எஸ்.எல்.எம். ஹனீபா: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "எஸ்.எல்.எம். ஹனீபா")
 
No edit summary
Line 1: Line 1:
எஸ்.எல்.எம். ஹனீபா
எஸ்.எல்.எம். ஹனீபா (ஏப்ரல் 1, 1946) ஈழத்து எழுத்தாளர், கால்நடை அபிவிருத்தி போதனையாசிரியர், அரசியல்வாதி.
 
== பிறப்பு, கல்வி ==
தம்பி சாய்வு சின்னலெவ்வைக்கும், முகைதீன் பாவா கலந்தர் உம்மாவுக்கும் மூன்றாவது குழந்தையாக இலங்கை, மீராவோடை மண்ணின் சட்டிப்பானைத்தெருவில் எஸ்.எல்.எம். ஹனீபா பிறந்தார். தந்தை ஆற்றுக்குப்போய் மீன் பிடித்து விற்கும் தொழில் செய்தார். 1960-ல் தந்தை சின்னலெவ்வை மூன்று கிராமங்களுக்குமான (மீராவோடை, ஓட்டமாவடி, வாழைச்சேனை) முஸ்லிம் விவாகப்பதிவாளராக நியமிக்கப்பட்டார். எஸ்.எல்.எம். ஹனீபாவின் உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். தனது ஆரம்பக்கல்வியை 1951ம்ஆண்டு மீராவோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கற்றார். ஹிதாயதுல்லாஹ் மௌலவியிடம்  இஸ்லாம் சமயப்பாடங்களைக் கற்றார். துரைராஜா, பொண்ணுசாமி, கிருஷ்ணப்பிள்ளை போன்ற நண்பர்கள் மூலம் பாடல்கள் கற்றார். ஐந்தாம் ஆண்டு ஓட்டமாவடி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையொன் பயின்றார். அங்கு கட்டாயப்பாடமாக சங்கீதமுதம், பரதநாட்டியமும் கற்றார். 1966,1967ம் ஆண்டுகளில் கிளிநொச்சி விவசாயப்பாடசாலையில் இணைந்து கல்வி கற்றார்.
 
== தனிவாழ்க்கை ==
விவசாயப்பாடசாலையில் பயின்ற பின் மலேரியா பிரிவில் வேலை கிடைத்தது. (அன்டி மலேரியா சூப்பவைசர்). அவர் காலத்தில்தான் கல்குடா தொகுதியில் மூன்று கிராமங்களுக்கும் முழுமையாக மலேரியா ஒழிப்பு எண்ணெய் அடிக்கப்பட்டது. 1968-ல் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியராக பேராதனை பல்கலைக்கழகத்தில் இணைந்தார். ஜனவரி 3, 1969-ல் அக்கரைப்பற்று நகரில் விவசாய அபிவிருத்தி போதனாசிரியராக(யுநுறு) பணி செய்தார்.
 
1976 முதல் 1978 வரை கண்டி வத்தேகம என்ற இடத்திலும், 1978-ல் வாழைச்சேனையிலும் பணி செய்தார். 1982 வரை கெகிராவ என்ற இடத்திற்கு இடமாற்றப்பட்டார். 1982-ல் ஆண்டு புத்தளத்திலும்  அங்கு ஜவாத் மரைக்கார் போன்றவர்களின் நட்பு கிடைக்கின்றது. மீளவும் 1984,1985களில் வாழைச்சேனைக்கு இடம்மாற்றம் கிடைக்கின்றது. 1986இல் மட்டக்களப்பு மாற்றலாகிச்செல்கின்றார். 1987,1988களில் மீண்டும் பொலனறுவைக்கு 1988இல் மீண்டும் வாழைச்சேனைக்கு இடம்மாற்றம் பெற்று வருகின்றார்.
 
நவம்பர் 26, 1968-ல் அஹமது உசன் முஹம்மது பாத்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகள்கள் ஜனூபா, மாஜிதா. மகன் நௌபல். 1970-ல் ஆண்டு வெளிக்கந்தையிலும், 1971-75 வரை திருக்கோணமடுவிலும் வேலை செய்தார்.
 
