எஸ். முத்தையா

From Tamil Wiki
Revision as of 23:16, 5 February 2022 by Anangan (talk | contribs)

work on anangan

எஸ்.முத்தையா (13-4-1930 - 20-4-2019) வரலாற்று ஆய்வாளர். பத்திரிக்கையாளர். சென்னை நகரத்தை முதன்மையாகக் கொண்டு ஆய்வு செய்திருக்கிறார்.

பிறப்பு, கல்வி

எஸ்.முத்தையா சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் 13-4-1930ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை  சுப்பையா செட்டியார், அன்னை செட்டியாள் ஆச்சி. தந்தை சுப்பையா கொழும்புவில் மேயராக பணியாற்றினார். தனது பள்ளி படிப்பை கொழும்புவில் முடித்தார். அமெரிக்காவில் இளங்கலை அறிவியல் கட்டிடப் பொறியியலும் (BSc civil engineering), சர்வேதேச அரசியலில் M.A. பயின்று பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

1968ஆம் ஆண்டு  வள்ளியம்மையை மணந்தார். மகள்கள் ரஞ்சனி, பார்வதி. 1951ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டு வரை தி டைம்ஸ் ஆஃப் சிலோன் பத்திரிக்கையில் பணியாற்றினார். அவர் அதன் வெளிநாட்டு  தொடர்பு செய்தி ஆசிரியராக இருந்து தலைமை ஆசிரியராக  ஆனார்.  பின்னர் அதன் சண்டே டைம்ஸ் மற்றும் கிளை இதழ்களின் பொறுப்பாளராக இருந்தார். நியூஸ் க்ரோனிக்கல் ஆஃப் லண்டன்,  டெய்லி மெயில்,  தி அப்சர்வர்,  முதலிய சில பத்திரிக்கைகளில்  பணியாற்றி இருக்கிறார்.

1968ஆம் ஆண்டு இந்தியா திரும்பி சென்னையில் வசிக்கலானார். சென்னை டி.டி.கே என்னும் நிறுவனத்தில் மெட்ராஸ் நிலவரைபடத்தை (map) உருவாக்கும் பிரிவில் பொறுப்பேற்றார். சுற்றுலா புத்தகங்கள், நிலவரைபட ஏடுகளை(atlases) அப்போது வெளியிட்டு இருக்கிறார். இவர் பின்னர் புகழ்பெற்ற வரைபடவியளாளராக (cartographer) அறியப்பட்டார்.

2004 முதல் ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் டே, வார விழாக்களை நடத்துவதில் முக்கியப் பங்கு வகித்தவர்களில் எஸ்.முத்தையாவும் ஒருவர்.