் தொகுப்பு)
* வானெங்கும் பறவைகள்
* வானெங்கும் பறவைகள்



Revision as of 12:56, 8 February 2022

எஸ். ராமகிருஷ்ணன்

எஸ். ராமகிருஷ்ணன் (ஏப்ரல் 13, 1966) தமிழில் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம்,குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் ஆகிய தளங்களில் எழுதி வருபவர். உலக இலக்கியம் மற்றும் உலக சினிமா குறித்த  உரைகள் நிகழ்த்தியிருக்கிறார்.

எஸ். ராமகிருஷ்ணனின் ஆரம்பகட்ட கதைகள் கறாரான யதார்த்தவாத அல்லது இயல்புவாத வகைமையை சேர்ந்தவை. பின்னர் மாய யதார்த்தப் புனைவுகளை எழுதினார். கரிசல் நில மக்களின் உள்ளங்களை கட்டமைத்திருக்கும் தொன்மங்களையும் ஆழ்படிமங்களையும் எழுத்திற்குள் கொண்டுவந்தவர்.

பிறப்பு, இளமை

எஸ். ராமகிருஷ்ணன், ஏப்ரல் 13, 1966 ல் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர் என்ற ஊரில் சண்முகம் - மங்கையர்க்கரசி இணையருக்குப் பிறந்தவர்.ஆங்கில இலக்கியம் பயின்று அதிலேயே முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி இடையில் கைவிட்டிருக்கிறார்.

பத்திரிக்கையாளராக தனது இலக்கிய பயணத்தை தொடங்கினார். "அட்சரம்" என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வரை வெளியிட்டிருக்கிறார்.தற்போது தேசாந்திரி என்ற பதிப்பகம் ஒன்றை துவக்கி நடத்திவருகிறார்.

தனிவாழ்க்கை

மனைவி சந்திர பிரபா. மகன்கள் ஹரிபிரசாத், ஆகாஷ். சென்னையில் வசித்து வருகிறார்.

இலக்கியவாழ்க்கை

எஸ். ராமகிருஷ்ணன் - சஞ்சாரம்

எஸ். ராமகிருஷ்ணனின் தந்தைவழித் தாத்தா திராவிட இயக்கத்தில் பற்றுடையவர். தாய்வழித் தாத்தா சைவ சமயப் பற்றுடையவர். இவ்விரு வீடுகளிலும் இலக்கியங்கள், சமூகச் சிந்தனைகளைப் படித்தும், பேசியும் வரும் சூழல் நிலவியதாகக் குறிப்பிடுகிறார்.

எஸ். ராமகிருஷ்ணனின் முதல் கதையான "பழைய தண்டவாளம்" கணையாழியில் வெளியாகியிருக்கிறது. 1984-ல் எழுதத் தொடங்கியிருக்கிறார்.

தமிழில் ஓர் அறிவியக்கம் என்றவகையில் செயல்படுபவர் எஸ். ராமகிருஷ்ணன். தமிழகத்தின் தலைசிறந்த மேடைப்பேச்சாளர்களில் ஒருவர். பயணக்கட்டுரை எழுத்தாளர். திரைப்படங்களை அறிமுகம் செய்பவர். நூலறிமுகங்களை விரிவாக நிகழ்த்துபவர். அவருடைய அறிவுலகில் நுழையும் ஒரு வாசகர் சமகால உலகஅறிவுச்செயல்பாட்டின் பல தளங்களை நோக்கி ஆளுமை விரியப்பெறுவார்.

இந்தியா முழுவதும் பயணித்து  எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா என இரண்டு வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார்.

எஸ். ராமகிருஷ்ணனின்  படைப்புகள் இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன.

2018-ஆம் ஆண்டு சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்.

இலக்கிய இடம்

எஸ். ராமகிருஷ்ணன்

எஸ். ராமகிருஷ்ணன் அடிப்படையில்  வறண்ட நெல்லையின் கதையாசிரியர். இயல்புவாதத் தன்மைகொண்ட இவ்வெழுத்து புறவயமான யதார்த்தநடை கொண்டது. நேரடியான அறிக்கையிடும் பாவனை கொண்ட கதைகள். "என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம்." என்னும் அவருடைய வரிகளே அவருடைய இவ்வகையான கதைகளின் கூறுமுறை. அவருடைய மனிதர்கள் இந்த வாழ்க்கையின் சூதாட்டத்தில் தங்களைத் தாங்களே தொடர்ந்து இழப்பவர்கள். அவமானத்தையும் கசப்பையும் புறக்கணிப்பையும் வைராக்கியத்துடன் கடந்து செல்பவர்கள்.