குறுந்தூர ஓட்டக்காரர். சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற அகில இலங்கை மட்டத்திலான போட்டியில் மூன்றாம் இடத்தினை எஸ்செல்லம் என்ற வீரர் பெறுகின்றார். பிறந்த மண்ணிற்கு தேசிய ரீதியில் புகழினை ஈட்டிக்கொடுக்கின்றார். 200 மீற்றர் ஓட்டத்தில் அவரை முந்திச்செல்ல மாகாணத்தில் எந்த ஜாம்பவானும் இருக்கவில்லை. 62,63 களில் ஒப்பற்ற ஓட்ட  வீரராக அவர் ஜொலித்திருப்பதனால்தான் இன்று வரை ஆரோக்கிய வாழ்வு வாழ்கின்றார்.
== அரசியல் வாழ்க்கை ==
1988 இல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வரை நாட்டின் பல்வேறு திசைகளுக்கும் எஸ்எல்லெத்தின் பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது. 21 வருட அரச சேவையினை முடித்துக்கொண்ட எஸ்செல்லம் 1990.12.31இல் ஓய்வு பெறுகின்றார்.மட்டக்களப்பு மாவடத்தில் வேலை செய்யமுடியாத அச்சுறுத்தல்கள் குறிப்பாக விடுதலைப்புலிகளின் கெடுபிடிகள் மேலோங்கியிருந்த காலத்தில்தான் அவர் மன ஓப்புதலின்றி வேலைக்கு ஓய்வு கொடுக்கின்றார்.
== இலக்கிய வாழ்க்கை ==
மட்டக்களப்பு வாசிகசாலை மூலம் இலக்கிய வாசிப்பில் ஈடுபட்டார். 1962-ல் ராதா சஞ்சிகையில் ”நெஞ்சின் நினைவினிலே” என்ற முதல் சிறுகதை வெளியானது. ஓவியர் ரமணியின் கை வண்ணத்தில் ஓடையூர் எஸ்.எல்.ஹனீபா என்ற பெயரில்  பிரசுரம் பெற்ற அக்கதை ஒரு காதல் கதை. அதன் பின்னர் இன்சான், இளம்பிறை வீரகேசரி என அவர் கதைகளை எழுதுகின்றார். பணத்திரை, அவள் அல்லவோ அன்னை ஆகிய கதைகள் ராதாவில் பிரசுரம் பெற்றன. சன்மார்க்கம், ஊக்கு, ஆத்மாவின் ராகங்கள் போன்ற கதைகள் இன்சானில் பிரசுரம் பெற்றன. 1970ம் ஆண்டு இளம்பிறையில் வேலி, குளிர்கன்று உட்பட நான்கு சிறுகதைகள் பிரசுரம் பெறுகின்றது. 50 வருட எழுத்தூழியத்தில் சுமார் 50 கதைகள்தான் எழுதியிருக்கின்றார். அதில் சில கதைகள் இரு தொகுதிகளாக மக்கத்துச்சால்வை 1992, அவளும் ஒரு பாற்கடல் - 2007) பிரசுரம் பெற்றிருக்கின்றன. சில கதைகளை பத்திரப்படுத்த முடியவில்லை. 
1992ஆனி மாதத்தில்மக்கத்துச்சால்வை தொகுதி வெளிவருகின்றது. அதே ஆண்டில் அந்த தொகுதிக்கு தமிழ்நாடு கோவை லில்லி தேவசிகாமணி விருது கிடைக்கின்றது. அங்குதான் ராஜம் கிருஷ்ணன், சங்கர நாராயணன், வண்ணதாசன், ஊசு.ரவீந்திரன், சுப்ர பாரதி மணியன், முஊளு .அருணாசலம், தஞ்சை பிரகாஷ், ஆ.விஸ்வநாதன் போன்ற இலக்கிய அளுமைகளை சந்திக்கின்றார். தஞ்சை  பிரகாஷும் அவர் நண்பர்களும் தஞ்சை நகரத்துக்கு அழைத்துச்சென்று ராஜ ராஜ சோழன் கோயிலின் கோபுரத்து நிழலில் அமர வைத்து அவரை கதை சொல்லக் கேட்கின்றனர். ஜானகி ராமன் தஞ்சைக்கு வந்தால் இந்ந நிழலில்தான் உட்கார்ந்து கதை சொல்வார். அதே இடத்துல உங்களையும் இருத்தி வைத்து கதை கேட்கப்போகிறோம் என்றவுடன் எனக்கு தேகமே புல்லரித்து விட்டது.ஜானகி ராமன் உட்கார்ந்த இடத்தில் நாம் அமர்வது தலையில் கிரீடம் சூடிக்கொண்ட உணர்வு மேலிட்டதாக எஸ்எல்லெம் அந்த நினைவுகளை மீட்டிக்கொள்கின்றார்.
 
