being created

எழிலவன்

From Tamil Wiki
Revision as of 23:54, 7 March 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கவிஞர் எழிலவன்

எழிலவன் (பிறப்பு: ஜூன் 15, 1949) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நாட்டுப்புறப் பண்பாட்டு ஆய்வாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆய்வு நூல்கள் பலவற்றை எழுதினார்.

பிறப்பு, கல்வி

எழிலவன், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரில், ஜூன் 15, 1949 அன்று, சி. நாராயணசாமி கச்சிராயர் - ரோகிணி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். தொடக்கக் கல்வியைக் காடாம்புலியூரில் உள்ள பள்ளியில் படித்தார். உயர்நிலைக் கல்வியைப் பண்ருட்டியில் உள்ள மாதிரிப் பள்ளியில் பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புகுமுக வகுப்பு படித்தார். தொடர்ந்து பயின்று இளங்கலை பட்டம் பெற்றார். ஆங்கில இலக்கியம், மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

எழிலவன், பல்வேறு கல்வி நிறுவனங்களில் அதிகாரியாகவும், பேராசிரியராகவும் பணியாற்றி 2007-ல் பணி ஓய்வு பெற்றார். மணமானவர்.

இலக்கிய வாழ்க்கை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.