எஸ்.கே. சஞ்சிகா: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
Line 23: | Line 23: | ||
* [https://iravie.com/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/ வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா (லதா கந்தையா) அவர்களுடனான நேர்காணல் – நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்: iravie] | * [https://iravie.com/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/ வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா (லதா கந்தையா) அவர்களுடனான நேர்காணல் – நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்: iravie] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 08:49, 24 February 2024
எஸ்.கே. சஞ்சிகா (வன்னிமகள்) (லதா) (பிறப்பு: ஏப்ரல் 24, 1979) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், சுதந்திர ஊடகவியலாளர், திரைப்பட நடிகர்.
வாழ்க்கைக் குறிப்பு
எஸ்.கே. சஞ்சிகா இலங்கை யாழ்ப்பாணத்தில் கந்தையா, நாகம்மா இணையருக்கு ஏப்ரல் 24, 1979-ல் பிறந்தார். கிளிநொச்சியை சேர்ந்தவர். இயற்பெயர் லதா. 1986-ல் தாய் தந்தையரை இழந்தார். செஞ்சோலையில் வளர்ந்தார். ஆரம்பக் கல்வியை கிளிநொச்சி சென்திரேசா மகளிர் கல்லூரியிலும், இடைநிலை, உயர்கல்வியை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரியிலும் கற்றார். யாழ் பல்கலைக்கழக கலைமாணி பட்டதாரி. தமிழீழ சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார்.
எஸ்.கே. சஞ்சிகாவிற்கு மூன்று பிள்ளைகள். முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் தனது இரண்டரை வயது மகனை இழந்தார்.
சமூகப்பணி
எஸ்.கே. சஞ்சிகா வறுமை நிலையிலிருக்கும் பிள்ளைகளுக்கு உணவு, சீருடை ஆகியவற்றைக் கொடுத்து இலவசமாக ஆரம்பப்பள்ளி நடத்தி வருகிறார். இதன் நிர்வாகியாகியாக உள்ளார். அகில இலங்கை சமாதான நீதவானாகவும்(பொதுமக்களின் தேவைகளை விரைவுபடுத்தவும், இலகுபடுத்தவும் ஏற்படுத்தப்பட்ட பதவி) உள்ளார்.
திரை வாழ்க்கை
எஸ்.கே. சஞ்சிகா 'நெருஞ்சிமுள்' என்னும் ஈழத்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். 'தெளிவு' என்னும் மாதாந்த கிறிஸ்தவ நாளிதழுக்கு ஐந்து வருடங்கள் ஆசிரியராக இருந்துள்ளார். 'சுவாசம் மட்டுமே சுடுகலனாய்' என்னும் கவிதை நூலை வெளியிட்டுள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
எஸ்.கே.சஞ்சிகா, 'தாரணி', 'துர்க்கா' , 'வன்னிமகள்' ஆகிய புனைபெயர்களில் எழுதினார். பன்னிரெண்டு வயதில் முதல் கவிதையை எழுதினார். அரசியல் கட்டுரை, கவிதை,சிறுகதை, புத்தக ஆய்வுரை, அரசியல் விமர்சனம் ஆகியவற்றை எழுதினார். சுதந்திர ஊடகவியலாளர். 'நெம்பு', 'வெளிச்சம்', 'சாளரம்' சஞ்சிகைகளிலும் ஈழநாதம், 'சுதந்திரப் பறவை' பெண்கள் பத்திரிகையிலும், சுடர்ஒளி, வீரகேசரி, தினக்குரல், 'எதிரொளி', 'புதுவிதி' ஆகிய சஞ்சிகைகளிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.
'விடுதலைக் கனல்' என்ற கவிதை நூலைத் தன் பதினைந்து வயதிலும் 'சுவாசம் மட்டுமே சுடுகலனாய்…' என்ற கவிதை நூலை போர் முடிந்த பின்பு 2018-லும் வெளியிட்டார்.
விருதுகள்
- 1993-ம் ஆண்டு அன்னை பூபதி பொது அறிவுத்தேர்வில் தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்றார்.
நூல் பட்டியல்
கவிதைத் தொகுப்பு
- சுவாசம் மட்டுமே சுடுகலனாய்
- விடுதலைக்கனல்
உசாத்துணை
- ஆளுமை:சஞ்சிகா, எஸ். கே: noolaham
- வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா (லதா கந்தையா) அவர்களுடனான நேர்காணல் – நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்: iravie
✅Finalised Page