1992 இல் ஆனந்தன் என்பவர் தனியார் பாடத்திட்ட தமிழ்மொழித்தொகுப்பில் மக்கத்துச்சால்வை சிறுகதையை இணைத்துக் கொள்கின்றார். 1994 இல் சந்திரிகா அரசாங்கத்தில் மக்கத்துசால்வை தொகுதி சிறந்த சிறுகதைத்தொகுதிக்கான இலங்கை சாகித்ய மண்டல பரிசிசைப்பெறுகின்றது. அதே ஆண்டில் அரச பாடத்திட்டத்தில் க.பொ.சாதாரண தரவகுப்பு மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத்தொகுப்பில் சேர்க்கப்படுகிறது.15 ஆண்டுகாலம் அந்தச்சிறுகதை பாடத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மக்கத்துச்சால்வை தொகுதியுள்ள சிறுகதைகள் உள்ளிட்ட பிற்காலத்தில் எழுதிய சில கதைகளையும் தொகுத்து அவளும் ஒரு பாற்கடல் தொகுதி டிசம்பர் 2007ல் காலச்சுவடு பதிப்பகத்தினரால்  வெளியிட்டப்பட்டது
எஸ்எல்லெத்தின் இலக்கியப்பணிகளுக்காக 2000 ம்ஆண்டு கிழக்கு மாகாண ஆளுநர் விருது வழங்கப்படுகிறது.2005ம்ஆண்டு கலாபூசணம் கௌரவத்தை இலங்கை அரசால் பெறுகின்றார்.மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப்பேரவையின் விருது, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கலாசாரப்பேரவையின் விருது (2010) உள்ளிட்ட பல விருதுகளையும் அவர் பெற்றாலும் மக்கத்துச்சால்வை என்ற விருதே அவரளவில் மகோன்னதமானது.
எஸஎல்லெம் சிறந்த மேடைப்பேச்சாளர்.கேட்போர் செவிகளில் கருத்தினையும் ஹாஷ்யத்தினையும் ஒரு சேர குழைத்துக்கொடுப்பவர். 1965ம்ஆண்டு ஆயுஊ றகுமானின் அரசியல் மேடையில்  ஏறுகின்றார். இதுதான் அவரின்  அரசியல் கன்னி மேடை. சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆதரவாக அன்றைய கன்னிப்பேச்சு அவர் பிற்காலத்தில் அரசியல் வாழ்வில் தடம்பதிக்க முத்திரையிட்டது.
1963 இல் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளையொன்றினை கல்குடா பிரதேசத்தில் நிறுவுகின்றார். இளமையில் இடதுசாரி அரசியலில் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அவர் அக்கட்சியின் கொள்கைத்திட்டங்களில் ஈர்க்கபட்டு ளுடுpயில் இணைந்து பணி செய்ததாக குறிப்பிடுகின்றார். அந்த அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் மஹ்மூத் அவர்களின் கல்வித் திட்டமும் எஸ்எல்லெத்திற்குப் பிடித்துப் போகவே மக்களுக்கு எதேனும் இக்கட்சியினால் நலவுகள் நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. எனவேதான் சிறீமா பண்டாரநாயக்க அம்மையாரின் பொதுக்கூட்டத்தில் அவர் மேடையில் ஏறி உரையாற்றினார் என்பதற்காக அக்காலத்து ஊர்த்தலைமைகளால் முகத்தில் எச்சிலால் அபிசேகம் செய்யப்பட்டார்.
1969 இல் தொழில் நிமித்தம் அக்கரைப்பற்றுக்கு சென்ற தருணம்தான் ஆர்ஆ.அஸ்ரப் அவர்களின் அறிமுகம் கிடைக்கின்றது. 1970இல் காத்ததான்குடி மண்ணிலிருந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உதயமாகின்றது. அஸ்ரப் ,சேகு இஸ்;ஸதீன் இவர்களுக்கு அடுத்த நிலையில் எஸ்செல்லம் முதன்மை பெறுகின்றார். கட்சியின் செல்வாக்கு மிகு போசகராக அவர் தலையெடுத்த காலம் 1988இல் மாகாண சபை தேர்தல் வருகின்றது.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 1989இல் வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்படுகின்றார். சுமார் ஆறுமாத காலம் ஓடிய மாகாண சiபின் உறுப்பினராக அவர் பல சேவைகளை இந்த சமூகத்திற்கு செய்திருக்கின்றார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த வை.அஹமத்தின் உதவியுடன் மாகாண கல்விப்பணிப்பாளரின் பூரண ஒத்துழைப்புடன் மாவடிச்சேனை,கேணி நகர்,மாஞ்சோலை ஆகிய பிரதேசங்களில் ஆரம்ப பாடசாலைகளையும் ஆரம்பித்து வைத்தார்.ஓட்டமாவடி பாதிமா பாளிகா பெண்கள் பாடசாலையை தனியாக ஆரம்பிப்பதில் பெரும்பங்கு வகித்தார்.
ஓட்டமாவடி பல நோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில் இயங்கிக்கொண்டிருந்த தாய் சேய் பராமரிப்பு நிலையத்தினையும் பெற்றுக்கொடுத்த பெருமையும் எஸ்செல்லத்தையே சாரும்
அத்துடன் ஏறாவூர் நகரில் தொழிலற்ற நான்கு இளைஞர்களுக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க மேற்பார்வை அதிகாரி நியமனங்களையும் பெற்றுக்கொடுத்ததுடன்,ஏறாவூர் அல்முனீரா வித்தியாலயத்தில் க.பொ.த.உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான அனுமதியையும் பெற்றுக்கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தனது ஆயுளில் இந்த மனித சமூகத்திற்கு தன்னாலியன்ற தாவரவியல், விலங்கியல் தொடர்பான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் இலவசமாகவே வழங்கி வருகின்றார்.முகநூலில் அவர் தரும் தகவல்கள் வரலாற்றுக் குறிப்புகள்  காலத்தால் அழியாமல் பத்திரப்படுத்த வேண்டியவை. எஸ்செல்லம் நமது காலத்தின் நடமாடும் கலைக்களஞ்சியம் எனில் மிகையல்ல.
== நூல்கள் பட்டியல் ==
== உசாத்துணை ==