அந்த வறண்ட நிலத்தின் கைவிடப்பட்ட தனிமையிலிருந்து அடுக்கடுக்காக மாயம் பெருகும் ஒரு புனைவுநிலத்தை நோக்கிச் செல்ல தலைப்பட்டது தான் எஸ். ராமகிருஷ்ணனின் இரண்டாம் கட்ட எழுத்துக்கள்.அந்த மாய புனைவு நிலம் லத்தீனமேரிக்க எழுத்தாளர்களில் இருந்து அவருக்குக் கிடைத்தது.அதில் தத்துவத் தேடலும் அதை வெளிப்படுத்துவதற்குரிய ஒரு மீபொருண்மை சார்ந்த குறியீட்டுத்தளமும் கொண்ட படைப்புகளை எழுதியிருக்கிறார்.

மேற்கூறிய  இருஅழகியல்களின் கலவை என எஸ். ராமகிருஷ்ணனை சொல்லமுடியும். முன்னதற்கு முன்னோடிகளாக பூமணியையும் பின்னதற்கு வண்ணநிலவன், வண்ணதாசன் இருவரையும் சுட்டிக்காட்டலாம்.எஸ். ராமகிருஷ்ணனின் முற்போக்குச் சமூகநோக்குக்கும் அவருடைய மீபொருண்மை நோக்குக்கும் இடையேயான முரண்பாடுதான் அவருடைய புனைவுலகு . உண்மையில் அவ்விரு சரடுகளுக்கு இடையேயான முரணியக்கமே அவரது படைப்புகள்.

விருதுகள்

  • தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த நாவல் விருது (2001)
  • ஞானவாணி விருது - நெடுங்குருதி  நாவல் - பழனி வாழிய உலகநல நற்பணி மன்றம் (2003)
  • தமிழ் வளர்ச்சித் துறை விருது - அரவான் எனும் நாடகம் (2006)
  • சிறந்த  புனைவு இலக்கிய விருது - யாமம் நாவல் - கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம்  (2007)
  • சிகேகே இலக்கிய விருது - ஈரோடு சிகேகே அறக்கட்டளை (2008)
  • தாகூர் இலக்கிய விருது  - யாமம் நாவல் - சாம்சங் இந்தியா நிறுவனமும் சாகித்திய அகாதமியும் இணைந்து வழங்கும் விருது (2010)
  • இயல் விருது - வாழ்நாள் சாதனையாளர் விருது - கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம்  (2011)
  • சாகித்ய அகாதமி விருது - சஞ்சாரம் நாவல் (2018)

இவர் பெற்றுள்ள பிற விருதுகளாவன:

  • மாக்சிம்கார்க்கி விருது
  • நல்லி திசை எட்டும் விருது
  • விஸ்டம் விருது
  • கண்ணதாசன் விருது
  • பெரியார் விருது
  • துருவா விருது
  • எஸ்.ஆர்.வி. இலக்கிய விருது
  • சேலம் தமிழ் சங்க விருது
  • விகடன் விருது
  • கொடீசியா வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது
  • இயற்றமிழ் வித்தகர் விருது
  • இலக்கியச்சிந்தனை விருது
  • கலைஞர் பொற்கிழி விருது