Revision as of 07:42, 21 July 2022

எஸ்.எல்.எம். ஹனீபா (ஏப்ரல் 1, 1946) ஈழத்து எழுத்தாளர், கால்நடை அபிவிருத்தி போதனையாசிரியர், அரசியல்வாதி.

பிறப்பு, கல்வி

தம்பி சாய்வு சின்னலெவ்வைக்கும், முகைதீன் பாவா கலந்தர் உம்மாவுக்கும் மூன்றாவது குழந்தையாக இலங்கை, மீராவோடை மண்ணின் சட்டிப்பானைத்தெருவில் எஸ்.எல்.எம். ஹனீபா பிறந்தார். தந்தை ஆற்றுக்குப்போய் மீன் பிடித்து விற்கும் தொழில் செய்தார். 1960-ல் தந்தை சின்னலெவ்வை மூன்று கிராமங்களுக்குமான (மீராவோடை, ஓட்டமாவடி, வாழைச்சேனை) முஸ்லிம் விவாகப்பதிவாளராக நியமிக்கப்பட்டார். எஸ்.எல்.எம். ஹனீபாவின் உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். தனது ஆரம்பக்கல்வியை 1951ம்ஆண்டு மீராவோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கற்றார். ஹிதாயதுல்லாஹ் மௌலவியிடம் இஸ்லாம் சமயப்பாடங்களைக் கற்றார். துரைராஜா, பொண்ணுசாமி, கிருஷ்ணப்பிள்ளை போன்ற நண்பர்கள் மூலம் பாடல்கள் கற்றார். ஐந்தாம் ஆண்டு ஓட்டமாவடி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையொன் பயின்றார். அங்கு கட்டாயப்பாடமாக சங்கீதமுதம், பரதநாட்டியமும் கற்றார். 1966,1967ம் ஆண்டுகளில் கிளிநொச்சி விவசாயப்பாடசாலையில் இணைந்து கல்வி கற்றார்.

தனிவாழ்க்கை

விவசாயப்பாடசாலையில் பயின்ற பின் மலேரியா பிரிவில் வேலை கிடைத்தது. (அன்டி மலேரியா சூப்பவைசர்). அவர் காலத்தில்தான் கல்குடா தொகுதியில் மூன்று கிராமங்களுக்கும் முழுமையாக மலேரியா ஒழிப்பு எண்ணெய் அடிக்கப்பட்டது. 1968-ல் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியராக பேராதனை பல்கலைக்கழகத்தில் இணைந்தார். ஜனவரி 3, 1969-ல் அக்கரைப்பற்று நகரில் விவசாய அபிவிருத்தி போதனாசிரியராக(யுநுறு) பணி செய்தார்.

1976 முதல் 1978 வரை கண்டி வத்தேகம என்ற இடத்திலும், 1978-ல் வாழைச்சேனையிலும் பணி செய்தார். 1982 வரை கெகிராவ என்ற இடத்திற்கு இடமாற்றப்பட்டார். 1982-ல் ஆண்டு புத்தளத்திலும் அங்கு ஜவாத் மரைக்கார் போன்றவர்களின் நட்பு கிடைக்கின்றது. மீளவும் 1984,1985களில் வாழைச்சேனைக்கு இடம்மாற்றம் கிடைக்கின்றது. 1986இல் மட்டக்களப்பு மாற்றலாகிச்செல்கின்றார். 1987,1988களில் மீண்டும் பொலனறுவைக்கு 1988இல் மீண்டும் வாழைச்சேனைக்கு இடம்மாற்றம் பெற்று வருகின்றார்.

நவம்பர் 26, 1968-ல் அஹமது உசன் முஹம்மது பாத்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகள்கள் ஜனூபா, மாஜிதா. மகன் நௌபல். 1970-ல் ஆண்டு வெளிக்கந்தையிலும், 1971-75 வரை திருக்கோணமடுவிலும் வேலை செய்தார்.

குறுந்தூர ஓட்டக்காரர். சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற அகில இலங்கை மட்டத்திலான போட்டியில் மூன்றாம் இடத்தினை எஸ்செல்லம் என்ற வீரர் பெறுகின்றார். பிறந்த மண்ணிற்கு தேசிய ரீதியில் புகழினை ஈட்டிக்கொடுக்கின்றார். 200 மீற்றர் ஓட்டத்தில் அவரை முந்திச்செல்ல மாகாணத்தில் எந்த ஜாம்பவானும் இருக்கவில்லை. 62,63 களில் ஒப்பற்ற ஓட்ட வீரராக அவர் ஜொலித்திருப்பதனால்தான் இன்று வரை ஆரோக்கிய வாழ்வு வாழ்கின்றார்.

அரசியல் வாழ்க்கை

1988 இல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வரை நாட்டின் பல்வேறு திசைகளுக்கும் எஸ்எல்லெத்தின் பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது. 21 வருட அரச சேவையினை முடித்துக்கொண்ட எஸ்செல்லம் 1990.12.31இல் ஓய்வு பெறுகின்றார்.மட்டக்களப்பு மாவடத்தில் வேலை செய்யமுடியாத அச்சுறுத்தல்கள் குறிப்பாக விடுதலைப்புலிகளின் கெடுபிடிகள் மேலோங்கியிருந்த காலத்தில்தான் அவர் மன ஓப்புதலின்றி வேலைக்கு ஓய்வு கொடுக்கின்றார்.

இலக்கிய வாழ்க்கை

மட்டக்களப்பு வாசிகசாலை மூலம் இலக்கிய வாசிப்பில் ஈடுபட்டார். 1962-ல் ராதா சஞ்சிகையில் ”நெஞ்சின் நினைவினிலே” என்ற முதல் சிறுகதை வெளியானது. ஓவியர் ரமணியின் கை வண்ணத்தில் ஓடையூர் எஸ்.எல்.ஹனீபா என்ற பெயரில் பிரசுரம் பெற்ற அக்கதை ஒரு காதல் கதை. அதன் பின்னர் இன்சான், இளம்பிறை வீரகேசரி என அவர் கதைகளை எழுதுகின்றார். பணத்திரை, அவள் அல்லவோ அன்னை ஆகிய கதைகள் ராதாவில் பிரசுரம் பெற்றன. சன்மார்க்கம், ஊக்கு, ஆத்மாவின் ராகங்கள் போன்ற கதைகள் இன்சானில் பிரசுரம் பெற்றன. 1970ம் ஆண்டு இளம்பிறையில் வேலி, குளிர்கன்று உட்பட நான்கு சிறுகதைகள் பிரசுரம் பெறுகின்றது. 50 வருட எழுத்தூழியத்தில் சுமார் 50 கதைகள்தான் எழுதியிருக்கின்றார். அதில் சில கதைகள் இரு தொகுதிகளாக மக்கத்துச்சால்வை 1992, அவளும் ஒரு பாற்கடல் - 2007) பிரசுரம் பெற்றிருக்கின்றன. சில கதைகளை பத்திரப்படுத்த முடியவில்லை.