படைப்புகள்

நாவல்கள்
  • உப பாண்டவம் (2000)
  • நெடுங்குருதி (2003)
  • உறுபசி (2005)
  • யாமம் (2007)
  • துயில் (2010)
  • நிமித்தம் (2013)
  • சஞ்சாரம் (2014) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல் - 2018)
  • இடக்கை (2016)
  • பதின் (2017)
  • ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை (2019)
  • மண்டியிடுங்கள் தந்தையே (2021)
சிறுகதைத் தொகுப்புகள்
  • வெளியில் ஒருவன், சென்னை புக்ஸ்
  • காட்டின் உருவம், அன்னம்
  • எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் பாகம் 1, 2 மற்றும் 3 (2014)
  • நடந்துசெல்லும் நீரூற்று (2006)
  • பதினெட்டாம் நூற்றாண்டின் மழை (2008)
  • அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது (2010)
  • நகுலன் வீட்டில் யாருமில்லை (2009)
  • புத்தனாவது சுலபம் (2011)
  • தாவரங்களின் உரையாடல் (2007)
  • வெயிலை கொண்டு வாருங்கள் (2001)
  • பால்ய நதி (2003)
  • மழைமான் (2012)
  • குதிரைகள் பேச மறுக்கின்றன (2013)
  • காந்தியோடு பேசுவேன் (2013)
  • என்ன சொல்கிறாய் சுடரே (2015)
  • ஐந்து வருட மௌனம் (2021)
கட்டுரைத் தொகுப்புகள்
  • விழித்திருப்பவனின் இரவு (2005)
  • இலைகளை வியக்கும் மரம் (2007)
  • என்றார் போர்ஹே (2009)
  • கதாவிலாசம் (2005)
  • தேசாந்திரி (2006)
  • கேள்விக்குறி (2007)
  • துணையெழுத்து (2004)
  • ஆதலினால் (2008)
  • வாக்கியங்களின் சாலை (2002)
  • சித்திரங்களின் விசித்திரங்கள் (2008)
  • நம் காலத்து நாவல்கள் (2008)
  • காற்றில் யாரோ நடக்கிறார்கள் (2008)
  • கோடுகள் இல்லாத வரைபடம் - உலகம் சுற்றிய பயணிகளைப் பற்றிய கட்டுரைகள்
  • மலைகள் சப்தமிடுவதில்லை (2009)
  • வாசகபர்வம் (2009)
  • சிறிது வெளிச்சம் (2010)
  • காண் என்றது இயற்கை (2010)
  • செகாவின்மீது பனி பெய்கிறது (2010)
  • குறத்தி முடுக்கின் கனவுகள் (2010)
  • என்றும் சுஜாதா (2011)
  • கலிலியோ மண்டியிடவில்லை (2011)
  • சாப்ளினுடன் பேசுங்கள் (2011)
  • கூழாங்கற்கள் பாடுகின்றன (2011)
  • எனதருமை டால்ஸ்டாய் (2011)
  • ரயிலேறிய கிராமம் (2012)
  • ஆயிரம் வண்ணங்கள் (2016)
  • பிகாசோவின் கோடுகள் (2012)
  • இலக்கற்ற பயணி (2013)
  • காந்தியின் நிழலில் (2021)
  • நூலக மனிதர்கள் (2021)
  • காலத்தின் சிற்றலை (2021)
  • நேற்றின் நினைவுகள் (2021)
திரைப்படம் குறித்த நூல்கள்
  • பதேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள் (2006)
  • அயல் சினிமா (2007)
  • உலக சினிமா (2008)
  • பேசத்தெரிந்த நிழல்கள் (2009)
  • சாப்ளினோடு பேசுங்கள் (2011)
  • இருள் இனிது ஒளி இனிது (2014)
  • பறவைக் கோணம் (2012)
  • சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் (2013)
  • நான்காவது சினிமா (2014)
  • குற்றத்தின் கண்கள் (2016)
  • காட்சிகளுக்கு அப்பால் (2017)
குழந்தைகள் நூல்கள்
  • ஏழு தலைநகரம் கதைகள் (2005)
  • கிறு கிறு வானம் (2006)
  • கால் முளைத்த கதைகள் (2006)
  • நீள நாக்கு (2011)
  • பம்பழாபம் (2011)
  • எழுத தெரிந்த புலி (2011)
  • காசு கள்ளன் (2011)
  • தலையில்லாத பையன் (2011)
  • எனக்கு ஏன் கனவு வருது (2011)
  • வானம்
  • லாலிபாலே
  • நீளநாக்கு
  • லாலீப்பலே (2011)
  • அக்காடா (2013)
  • சிரிக்கும் வகுப்பறை (2013)
  • வெள்ளை ராணி (2014)
  • அண்டசராசம் (2014)
  • சாக்கிரடீஸின் சிவப்பு நூலகம் (2014)
  • கார்ப்பனை குதிரை (2014)
  • படிக்க தெரிந்த சிங்கம் (2016)
  • மீசை இல்லாத ஆப்பிள் (2016)
  • பூனையின் மனைவி (2016)
  • இறக்கை விரிக்கும் மரம் (2016)
  • உலகின் மிகச்சிறிய தவளை (2016)
  • எலியின் பாஸ்வோர்ட் (2017)
  • டான்டூனின் கேமிரா(2021)
உலக இலக்கியப் பேருரைகள்
  • ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் (2013)
  • ஹோமரின் இலியட் (2013)
  • ஷேக்ஸ்பியரின் மெக்பெத் (2013)
  • ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் (2013)
  • தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் (2013)
  • லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா (2013)
  • பாஷோவின் ஜென் கவிதைகள் (2013)
வரலாறு
  • எனது இந்தியா
  • மறைக்கப்பட்ட இந்தியா
நாடகத் தொகுப்புகள்
  • அரவான் (2006)
  • சிந்துபாத்தின் மனைவி (2013)
  • சூரியனை சுற்றும் பூமி (2013)
நேர்காணல் தொகுப்புகள்
  • எப்போதுமிருக்கும் கதை
  • பேசிக்கடந்த தூரம்
மொழிபெயர்ப்புகள்
  • நம்பிக்கையின் பரிமாணங்கள் (1994)
  • ஆலீஸின் அற்புத உலகம் (1993)
  • பயணப்படாத பாதைகள் (2003)
தொகை நூல்கள்
  • அதே இரவு, அதே வரிகள் (அட்சரம் இதழ்களின் தொகுப்பு)
  • வானெங்கும் பறவைகள்
ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள்
  • Nothing but water
  • Whirling swirling sky

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.