1992ஆனி மாதத்தில்மக்கத்துச்சால்வை தொகுதி வெளிவருகின்றது. அதே ஆண்டில் அந்த தொகுதிக்கு தமிழ்நாடு கோவை லில்லி தேவசிகாமணி விருது கிடைக்கின்றது. அங்குதான் ராஜம் கிருஷ்ணன், சங்கர நாராயணன், வண்ணதாசன், ஊசு.ரவீந்திரன், சுப்ர பாரதி மணியன், முஊளு .அருணாசலம், தஞ்சை பிரகாஷ், ஆ.விஸ்வநாதன் போன்ற இலக்கிய அளுமைகளை சந்திக்கின்றார். தஞ்சை பிரகாஷும் அவர் நண்பர்களும் தஞ்சை நகரத்துக்கு அழைத்துச்சென்று ராஜ ராஜ சோழன் கோயிலின் கோபுரத்து நிழலில் அமர வைத்து அவரை கதை சொல்லக் கேட்கின்றனர். ஜானகி ராமன் தஞ்சைக்கு வந்தால் இந்ந நிழலில்தான் உட்கார்ந்து கதை சொல்வார். அதே இடத்துல உங்களையும் இருத்தி வைத்து கதை கேட்கப்போகிறோம் என்றவுடன் எனக்கு தேகமே புல்லரித்து விட்டது.ஜானகி ராமன் உட்கார்ந்த இடத்தில் நாம் அமர்வது தலையில் கிரீடம் சூடிக்கொண்ட உணர்வு மேலிட்டதாக எஸ்எல்லெம் அந்த நினைவுகளை மீட்டிக்கொள்கின்றார்.

1992 இல் ஆனந்தன் என்பவர் தனியார் பாடத்திட்ட தமிழ்மொழித்தொகுப்பில் மக்கத்துச்சால்வை சிறுகதையை இணைத்துக் கொள்கின்றார். 1994 இல் சந்திரிகா அரசாங்கத்தில் மக்கத்துசால்வை தொகுதி சிறந்த சிறுகதைத்தொகுதிக்கான இலங்கை சாகித்ய மண்டல பரிசிசைப்பெறுகின்றது. அதே ஆண்டில் அரச பாடத்திட்டத்தில் க.பொ.சாதாரண தரவகுப்பு மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத்தொகுப்பில் சேர்க்கப்படுகிறது.15 ஆண்டுகாலம் அந்தச்சிறுகதை பாடத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மக்கத்துச்சால்வை தொகுதியுள்ள சிறுகதைகள் உள்ளிட்ட பிற்காலத்தில் எழுதிய சில கதைகளையும் தொகுத்து அவளும் ஒரு பாற்கடல் தொகுதி டிசம்பர் 2007ல் காலச்சுவடு பதிப்பகத்தினரால் வெளியிட்டப்பட்டது எஸ்எல்லெத்தின் இலக்கியப்பணிகளுக்காக 2000 ம்ஆண்டு கிழக்கு மாகாண ஆளுநர் விருது வழங்கப்படுகிறது.2005ம்ஆண்டு கலாபூசணம் கௌரவத்தை இலங்கை அரசால் பெறுகின்றார்.மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப்பேரவையின் விருது, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கலாசாரப்பேரவையின் விருது (2010) உள்ளிட்ட பல விருதுகளையும் அவர் பெற்றாலும் மக்கத்துச்சால்வை என்ற விருதே அவரளவில் மகோன்னதமானது. எஸஎல்லெம் சிறந்த மேடைப்பேச்சாளர்.கேட்போர் செவிகளில் கருத்தினையும் ஹாஷ்யத்தினையும் ஒரு சேர குழைத்துக்கொடுப்பவர். 1965ம்ஆண்டு ஆயுஊ றகுமானின் அரசியல் மேடையில் ஏறுகின்றார். இதுதான் அவரின் அரசியல் கன்னி மேடை. சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆதரவாக அன்றைய கன்னிப்பேச்சு அவர் பிற்காலத்தில் அரசியல் வாழ்வில் தடம்பதிக்க முத்திரையிட்டது. 1963 இல் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளையொன்றினை கல்குடா பிரதேசத்தில் நிறுவுகின்றார். இளமையில் இடதுசாரி அரசியலில் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அவர் அக்கட்சியின் கொள்கைத்திட்டங்களில் ஈர்க்கபட்டு ளுடுpயில் இணைந்து பணி செய்ததாக குறிப்பிடுகின்றார். அந்த அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் மஹ்மூத் அவர்களின் கல்வித் திட்டமும் எஸ்எல்லெத்திற்குப் பிடித்துப் போகவே மக்களுக்கு எதேனும் இக்கட்சியினால் நலவுகள் நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. எனவேதான் சிறீமா பண்டாரநாயக்க அம்மையாரின் பொதுக்கூட்டத்தில் அவர் மேடையில் ஏறி உரையாற்றினார் என்பதற்காக அக்காலத்து ஊர்த்தலைமைகளால் முகத்தில் எச்சிலால் அபிசேகம் செய்யப்பட்டார். 1969 இல் தொழில் நிமித்தம் அக்கரைப்பற்றுக்கு சென்ற தருணம்தான் ஆர்ஆ.அஸ்ரப் அவர்களின் அறிமுகம் கிடைக்கின்றது. 1970இல் காத்ததான்குடி மண்ணிலிருந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உதயமாகின்றது. அஸ்ரப் ,சேகு இஸ்;ஸதீன் இவர்களுக்கு அடுத்த நிலையில் எஸ்செல்லம் முதன்மை பெறுகின்றார். கட்சியின் செல்வாக்கு மிகு போசகராக அவர் தலையெடுத்த காலம் 1988இல் மாகாண சபை தேர்தல் வருகின்றது.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 1989இல் வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்படுகின்றார். சுமார் ஆறுமாத காலம் ஓடிய மாகாண சiபின் உறுப்பினராக அவர் பல சேவைகளை இந்த சமூகத்திற்கு செய்திருக்கின்றார். 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த வை.அஹமத்தின் உதவியுடன் மாகாண கல்விப்பணிப்பாளரின் பூரண ஒத்துழைப்புடன் மாவடிச்சேனை,கேணி நகர்,மாஞ்சோலை ஆகிய பிரதேசங்களில் ஆரம்ப பாடசாலைகளையும் ஆரம்பித்து வைத்தார்.ஓட்டமாவடி பாதிமா பாளிகா பெண்கள் பாடசாலையை தனியாக ஆரம்பிப்பதில் பெரும்பங்கு வகித்தார். ஓட்டமாவடி பல நோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில் இயங்கிக்கொண்டிருந்த தாய் சேய் பராமரிப்பு நிலையத்தினையும் பெற்றுக்கொடுத்த பெருமையும் எஸ்செல்லத்தையே சாரும் அத்துடன் ஏறாவூர் நகரில் தொழிலற்ற நான்கு இளைஞர்களுக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க மேற்பார்வை அதிகாரி நியமனங்களையும் பெற்றுக்கொடுத்ததுடன்,ஏறாவூர் அல்முனீரா வித்தியாலயத்தில் க.பொ.த.உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான அனுமதியையும் பெற்றுக்கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தனது ஆயுளில் இந்த மனித சமூகத்திற்கு தன்னாலியன்ற தாவரவியல், விலங்கியல் தொடர்பான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் இலவசமாகவே வழங்கி வருகின்றார்.முகநூலில் அவர் தரும் தகவல்கள் வரலாற்றுக் குறிப்புகள் காலத்தால் அழியாமல் பத்திரப்படுத்த வேண்டியவை. எஸ்செல்லம் நமது காலத்தின் நடமாடும் கலைக்களஞ்சியம் எனில் மிகையல்ல.

நூல்கள் பட்டியல்

உசாத்துணை